Monday, April 21, 2025

Ovoru Manithanum En Nanban ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

 ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
என் சகோதரன் என் சகோதரன்

நோயில் தவிப்பவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
பாவத்தில் உழல்பவன் என் நண்பன்
சாபத்தில் வாழ்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன்
ஆதரவிழந்தவன் என் நண்பன்
வறுமையில் வாழ்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

சிறையில் வாழ்பவன் என் நண்பன்
தனிமையில் தவிப்பவன் என் சகோதரன்
ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்
ஊக்கமிழந்தவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

எந்த மதமானாலும் என் நண்பன்
எந்தக் குலமானாலும் சகோதரன்
எந்த நாட்டு மனிதராயினும் என் நண்பன்
எந்த மொழி பேசினாலும் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

Paadum Paadal Yesuvukkaga பாடும் பாடல் இயேசுவுக்காக

 பாடும் பாடல் இயேசுவுக்காக

பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

அழகென்றால் அவர் போல
யார் தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே

அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்

தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்

Paar Potrum Venthan பார்போற்றும் வேந்தன்

 பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து

பாலகனாக பிறந்தாரே

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே

Paavi Enmelae Kirubaiyai பாவி என் மேலே கிருபையாய்

 பாவி என் மேலே கிருபையாய் இருந்தருளும்

பாவத்தை பாராத சுத்தக் கண்ணனே

தாழ்மையுள்ள யாவருக்கும்
கிருபையை அள்ளித் தருபவரே
மார்பில் அறைந்து ஓடிவந்தேன்
மன்னித்து என்னை ஏற்றருளும்

வெறுமை எல்லாம் மாற்றிடுமே
வறுமை எல்லாம் நீக்கிடுமே
முத்திரை மோதிரம் தந்திடுமே
முத்தங்களால் என்னை அணைத்திடுமே

ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்திடும் உன்னதரே
என்னை உம்மில் இணைத்தீரே
அதுதான் உமது கிருபையே

Paavi Nee Odivaa பாவி நீ ஓடி வா

 பாவி நீ ஓடி வா – அன்பர்

இயேசு அழைக்கிறார்
பாவம் நீக்கிட வா – உந்தன்
பாரம் போக்கிட வா

உந்தனின் பாவத்தினால்
சிந்திய இரத்தத்தைப் பார்
தந்தை தம் அன்பினாலே – உன்னைப்
பந்தமாய்ப் பாதுகாப்பார்

வெண்ணங்கி நீ தரிக்க
முள்முடி சூட்டினாரே
தீராத பாவம் தீர்க்க – நீயும்
நேராக இன்றே வாராய்

ஆத்தும தாகம் தீர்க்க
ஆண்டவர் கூறுகின்றார்
தாகம் அடைந்தேன் என்று – நீயும்
தீர்ப்பாயோ அவர் தாகத்தை

Paraloga Santhosam Parinil பரலோக சந்தோஷம் பாரினில்

 பரலோக சந்தோஷம் பாரினில் வந்து

என்னைப் பரவசப்படுத்துகிறதே
பரமபிதா நீர் எந்தன் தந்தை
பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன்

புத்திர சுவீகார ஆவியினால்
நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்
புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர்
அது உன்னத பெலன் அல்லவா

என் பிரிய இயேசு என் இனிய நேசர்
என்னோடு இருப்பார் என்றும்
ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார்
தெய்வீகமான அன்பே

பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே
அந்தப் பரமனைக் கண்டுகொண்டேன்
அவர் திருவாய் மொழி எனக்கு அருமருந்தாகுமே தினமும்
பலகோடி துதி பாடுவேன்

Paralogil Vaazhum Parameswara பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா

 பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா

பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஷ்வரா
உலகிற்கு ஒளியான ஜோதீஷ்வரா
இயேசு ராஜேஷ்வரா மன சாந்தீஷ்வரா

பாவத்தை சுட்டெரிக்கும் அக்னீஷ்வரா
நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஷ்வரா
பாவிக்கு மறுவாழ்வாம் ரக்ஷேஷ்வரா
காருண்யேஷ்வரா மகா ஈஷ்வரா

அனைத்துக்கும் மேலான சர்வேஷ்வரா
அகிலாண்டம் படைத்தாலும் பிரம்மேஷ்வரா
மரித்த பின்பு உயிர்த்தெழுந்த ஜீவேஷ்வரா
முக்தீஷ்வரா சர்வ சக்தீஷ்வரா

Parama Azhaippin Panthaya பரம அழைப்பின் பந்தய

 பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் என்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா -2

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்