Thursday, October 24, 2019

YAAR POVARO YAAR POVARO LYRICS

யார் போவாரோ யார் போவாரோ
யார் போவாரோ யார் எனக்காக
என்னை அனுப்பும் மேவா நான் போகிறேன்
யார் போவாரோ யார் போவாரோ

1. யாரும் அங்கே போகாவிட்டால்
எப்படி நம்புவாரோ
என்நாமம் அங்கே சொல்லா விட்டால்
எப்படி இரட்சிப்போமோ
யார் போவாரோ யார் போவாரோ

யார் போவாரோ யார் போவாரோ
யார் போவாரோ யார் எனக்காக

2. வயலில் அறுப்புமிகுதியே
வேலை ஆல் இல்லையே
வயலில் அறுப்புக்காகவே
யார் போவாரோ யார் போவாரோ

யார் போவாரோ யார் போவாரோ
யார் போவாரோ யார் எனக்காக

3.  மேய்ப்பன் ஒருவன் இல்லாமலே
ஆடுகள் சிதரியதே
என் ஆடுகளை போஷிக்க
யார் போவாரோ
யார் போவாரோ யார் போவாரோ

யார் போவாரோ யார் போவாரோ
யார் போவாரோ யார் எனக்காக

4. பாரத தேச விசுவாசியே
எனக்காக செல்வாயா
கோடான கோடி மக்கட்காக
நீ போவாயா

யார் போவாரோ யார் போவாரோ

யார் போவாரோ யார் போவாரோ
யார் போவாரோ யார் எனக்காக
என்னை அனுப்பும் மேவா நான் போகிறேன்
யார் போவாரோ யார் போவாரோ

SILUVAI SUMANDHORAI SISANAGUVOM LYRICS

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா(4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

KIRUBASANATHANDAI OODI VANTHEN LYRICS

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமே
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிரைத்திடுமே - 2

உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் - 2
                                                                தடுமாற்றம்

என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் - 2
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே - 2

சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் - 2
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நினைத்திடுமே - 2
                                                                 கிருபாசனத்தண்டை

YAKOBIN DEVAN NAM DEVAN LYRICS

யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணையவரே
எந்நாளும் நடத்துவாரே

ஏதுமில்லை என்ற கவலையில்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பனவர்
நம்புவேன் இறுதி வரை

என் ஓட்டத்தில் நான் தனிமையில்லை
நேசித்தவர் என்னை
வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை

ATIKALAIYIL DHINAM THEDINAAL LYRICS

அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
ஆராதனையில் துதி பாடினால்
சுகம் அடைந்திடுவார்கள் தேவா

துதிக்குப் பாத்திரரே தூய ஆவியே x 2
ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே x 2

அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா

சரணங்கள்

1. இரவொன்று வந்து பகலென விடிவது
இறைவா உம் அற்புதமே
உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது
தேவா உம் சித்தமே
இருளினை நீங்கும் வெளிச்சமும் நீரே
இணையில்லா பேரொலியே
இரக்கத்தை தேடி ஜெபித்திடுவோர்க்கு
குறைவில்லா உம் கிருபையே

2. கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க் கெல்லாம்
கசப்பும் இணிப்பாகுமே
கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால்
கவலைகள் பரந்தோடுமே
காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால்
கேட்பது ஜெயமாகுமே
வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால்
வல்லமை உனை சூழுமே

3. நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு
சத்திய வேத வார்த்தையை கேட்டு
சாட்சியாய் நடமாடு
நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின்
அன்பினில் உறவாடு
நிறந்தர சொந்தம் இயேசுவை நாடி
நன்மையால் முடிசூடு - நீ

MARAVAR YESU MARAVAR UNNAI

மறவார் இயேசு மறவார் - உன்னை
ஒரு இமைப் பொழுதிலும்
மறவார் 
மறவார் இயேசு மறவார் -  உன்னை
உருவாக்கிய இயேசு மறவார்

அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்
மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்

தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கியே நடத்திட மறவார் - எப்பக்கம்
நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்


வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிகாட்டி நடத்திட மறவார்
வானமும் பூமியும் நிலை மாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார் - தம்

ATHISAYANGAL SEIGIRAVAR NAM ARUGIL

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

NALLAVAR NEER MIGAVUM


நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்

என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே-4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே -4
கிருபையான இயேசுவே

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

NAAN UYIRODU IRUKKUM NAALELLAM


நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்

என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே-4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே -4
கிருபையான இயேசுவே

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே