Wednesday, February 6, 2019

AARADHANAI SEIGIROM UMAMI UYARTHUGINDROM LYRICS

ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்
நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்
உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
உன்னதமானவரே உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
எங்களைக் காப்பவரே
என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி
தருபவரே என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

NAAM VIZHUNTHU POGATHAPADIKKU LYRICS

நாம் விழுந்து போகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருப்போம்
நாம் இழந்து போகாதபடிக்கு
கவனமாய் ஓடி முடிப்போம்-2

பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
பந்தய பொருளை இழந்து போகாதே
பரலோகத்தை இழந்து விடாதே
பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம்-2

1.பெற்றுக் கொள்ள தக்கதாய்
பந்தய சாலையில் ஓடுவோம்
ஜீவ கிரீடம் பெற்றிட
தேவ சித்தம் நாம் செய்குவோம்-2-பரிசுத்த

2.இச்சையடக்கத்தோடே
முன்னேறி நாம் செல்லுவோம்
வாக்குத்தத்த தேசத்தை
தவறாமல் சுதந்தரிப்போம்-2-பரிசுத்த

3.அக்கம் பக்கம் பார்க்காமல்
ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்
ஆயுட்காலம் முடியும் வரை
அவருக்காகவே வாழுவோம்-2-பரிசுத்த

நாம் விழுந்து போகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருப்போம்
நாம் இழந்து போகாதபடிக்கு
கவனமாய் ஓடி முடிப்போம்-2

பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
பந்தய பொருளை இழந்து போகாதே
பரலோகத்தை இழந்து விடாதே
பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம்-2

ENNAI YAARENDRU ENAKKE INDRU LYRICS

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன் - ஆனால்
வழியிலே தவறி விழுந்தேன் - நல்ல
வழியையும் தவறி அலைந்தேன் - நான் 
தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன் 

நானாய் நடந்த சில வழிகள் - இன்று 
வீணாய் மனதிற்குள்ளே வலிகள் - எந்தன்
சுயத்தினால் கிடைத்த சிறைகள் - எந்தன் 
அகத்தினுள் படிந்த கறைகள் - இல்லை
நிறைகள் முற்றிலும் குறைகள்

வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா
உந்தன் வழியில் என்னை நடத்தும் - இன்றே
எந்தன் சுயமதனை அகற்றும் - அன்று
எந்தன் ஜீவியமது சிறக்கும் - புத்தி 
பொருத்தும் முற்றிலும் திருத்தும்

AADHIYILE DHEVAN VAANAM BOOMI LYRICS

ஆதியிலே தேவன் வானம் பூமி படைத்தார் 
வார்த்தையினால் உலகத்தை வடிவமைத்தார் 
வெட்டாந்தரையையும் சமுத்திரங்களையும் 
வெற்றிகரமாகவே வெவ்வேறாக பிரித்தார்
பகலில் சூரியனும் இரவில் சந்திரனும்
பச்சைமரங்களும் பூ பூக்கும் செடிகளும் 
வானத்தில் பட்சிகளும் மற்ற விலங்குகளும்
மண்ணிலிருந்து நல்மனிதனையும் படைத்தாரே 

மீட்பின் செய்தி இதுதானே
மாந்தர் தெரிந்துகொள்ளட்டும்

தோட்டத்திலே ஒரு தோட்டக்காரன் போலவே 
ஆதாமை அனைத்தையும் பார்த்துக்கொள்ளச் சொன்னாரே 
ஆனாலும் நன்மை தீமை கனியினை புசித்தால் 
புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய் என்றாரே 
ஆதாமும் ஏவாளும் ஏதேனில் இருந்தனர் 
ஆனந்தமாகவே தோட்டத்தில் திரிந்தனர் 
அல்பகல் ஆண்டவரை வணங்கி மகிழ்ந்தனர் 
அல்லேலூயா என்று ஆர்ப்பரித்து வந்தனர் 

ஏதேன் தோட்டத்திலே ஒரு நாள்
சாத்தான் நோட்டமிட்டானே 

பிசாசு பாம்புக்குள்ளே
பாம்பு இப்ப தோட்டத்துள்ளே 
ஆதாமை விட்டுவிட்டான்
ஏவாளை மடக்கிவிட்டான் 
சந்தேகம் கிளப்பிவிட்டான்
சிந்தையை குழப்பிவிட்டான்
கட்டளை மறக்கவிட்டான்
கனியை புசிக்கவிட்டான் 
சாகவே சாவாய் என்று சர்வேஸ்வரன் சொன்னதெல்லாம் 
இல்லவே இல்லை என்று பொய்களை பறக்க விட்டான் 

வீழ்ந்தான் முதல் மனிதன் அன்று 
தாழ்ந்தான் அன்றுமுதலாய் 

மனிதனுள் பாவம் நுழைஞ்சாச்சு
நன்மை தீமை என்னவென்று தெரிஞ்சாச்சு
நிர்வாணி என்பதை அறிஞ்சாச்சு
ஆதாமும் ஏவாளும் விழுந்தாச்சு 
பிசாசின் தந்திரம் புரிஞ்சாச்சு
பரமனும் மனிதனும் பிரிஞ்சாச்சு
ஆசீர்வாதம் எல்லாமே குறைஞ்சாச்சு
ஆகமொத்தம் எல்லாமே நாசமா போச்சு

 பாவத்தை மறைக்க மர இலையா
அது பத்தாது உனக்கு தெரியலையா
தோல் உடை தேவை புரியலையா
அதை தேவன்தான் தரணும் அறியலையா

