Saturday, October 17, 2015

silar rathangalai kurithu menmai

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
நாங்களோ நாங்களோ 

ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்தே
மேன்மை பாராட்டுவோம்


1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்


2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்


3. கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே

athikaalaiyil sooriyanai paarkaiyile

1. அதிகாலையில் சூரியனைப் பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர்
என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலைக் கேட்கையில்
என் தேவனும் கேட்கிறார்
என் பயம் அறிவார்
கண்ணீர் காண்பார்
அழுகையைத் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னைக் காண்கின்றார்
அவர் என்றென்றும் என்னைக் காண்கின்றார்
எல் ரோயீ என்னைக் காணும் தேவனே

2. மேகம் கடப்பதைக் காண்கையில்
நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள்
என்னை மேற்கொள்ள கூடாது
நதிகள் புரள்வதைக் காண்கையில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது
என்றும் நமக்குண்டு

devane umm samugame

1. தேவனே உம் சமூகம்
ஏழை நான் தேடி வந்தேன் – 2
யாரிடம் நான் செல்லுவேன் – 2
எந்தனின் தஞ்சம் நீரே – 2
பரிசுத்தமானவரே
உம் பாதமே சரணடைந்தேன் – 2


2. யார் என்னை வெறுத்தாலும்
அழைத்தவர் நீரல்லவா
யார் என்னை பகைத்தாலும்
அணைப்பவர் நீரல்லவா
உன்னதமானவரே
உயர் நல் அடைக்கலமே

3. தேசத்தின் சமாதானம்
உம் கையில் தானுண்டு
என் ஜனம் மாளுதையா
இரங்கும் என் இயேசு நாதா
உன்னதமானவரே
உம்மைத்தான் நம்பியுள்ளேன்