Wednesday, December 23, 2015

Paraloga Devana Ummai arathanai

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே

சரணங்கள்

1. மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர் --- உமது அன்பின்

2. யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் --- உமது அன்பின்

3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

Parisutha Devan Neere vallamai devan

பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும்

1. கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடுதே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் --- பரிசுத்த

2. உம்மை போல் தேவன் இல்லை
பூமியில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் --- பரிசுத்த

3. மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் --- பரிசுத்த

4. சத்திய பாதைகளில்
நித்தமும் நடந்திடவே
உத்தமர் தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம் --- பரிசுத்த

Parolaga Devane parakkiramam


பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே (2)
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை

2. யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)

4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)

Pithave Potri Kumaran Potri

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி - (4) 1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் - (2) --- பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் - (2) --- பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் - (2) --- பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் - (2) --- பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் - (2) --- பிதாவே

Pidha Kumaran Parisutha Aavi

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்

1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

Pudhiya Nalukul Ennai Nadathum


புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா --- புதிய

1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும் --- புது

2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா - (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) - (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) - (2) --- புது

3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க - (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) - (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) - (2) --- புது

Pesu Sabaiye Pesu

பேசு சபையே பேசு (4)

இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) --- பேசு

நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாகத் தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) --- பேசு

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் --- பேசு

ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் --- இது உலர்ந்த

ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

போற்று சபையே போற்று - இயேசுவை
போற்று சபையே போற்று --- பேசு

Yaar Ennai Kai Vitalum

யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்
கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இயேசு கைவிடவே மாட்டார்


1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் --- யார்

2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே --- யார்

3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே --- யார்

4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே --- யார்

YOSANAIYIL PERIYAVARE ARATHANAI ARATHANAI

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை

ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை

2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை

3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை

4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை

6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

LESANA KARIYAM UMAKU ADHU LYRICS

லேசான காரியம், உமக்கது லேசான காரியம் ( 2 )

அனுபல்லவி

பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

சரணங்கள்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் (2)
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்

3. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்

VANTHARULUM THOOYA AAVIYE


வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே

ஆட்கொள்ளும் தூய ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே

ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்திடுமே தூய ஆவியே

வழிகாட்டும் தூய ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே

Vaanamum Boomiyum Maridinum

வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல்ல தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையியென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ராகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே --- கல்வாரி

கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனே உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் --- கல்வாரி

கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார் --- கல்வாரி

வருகையின் நாள் நெருங்கிடுதே (2)
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் --- கல்வாரி

Vidhiyupum Arupimum May

1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ?

Vetkapattu Povathillai

வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்

இயேசு என்னோடு இருப்பதால்
இயேசு என்னோடு நடப்பதால்
இயேசு என்னோடு வசிப்பதால்
வெட்கப்பட்டுப் போவதில்லை

அல்லேலூயா (8)

Nandri Bali Peedam Kattuvom

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்

3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்

4. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

5. இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

6. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

7. எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால்
தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால்

8. குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்

9. இதய பெலவீனம் நீக்கினீரே
சுகர் வியாதிகள் போக்கினீரே
அல்சர் இல்லாமல் காத்தீரே
ஆஸ்மா முற்றிலும் நீக்கியதே

10. நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா
அணைக்கும் கணவனை தந்தீரய்யா
அன்பு மனைவியை தந்தீரய்யா

Nambikkai Nangooram naan nambum

நம்பிக்கை நங்கூரம், நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே - பரம
பரிசுத்த தேவனை, பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம் (2)

நம்பிக்கை நீர் தானே, நங்கூரம் நீர் தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே! (2) நீர்தானே

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம், ஆயிரம்
பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம், பஞ்சம்
பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம், மரண
இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

Nilai Illa Ulagam Idhu

நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு
நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே
மனதில் தோன்றும் வழியினில் சென்று
வேதனை அடையாதே
பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்
பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே
நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே
வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்
விரைவினில் வந்திடுமே
மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

Nan nirpatum nirmulamakatatum Deva

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே - 2

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் - 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே - உன் - 2

அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் - 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே - 2

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் - 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே - 2

Nan Edharkaga Pidikka Pattano

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் - நான்

பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் - நான்

1. பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்

2. நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்

3. நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்

Nandri Endru Solluvom

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

Nandri Niraindha Idhayathodu

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் --- நன்றி

1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ --- என்

2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் --- என்

3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே --- என்

Nandri Nandri Nandri Ayya


நன்றி நன்றி நன்றி ஐயா - (8)

யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே - (2)
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன்
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் --- நன்றி

யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் - (2)
வியாதிகள் எனக்கில்லையே - இனி
வியாதிகள் எனக்கில்லையே --- நன்றி

யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - (2)
தனியாக விடமாட்டீர் - என்னை
தனியாக விடமாட்டீர் --- நன்றி

நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே - (3)

NANDRI BALI NANDRI BALI LYRICS

நன்றி பலி, நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே - என்
அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே

Nan Nanagave Vandhurikeran


நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் --- நான்

2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் --- நான்

Naan Paada Varuveer Aiya

நான் பாட வருவீர் ஐயா
நான் போற்ற மகிழ்வீர் ஐயா (2)
என் வாழ்விலே வந்தீர் ஐயா
புது வாழ்வு தந்தீர் ஐயா (2)

1. தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே (2)
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே (2)

2. இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் (2)
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் (2)

3. மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாது (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உந்தன் வாக்குகள் மாறாதது (2)