Friday, April 13, 2018

GALILEYA ENDRA OORIL LYRICS

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

INTHA KAALAM POLLATHATHU LYRICS

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்
1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்
2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா
3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே
4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

ITHUVARAI SEITHA SEYALGALUKKAGA LYRICS

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )
1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)
2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)
3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

IYYA UMTHIRU NAMAM LYRICS

ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
ஐயா உம் திருநாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணுமே
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே

JEEVIKIRAR YESU JEEVIKIRAR LYRICS

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)
1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் – ஜீவிக்கிறார்
2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே – ஜீவிக்கிறார்

KARTHARIN SATHAM VALLAMAI ULLADHU LYRICS

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!
சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்
1. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்
2. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்
3. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதான மீந்து
பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

IDHUVARAI NADATHI KURAIVINDRI LYRICS

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
1. ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி
3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி

IDHU VARAI SEITHA SEYALGALUKKAGA LYRICS

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
1.  உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி
2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி
3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

IMMATTUM KAIVIDA DEVAN LYRICS

இம்மட்டும் கைவிடா தேவன்
இணியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்
1. ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்
2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ
3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

HALLELUJAH THUTHI UMMAKAE LYRICS

அல்லேலூயா துதி உமக்கே
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவிதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே
கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்

HALLELUJAH THUTHI MAGIMAI ENDRUM LYRICS

அல்லேலூயா துதி மகிமை
என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் -2
ஆ… அல்லேலூயா-2
1. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் -2
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்து நிட்க வேண்டும் -2 அல்லேலூயா 
2. சென்றவர் வந்திடுவார்
நம்மை அழைத்துச் சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன வாழ்ந்திடவே -2 அல்லேலூயா

UM SITHAM POL ENNAI LYRICS

உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – உம் 
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம் 
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே – உம் 
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

UM KIRUBAI THAAN IYYA LYRICS

உம் கிருபை தான் ஐயா ………..
மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ……….
1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ………..
2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
உம் கிருபை தான் ஐயா………..

YESUVIN PINNAL NAAN SELVEN LYRICS

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்
2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே
4. பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே

YESUVIN MAARBINIL SAARUVENAE LYRICS

இயேசுவின் மார்பினில் – சாருவேனே
துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே
1. காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை அன்பின் சொரூபி என் இயேசு நாதா
2. நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினீரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினீரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
முள்முடீ சூட்டியே நின் சிரசில்
4. ஜீவனைத் தந்த என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை

YESUVIN NAAMATHINAAL KUDIDUM LYRICS

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2
1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2
2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2
3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2

NAAN PAAVI THAAN LYRICS

1. நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
2. நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
3. நான் பாவி தான் – பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
4. நான் பாவி தான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
5. நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
6. நான் பாவி தான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

SUGAM UNDU BELAN UNDU LYRICS

சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
1. நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
2. அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
3. துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
4. வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே
5. சுகப்படுத்தும் பெலப்படுத்தும் திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே
சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம் ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா…………..
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

SINGA KUTTIGAL PATTINI KIDAKKUM LYRICS

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

UMMAI APPANU KOOPIDATHAN ASAI LTRICS

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா
1. கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…
2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

THUTHIPPEN THUTHIPPEN THUTHITHU LYRICS

துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே – துதிப்பேன்
1. சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது – துதிப்பேன்
2. மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே – துதிப்பேன்
3. வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே – துதிப்பேன்

THUTHIPPEN THUTHIPPEN YESU DEVANAI LYRICS

பல்லவி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அல்லேலூயா பாடி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அனுபல்லவி
துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
தூயவனாய் வந்த தேவகுமாரனை
சரணங்கள்
1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
தம் ஜனத்தின் கூக்குரல்
கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
லோகப் பாவச் சுமைதனை
சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன்
2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
எங்கள் இயேசு நாயகர்
பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
நிலையங்கி தரித்தோராய்
கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன்
3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
அவரருகில் வருவீர்;
வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
லோக பாவத்தைச் சுமந்தார்;
பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை – துதிப்பேன்
4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
பரிசுத்தர் யேகோவாவை
அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
சர்வ வல்ல பராபரன்
வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதிப்பேன்

AASIRVATHIKUM DEVAN THAM ASIR LYRICS

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்
பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்
1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு
2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு
3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது

AASIRVATHIKUM DHEVAN UNNAI LYRICS

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 
1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

DEVA KIRUBAI ENDRUM ULLATHU LYRICS

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே
6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே