Saturday, August 29, 2015

Yesuvae Um Naamathinaal

இயேசுவே உம் நாமத்தினால்
இன்பம் உண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்

மன்னை நாடி பொன்னை அடைந்தோம்
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே

இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பலத்தால் - எங்கள் தேவனே

உன்னைக் கண்டு அழைக்கும்
சத்தத்தை கேட்டாயோ பாவியே
இன்று இயேசுவன்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ - எங்கள் தேவனே

Thikkatra pillaikalukku

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
   தூரத்தில் நின்றுவிடுவீரோ
   பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
   இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
2. கர்த்தாவே எழுந்தருளும்
   கைதூக்கி என்னை நிறுத்தும்
   தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
   தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
3.தாயென்னை மறந்தாலும்
  நீர் என்னை மறப்பதில்லை
  ஏழையின் ஜெபம் கேளும் – 2
  இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2