Tuesday, May 22, 2018

BAYANDHU KARTHARIN PAATHAI LYRICS

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்யவான்.

அனுபல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.

சரணங்கள்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,
தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.

2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை.

NATHA NATHA INTHA JEEVIYAM LYRICS


நாதா.. நாதா.. நாதா…
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் நிறைந்ததோ
1. காரிருள் சூழும் நேரமதில் – என்
கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
ஆதரவே என் தேற்றரவாளனே
உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா – நாதா
2. நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
என் கன்மைலையே என் அடைக்கலமே
தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா – நாதா

NATHA UM THIRUKARATHIL LYRICS


நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்
1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2
2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

NIGARE ILLATHA SARVESA LYRICS


நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்
பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே

NADANTHU VANTHA PATHAIGAL ELLAM LYRICS


நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்
நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த
நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்
நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்
நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
1. எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே
யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே
முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா
இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
2. அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா
அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா
உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்
உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்
உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
3. உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை
உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை
உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்
உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்
நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்
ஓடிவரும் தேவன்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

NALAYA THINATHAI KURITHU


நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

NADU KULIR KALAM LYRICS


1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே
2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே
3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே
4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்
5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

KARTHAR MEL BARATHAI LYRICS


கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்


1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்


2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்


3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்


4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்


5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்


6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

KARTHAR KARAM EN MALAGA LYRICS


கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க


1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்


2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்


3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே


4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்


5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்


6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க

KARTHAR ENAKAI YAVAIYUM LYRICS


கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் –
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை – கர்த்தர் 
2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே – கர்த்தர் 

KARTHAR EN BELANUM LYRICS


கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா – கர்த்தர்
2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்

JEEVA THANNEERAE AAVIYANAVARE LYRICS


ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக
1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2) வேண்டாமா
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்

JEEVANULLA NAATKALELLAAM LYRICS


ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
அவருக்கு கொடுத்திடுவோம் (2)
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம் (2) – ஜீவனுள்ள 
1. இயேசுவும் தனக்காய் வாழாமல் – அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்கு தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள 
2. ஊழியம் செய்வது பாக்கியமே – அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் – ஜீவனுள்ள 
3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன – நான்
நலமாயிருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா – ஜீவனுள்ள 
4. உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள

IDUKAMANA VASAL VALIYE LYRICS


இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்
1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..
பரலோகம் செல்லும் பாதை குறுகலானது..
2. நாம் காணும் இந்த உலகம்
ஒரு நாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்
3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு
4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது

IDHAYAM KOZHUNDHAI ERIYUM PODHU LYRICS


இதயம் கொழுந்தாய் எரியும் போது
இயேசு என்னை இயக்கிடுவாரே
இல்லம் அன்பாய் நிறையும் போது
உன்னத தேவன் பேசிடுவாரே
எலியா போல எழும்பும் போது
தேசம் இன்றே மாறியே போகும்
கலங்கும் மக்கள் கதறும் போது
கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே
இயேசு மட்டும் தெய்வம் என்று
உலக மக்கள் அறிந்திட வேண்டும்
பாவம் சாபம் யாவும் நீங்க
பரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்
உம்மைப் போல நல்ல தெய்வம்
யாரும் இல்லை என்றும் இல்லை
உமக்கு ஒப்பாய் தேவனில்லை
கர்த்தர் நீரே உன்மை தேவன்
வானம் பூமி மாறினாலும்
தேவ வார்த்தை மாறுவதில்லை
பாதை எல்லாம் வெளிச்சமாகும்
வழிகள் எல்லாம் தீபங்களாகும்
வேதம் ஒன்றே வாழ வைக்கும்
வேதம் உன்னை உயர வைக்கும்
வல்லமை இறங்கும் வல்லமை இறங்கும்
பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்

IDAIVIDA NANDRI UMAKKU THANE LYRICS


இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…
2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா
3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா
4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா
6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

ENTHAN YESU KAI VIDAMATTAR LYRICS


எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலூயா – 8
1. நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்
2. கடந்ததை மறக்கின்றேன்
கண்முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன்
3. சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்
4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

EPPADI NAAN PAADUVEN LYRICS


எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை
1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா
5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்

EPPADI PAADUVEN NAAN LYRICS


எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2
1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்

EZHUNDHIDU EZHUNDHIDU TRUTHI BALI LYRICS


பூமியும் அதின் நிறைவும்,
உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
அநாதி கதவுகளே, உயருங்கள்;
மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்
யார் இந்த மகிமையின் ராஜா?
அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்;
அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
அநாதி கதவுகளே, உயருங்கள்;
மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்
யார் இந்த மகிமையின் ராஜா?
அவர் சேனைகளின் கர்த்தரானவர்;
அவரே மகிமையின் ராஜா
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை
நீ துதி செய்
நோய்களையும் குணமாக்கினவரை
நீ துதி செய்
மரணத்தின் கட்டுகள் உடைத்தவரை
நீ துதி செய்
உன்னை அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
நீ துதி செய்
நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை
நீ துதி செய்
குறைகளையெல்லாம் போக்கினவரை
நீ துதி செய்
கவலைகள் கண்ணீர் துடைத்தவரை
நீ துதி செய்
உன் தனிமையிலே துணை நின்றவரை
நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
நம் இராஜன் வந்தாரே
இயேசு இராஜன் வந்தாரே (2)
சிறகுகளால் உன்னை அனைத்தவரை
நீ துதி செய்
வழிகளிலெல்லாம் காப்பவரை
நீ துதி செய்
கோட்டையும் அரணுமானவரை
நீ துதி செய்
தம் கரங்களில் உன்னை தாங்கினவரை
நீ துதி செய்
பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை
துதி செய்
போராட்டங்களெல்லாம் நீக்கினவரை
நீ துதி செய்
தேற்றரவாளனை அனுப்பினவரை
நீ துதி செய்
தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை
நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
நம் இராஜன் வந்தாரே
இயேசு இராஜன் வந்தாரே (2)
துதி செய் அவரை

துதி செய் (12)

JEHOVAH NISSI YETRI PADUVOM LYRICS


யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)
1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்
2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா – நம்
3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்

JEYITHAARE JEYITHAARE YESU LYRICS


ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் 
நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தை குளைத்தாரே
சத்துருவின் கையிலிருந்து
நம்மை விடுதலையாக்கினாரே (2)
ஏ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே
எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்க பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்துவிட்டார் (2)
ஓ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே
ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின் மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே
ஓ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே
மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே (2)
ஏ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

KANGALLAI PATHIYA VAIPOM LYRICS


கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்


1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்


2. இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்


3. தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
சோர்ந்து போகமாட்டோம்


4. ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் -நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு


5. மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு

SETRIL IRUNTHU THOOKINAR LYRICS

சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்

ANTHO KALVARIYIL ARUMAI LYRICS


அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்
1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ
2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ
3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ
4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ

ANBURUVAI VANTHA ENGAL LYRICS


அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
எங்கள் அன்பின் பாலனே
எங்கள் தெய்வ பாலனே
1. வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
பணிந்த பாலனே
2. ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
மகிமைப் பாலனே
3. தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
இயேசு பாலனே

EN UYIRE ANDAVARAI LYRICS


என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே


1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்


2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்


3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்


4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்


5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார்


6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே


7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல


8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை