Wednesday, October 23, 2019

PARATHILULLA ENGAL PITHAVE LYRICS

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற

நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை

மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை
நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே

காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே

PAVI EN MEETHU EN INTHA ANBU

பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே - 2

தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே - 2

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா - 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா 
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா - 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா 

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா - 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2

ENTHAN VANJAI NEERALLO LYRICS

எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மை நினைத்து பாடுவேன்
உம்மை துதித்து என்றும் போற்றி
உந்தன் நாமம் உயர்த்துவேன்

ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமாப்போல
என் ஆத்துமாவும் தேவா
உம்மை வாஞ்சித்தே கதறுதே

நீரே எந்தன் கன்மலையும்
கோட்டையும் அரனுமானவர்
என் சந்தோஷமே என் சமாதானமே
என் நித்திய நம்பிக்கையே

பரலோகில் உம்மை அல்லால்
எனக்கு யாருண்டு இயேசுவே
இப்பூவினில் உம்மையன்றி
விருப்பம் வேறு ஏதைய்யா

பாசமிகு அண்ணல் நீரே
நித்திய ஜீவனில் காரணரே
ஜீவன் தந்து என்னை மீட்டவரே
உந்தனை தொழுகிறேன்

பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்
நிறைந்த தேவனே
வழுவாதென்னை காத்து
கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே

NAN KALANGUMPOTHELLAM ENN KANNEER LYRICS

நான் கலங்கும்போதெல்லாம்
என் கண்ணீர் துடைப்பவர்
நான் உடைந்தபோதெல்லாம்
என் காயம் ஆற்றுவார் - (2)
கரை தெரியாத கடலினிலே
நான் மூழ்கி தவிக்கையிலே - 2
கரை சேர்ப்பேன் என்றவரே
கரம் பிடித்த நாயகரே - (2)
கரம் பிடித்த நாயகரே - 2 - நான் கலங்கும்

நிச்சயமாகவே முடிவு உண்டு
எந்தன் படகில் இயேசு உண்டு - (2)
பாடுகள் எல்லாம் பாடல்களாக
மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார் - (2) - கரை தெரியாத

KUYAVANAE NEER YENNAI LYRICS

குயவனே நீர் என்னைத் தொடனுமே
நீங்க தொடலனா நான் வெறும் களிமண்ணே
நீங்க என்னைத் தொடலனா
நான் வெறும் மண்ணுதானே
நீங்க என்னைத் தொடலனா
நான் காளி மண்ணுதானே
தொட்டீரே கையில் எடுத்தீரே
தந்தீரே உம் ஜீவன் தந்தீரே
தொட்டீரே கையில் எடுத்தீரே
தந்தீரே உம் சாயல் தந்தீரே

1. நீங்க என்னை பார்க்கலனா
பாழாக போயிருப்பேன்
உங்கப்பார்வை படலனா
பட்டுதான் போயிருப்பேன் - 2
கண்டீரே என்னையும் கண்டீரே
உங்க கண்ணுக்குள்ள என்னையும் வைத்தீரே - 2
- குயவனே நீர்

2.  யாரும் இல்லை என்று சொல்லி
தனிமையில் அழுகையில்
தகப்பன் நீர் வந்தீரே
உயர்த்தி வைத்தீரே - 2
வந்தீரே கூடவே வந்தீரே
அதிசயமாய் நடத்தி வந்தீரே - 2
- குயவனே நீர்

INNUM NAAN ALIYALA TAMIL LYRICS

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன்? ஏன்? ஏன்?
போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல
ஆனாலும் இருக்குறேனே
ஏன்? ஏன்? ஏன்?
கிருபை கிருபை கிருபை கிருபை - எல்லாம்
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்தில்ல எல்லாம் கிருபை

படிக்கல உயரல பட்டத்தாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்?
நிற்கிறேன் நிர்மூலமாகமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்?


அற்புதங்கள் நடக்குது
அதிசயங்கள் நடக்குது
வியாதியெல்லாம் மாறினது
ஏன்? ஏன்? ஏன்?
பாவமெல்லாம் மறைந்தது
சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது
ஏன்? ஏன்? ஏன்?

UMAKKOPPANAVAR YAAR ULAGIL LYRICS

உமக்கொப்பானவர் யார் உலகில் 
உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யாருமில்லை
உமக்கொப்பானவர் எவருமில்லை
உமக்கொப்பானவர் உலகிலில்லை
உமக்கொப்பானவர் யார் யார் யார்

1.மரித்த லாசருவை எழுப்பியே ஜீவனைக் கொடுத்தீரே
பாவத்தில் மரித்த என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீரே
- உமக்கொப்பானவர்

2.சோதிக்க வந்தவனை வார்தையால் விரட்டி அடித்தீரே
சோதனை வேளைகளில் சாதனை செய்து வாழ்ந்தீரே
- உமக்கொப்பானவர்

3.பதினெட்டு வருஷமுள்ள கூனியை நிமிரச் சேதீரே
பார்க்க முடியாத குருடனை பார்க்கச் சேதீரே
- உமக்கொப்பானவர்

AARATHANAI AARATHANAI VALLAVARE NALLAVARE

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்

1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை

2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே
உமக்கே ஆராதனை

3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தவரே
உமக்கே ஆராதனை

UMMAI NESIKKA YEN ORU IDYAM

உம்மை நேசிக்க என் ஓர் இதயம்
போதாது இயேசுவே, போதாது இயேசுவே - 2
ஓராயிரம் இதயம் இருந்தாலும்
அதை உமக்கே நான் தருவேன் -2
உம் பேரன்பின் தியாகத்திற்கு - அது
போதாது என்றறிவேன் - 2


திருக்குள்ள கேடுள்ள இதயத்திலே
இடம்தான் கேட்டீரோ
அதை ஏன்தான் கேட்டீரோ
ஆயுள் சக்கரத்தை கொளுத்தும்
என் நாவிலே துதிதான் கேட்டீரோ
அதை ஏன்தான் கேட்டீரோ - 2
என் நினைவெல்லாம்
நீர் வேண்டும் இயேசுவே
என் வாழ்வெல்லாம் நீர் போதும் இயேசுவே
- உம்மை நேசிக்க...

பாரம் உள்ள பாடுள்ள வாழ்க்கையிலே
துணையாய் வந்தீரோ
உள்ளத்தில் இடம்தான் கேட்டீரோ - 2
பரலோகில் தூதர்கள் துதியுடன் காத்திருக்க
ஏன்தான் தெரிந்தீரோ
என் துதியில் பிரியம் கொண்டீரோ...
என் நினைவெல்லாம்
நீர் வேண்டும் இயேசுவே
என் வாழ்வெல்லாம் நீர் போதும் இயேசுவே...
- உம்மை நேசிக்க...

APPANU KOOPIDATHAN AASAI LYRICS

அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா
அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்
கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்
கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்

AVAR AZHAIPPAI ANUSARITHTHEN LYRICS

அவர் அழைப்பை அனுசரித்தேன்
அவர் அழைப்பை அனுசரித்தேன்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என்றும்
            
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
அவர் அழைப்புக் களிப்பேன் பதில்
காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்
-தொண்டு செய்வேன்

கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்
-தொண்டு செய்வேன்

துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்
-தொண்டு செய்வேன்

மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்
-தொண்டு செய்வேன்

அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்
-தொண்டு செய்வேன்