Saturday, April 14, 2018

RATHATHATHINALE KAZHUVAPATEN LYRICS

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று – நான் 
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் -2
1. படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா – இரத்தம் ஜெயம்
2. என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம் – இரத்தம் ஜெயம்
3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தமே
தீய ஆவி (யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது (எந்த) – இரத்தம் ஜெயம்
4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும் – இரத்தம் ஜெயம்
5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு – இரத்தம் ஜெயம்

RAAKAALAM BETHLEHEM MEIPERGAL LYRICS

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
2. அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5. என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

RASA RASA PITHA MAINTHA LYRICS


ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச
1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச
2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச
3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச
4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச

SANTHOSHA VINNOLIYE YESU SAANTHA LYRICS

சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்
இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்
பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே
ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவன் சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே
ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம்
எங்கள் சமாதானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரே

SILUVAI SUMANTHA URUVAM SINDHINA LYRICS


சிலுவை சுமந்த உருவம்
சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா 
1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா………
2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்
உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே
3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்
4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்
5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்
6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்
கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்

SILUVAI NAADHAR YESUVIN LYRICS

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்
2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்
3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்
4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

SARONIN ROJAVE PALLATHAKKIN LYRICS

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே-2
பதினாயிரம் பேர்களில் சிறந்தவரே
பணிகின்றோம் உம் பாதத்தில்-2
ஆதியும் அந்தமானவரே!
எந்தன் ஆருயிரின் நாயகரே!
அதிசயமானவரே! – என்னை
ஆட்கொண்ட ஆண்டவரே! – சாரோனின்
பரிசுத்தர் பரிசுத்தரே! – எங்கள்
பரலோக ராஜாவே!
கர்த்தாதி கர்த்தர் நீரே!
என்னை காத்திடும் கேடகமே – சாரோனின்
பொன்னகர் உயர்ந்தவரே! – எங்கள்
உத்தமர் இயேசு ஐயரே!
உயர்த்தி மகிழுவேன் – என்று (உம்மை)
பாடி போற்றுவேன்! – சாரோனின்

SARONIN RAJA IVAR PARIPOORNA LYRICS

சாரோனின் ராஜா இவர்
பரிபூரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
துணைவன் என்பேன்

இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன

1. சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்

2. மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புதுகிருபை
காலை தோறும் நமக்கு உண்டு

3. நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

SALEMIN RAJA SANGAIYIN RASA LYRICS

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

SABAIYORAE ELLORUM KARTHARAI LYRICS


சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்
2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்
ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார்
3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்
4. சொந்த மகனெறும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம்தானே

GEETHAM GEETHAM JAYA JAYA GEETHAM LYRICS


கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம்
1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ
புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம்
2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம்
3. அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்
4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் – நம்
மேள வாத்தியம் கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்

DEVA JANAME MAGIZNDU KALIKOORU LYRICS

தேவ ஜனமே
மகிழ்ந்து களிகூறு
பயங்கள் நீக்கி துதிபாடு
இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
இரட்சித்து உன்னை காத்திடுவார்
1. சிருஷ்டிகரே உன் நாயகர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
சர்வ பூமிக்கும் அவரே தேவன்
2. நித்திய காலத்து நீதியை
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
காத்தரின் கரத்தின் கிரீடமும்
இராஜ முடியும் நீ ஆவாய்
3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
பாழான தேசம் நீ அல்ல
எப்சிபா பியூலா
என்று சொல்லும்
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்

DEVA JANAMAE PAADI THUTHIPOM LYRICS


தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

3. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

4. தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்

5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம்

DEVA NAAN ETHINAL VISESHITHAVAN LYRICS


தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்
1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே
2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு

BAYANTHU KARTHARIN BAKTHI VAZHIYIL LYRICS

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

BUTHIYULLA STHREE THAN VEETAI LYRICS

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்
1. கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை
உழைத்து மகிழ்கிறாள்
3. பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல
இவள் நாணத்தினால் தன்னை
அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

ADHIKAALAI NERAM ARASALUM LYRICS

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

ADIMAI NAAN AANDAVARE LYRICS

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

AATKONDA DEIVAM THIRUPAATHAM LYRICS

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே