Saturday, January 2, 2016

ANAITHAIYUM ARULIDUM ENAKENA TAMIL LYRICS

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – (4)

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே

Arunum Kottaium belanai kaappavar

அரணும் கோட்டையும்
பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே

1. ஜீவ நம்பிக்கை நல்க
இயேசு மரித்து எழுந்தார் (2)
அழிந்திடாத உரிமை பெறவே
புது ஜீவன் அடையச் செய்தார் (2)

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
நீதிமானை செழிக்கச் செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் (2)

3. தம்மால் மதிலைத் தாண்டி
உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணைசெய்கின்றார் (2)

Aadharam Neer Thaan Aiya kaalangal

ஆதாரம் நீர் தான் ஐயா
காலங்கள் மாற, கவலைகள் தீற
காரணம் நீர் தான் ஐயா

சரணங்கள்

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன, என் நிலை மாற --- ஆதாரம்

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற --- ஆதாரம்

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற --- ஆதாரம்

Abrahamin Devane esaakin devane


ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
ஆனந்தம் அடைந்திடுவேன்

தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
தேவாதி தேவனே வாழ்க
ராஜாதி ராஜாவே வாழ்க

சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
அவியாமல் அக்கினியிலே காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்

பவுலும் சீலாவும் சிறையிலே
கட்டுகளை அறுத்துக் காத்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க

Aradhippan Aradhippan

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

பரிசுத்த கரங்களை உயர்த்தி
புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்

வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்

தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்

வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்

ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்

சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்

Andavar Padaitha vetriyin


ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்

4. என்றும் உள்ளது உமது பேரன்பு
என்று பறைசாற்றுவேன்
துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரையா

Yesu Nallavar Yesu Nallavar


இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் - அவர்
என்றென்றும் மாறாதவர்

1. குருடரின் கண்களை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

2. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Ratha Kottai Kulle

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

Im mattum Kaivida Devan

இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

ISRAVELIN RAJAVE EN DEVANAM LYRICS

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே - (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய் --- இயேசுவே

எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் --- இயேசுவே

என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் --- இயேசுவே

Indru Kanda Egipthiyanai

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (2)

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)

2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (2)

3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார் (2)
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (2)

4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (2)
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (2)

Idaivida Nandri Umakuthane

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2)

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி --- இடைவிடா

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி --- இடைவிடா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி --- இடைவிடா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி --- இடைவிடா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி --- இடைவிடா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா

7. நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா

Yesu Endhan Meipar


இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை
அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2)

குறையில்லை குறையில்லை குறையில்லை
நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (2)

1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையில் நடத்தி - என்னை --- குறை

2. மரண இருளின் பள்ளத்தாக்கு
பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் --- குறை