Saturday, August 13, 2022

AARAAINJU PAARTHALUM KAARANAM ILLA

 ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல

அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2

கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது

என் இயேசு என் காதலே -2

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2

ஓங்கி வரும் மரம்கன்று வென்னீர ஊத்தும் வேரில
கீழ தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில

என் இயேசு என் காதலே -2

காதலே காதலே காதலே காதலே

JEHOVAH RAPHA SUGATHAI THARUBAVAR

 1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்

வியாதிகள் இன்று எனக்கில்லையே
யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே

யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

MAATUVANDI POOTIKITU PORAVARE KELUM

 மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும்

எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு

1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 -
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 -
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

NIRAPUM ENAI NIRAPUM

 நிரப்பும் என்னை நிரப்பும்

உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும்
பயன்படுத்தும் உந்தன் கரத்தில்
உம் சேவைக்கென்றே பயன்படுத்தும் - (2)

ஜீவத் தண்ணீரே எங்கள் ஆவியானவரே
நிரப்பிடுமே இந்த வேளையில் - (2) - நிரப்பும்

1) ஆவியின் வரங்கள் தாருமே
ஆவியின் கனிகள் வேண்டுமே - ஓ.... - (2)
அக்கினியாய் எழும்பி ஜொலித்திட
ஆவியானவரே என்னை நிரப்புமே - (2) - ஜீவத்

2) உண்மையாய் ஊழியம் செய்திட
உமக்காக எங்கும் ஓடிட - (2)
உம் நாமத்தை என்றும் உயர்த்திட
உன்னத ஆவியை ஊற்றுமே - (2) - ஜீவத்

3) பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட
பரிசுத்த ஆவியை தாருமே - (2)
பரனே உந்தன் அருள் தந்து
பாரினிலே என்னை நடத்துமே - (2) - ஜீவத்

KIRUBAYAE KIRUBAYAE

 கிருபையே.... கிருபையே... கிருபையே...கிருபையே...(2)


1) புயல்கள் அடித்தாலும், அக்கினி சூழ்ந்தாலும்
என் பட்சத்தில் இருப்பதால்... நான் அசைக்கப்படுவதில்லை
கிருபையே மேலான கிருபை
கிருபையே விலகாத கிருபை
கிருபையே மாறாத கிருபை - கிருபையே... (2)

2) நம்பினோர் கைவிட்டாலும், கண்ணீர் என்னை சூழ்ந்தாலும்
என் நம்பிக்கை ஒருவரே... அவர் என் இயேசுவே
கிருபையே மேலான கிருபை
கிருபையே விலகாத கிருபை
கிருபையே மாறாத கிருபை - கிருபையே... (2)

3) நான் உயிரோடு வாழ்வதும் உம் கிருபை
நான் ஜெயமுடன் நிற்பதும் உம் கிருபை
என்னைப் பரிசுத்தமாக்கியதும் உம் கிருபை
என்னை நித்தியத்தில் சேர்ப்பதும் உம் கிருபை - (2)

கிருபையே.... கிருபையே... கிருபையே... கிருபையே... (2)
கிருபையே மேலான கிருபை
கிருபையே விலகாத கிருபை
கிருபையே மாறாத கிருபை - கிருபையே... (2)

EASUVAI NOKKI PAARKIRAEN

 இயேசுவை நோக்கிப் பார்க்கிறேன்

அவரைப் போல் மாற வாஞ்சிக்கிறேன் - (2)
எனக்காக அவர் நியமித்த பாதையில்
பொறுமையுடன் ஓட ஆசிக்கிறேன் - (2) - இயேசுவை

1) இயேசுவின் பரிசுத்தம் பார்க்கிறேன் - (அதை)
நிதமும் அணிந்திட விரும்புகிறேன் - (2)
என்னை சூழும் பாவத்தை விட்டு
இயேசுவை அண்டிட நாடுகிறேன் - (2) - இயேசுவை

2) இயேசுவின் தாழ்மையைப் பார்க்கிறேன் - (அதை)
நிதமும் காட்டிட விரும்புகிறேன் - (2)
நீர் தரும் பொறுப்பை செயல்படுத்த
நிதம் பணிவிடைக்காரனாய் தாழத்துகிறேன் - (2) - இயேசுவை

IRUMANAM ONDRAGA MARUVATHE

 இருமனமும் ஒருமனமாக மாறுவதே திருமணமே

இருவருமே இனி ஒருவராக கர்த்தருக்குள் என்றும் வாழுவோமே
நேரமும் வந்தது காலமும் வந்தது
உன்னையும் என்னையும் சேர்த்திடவே
கர்த்தர் நினைத்தது காலமும் மாறாது
நீயும் நானும் வாழுவோமே - இருமனமும்

மாம்சத்தில் மாம்சமாக எலும்பில் எலும்பாக
எனது பாதி ஆனாளே
நன்மையிலும் தீமையிலும் வாழ்விலும் தாழ்விலும்
உன்னை என்றும் நேசிப்பேனே
இன்பத்திலும் துன்பத்திலும் வியாதி வறுமையிலும்
உன்னை என்றும் நேசிப்பேனே
மரணம் நம்மை பிரிக்கும் அளவுக்கும்
எல்லா நிலையிலும் நேசிப்பேனே - இருமனமும்