ஆதாமிடமிருந்து பிள்ளைகளுக்கு
அப்பிள்ளையிடமிருந்து மற்றவருக்கு 
இப்படியே பரவுது பாவ அழுக்கு 
மனிதனால் தேவனுக்கு பெரும் இழுக்கு 

பாவம் பரவுது பரவுது
தேவை பரிகாரமே

 எத்தனையோ வருஷமா என்னென்னமோ யோசிக்கிறான் 
பாவப் பழிபோக்கத்தானே மனுஷன் யாசிக்கிறான் 
மலைமேல மண்டியிட்டு மனச சுத்தப்படுத்தி
குகையில உக்காந்து தன்னையே கஷ்டப்படுத்தி 
நல்லதெல்லாம் செஞ்சு செஞ்சு தன்னையே திருப்திபடுத்தி
நல்ல எண்ணம் கொண்டு பரலோகம் போகப் பாக்குறான் 

தோல்வி படுதோல்வி தான் - உன் 
முயற்சிகள் மேல முக்காடுதான் 

கல்லையெல்லாம் தெய்வமாக்கி கண்முழிச்சு பாத்துக்குறான்
கண்டபடி மந்திரம் சொல்லி கர்த்தர ஏமாத்திக்கிறான் 
காணிக்கைய கொட்டி கொட்டி பாவங்கள மூடிக்கிறான் 
நாலுபேருக்கு நன்மை செஞ்சு நிம்மதிய நாடிக்கிறான் 

போ போ என்ன வேணுமோ செய்யி
பாவம் தீராதய்யா 
போ போ என்ன வேணுமோ செய்யி
பரிகாரம் இது இல்லய்யா

உன் சுயநீதியெல்லாம் நாத்தமடிக்குதே - உன்
நற்கிரியை எல்லாம் வீண் முயற்சியே  - உன் 
நல்ல எண்ணம் எல்லாம் நசுங்கிடுதே  - உன் 
பாவத்துக்கு முன்னாடி பொசுங்கிடுதே 

பாவம் நீங்க ரத்தபலி அவசியமே -
ஏனென்றால் அதுதான் தேவ சட்டமே 
ஆடு மாடு ரத்தமெல்லாம் கொஞ்ச காலமே 
மாசற்ற ரத்தம் இங்கு தேவைப்படுதே 

மனுஷனுக்காக மனுஷன் மரிக்க கூடுமோ 
குருடரை குருடர் வழி நடத்தக்கூடுமோ 
உத்தமமா ஒருத்தன காட்டக்கூடுமோ 
தன்னை நல்லவன்னு யாராவது சொல்லக்கூடுமோ 

அதனால,

ஆண்டவரே செய்தாரு நல்ல ஏற்பாடு 
அதுதானே உன் கையில் புதிய ஏற்பாடு
தன் மகனை தரணியில் தானமாக தந்தாரு
புதல்வனை பாவமெல்லாம் ஏற்றுக்கொள்ளச் சொன்னாரு 

கன்னி பெண்ணின் பிள்ளை 
களங்கமில்லா முல்லை 
பரிசுத்தத்தின் எல்லை 
பிசாசுக்கு தொல்லை 

ஏசு அவர் பேரு 
தாவீதின் வேரு
ஆபிரகாமின் வம்சம் 
ஆகமொத்தம் அம்சம் 

ஞானத்துல தீரன்
வல்லமையில் சூரன்
நல்ல உபகாரன் 
நம்ம யெஷீரன் 

அவர் நின்னா அற்புதம்
வார்த்தை சொன்னா அற்புதம் 
எக்கச்சக்க அற்புதம்
எச்சில் கூட அற்புதம்

இயேசு என்ற ஒரே நாமம் 
பாவம் போக்கிவிடுமே 
இயேசு என்ற ஒரே நாமம்
பரலோகம் சேர்த்துவிடுமே

மரணத்தை வென்றவரு
உயிரோடு வந்தவரு
நித்தியத்த தந்தவரு
பரலோகம் சென்றவரு

ஆலோசனை கொடுக்கும் ஆண்டவர் இவரு
அதிசயம் என்பதும் இவரோட பெயரு
வல்லதேவன் நித்திய பிதா சமாதானர் இவர்தான்
இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடுதான்

வழி சத்தியம் ஜீவன்
ஜீவனுள்ள தேவன் 
விண்ணுலக அப்பம்
ஆனாரே வெண்கல சற்பம்
அவரே ஜீவ தண்ணீர்
துடைத்திடுவாரே கண்ணீர்
உலகத்திற்கு ஒளி
பரலோகத்தின் வழி 
ஆடுகளுக்கு வாசல் 
இல்லென்னா வாழ்க்கை ஊசல்
மேய்ப்பன், திராட்சை செடி
பேசினா மின்னல் இடி
போதுமடா வாழ்ந்தது இஷ்டப்படி
மனம் திரும்பாவிட்டால் விழுமே மரண அடி
அவர் முன்னால போடு முழங்கால் படி
சாஷ்டாங்கமா விழு அவர் பாதப்படி

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

UM VAZHIGALAI ARINDHAVAN YAR LYRICS

உம் வழிகளை அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்

வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே
நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே

மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்
என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்

உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா
உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா

SILA NERANGALIL ENNAL MUDIYAAMAL LYRICS

சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்

இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்
துக்கத்தின் மிகுதியால்
ஜெபிக்க முடியல
அழுது தீர்த்துட்டேன்
கண்களில் நீர் இல்ல

உங்களை நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அத நாடுறேன்
வேற ஏதும் துணைக்கில்ல
என்னோட காயமெல்லாம்
நீங்கதான் கட்டிடணும்
உம்மோட பார்வையெல்லாம்
என்மேல பட்டிடணும்

உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்