அம்மா உந்தன் அன்பினிலே
அருள்வாய் எமக்கு அடைக்கலமே
இறைவன் படைத்த எழிலே
ஏசுவை தந்த முகிலே
தூய்மை பொழியும் நிலவே
துணையே வாழ்வில் நீயே -- (அம்மா உந்தன்)
புவியோர் எங்கள் புகழே
புனிதம் பொங்கும் அருளே
உன்மகன் புதிய உறவே
எம்மையும் பதிய செய்வாய் -- (அம்மா உந்தன்)
No comments:
Post a Comment