Tuesday, December 15, 2015

raayar moovar keeldesam

1. ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம் 

ஓ... ஓ... இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்

2. பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே --- ஓ...

3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே --- ஓ...

4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் --- ஓ...

karthare en jeevan en belanaanavar


கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்
யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்
அவரே எந்தன் ஒளியானவர்
இரட்சிப்புமானவர் அவரேயாவார்
கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் ..........

சத்துருக்களும் பகைஞர்களும்
பொல்லாங்கு செய்ய நினைதோர்களும்
என் மாம்சத்தைப் பட்சித்திட
என்னையே நெருக்கின வேளைகளில்
கர்த்தரே என் பக்கம் துணையாய் நின்று
காத்தென்னை இரட்சித்தார் மாதயவாய்   (2)
                                                                      கர்த்தர் என் ஜீவன்

தந்தை தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார்
என் சத்துருக்கள் வெட்கினார்கள்
 கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார்
திடமனதோடு நான் காத்திருப்பேன்
ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே  (2)
                                                                     கர்த்தர் என் ஜீவன்

AVAR ENTHAN SANGEETHAMANAVAR LYRICS

இயேசு எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

NAAN SUGANMAANEN NAAN SUGAMAANEN LYRICS

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால் - 2

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ (2)
என் நோய்கள் தீர்த்தார்  என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் (2)
                ஆ அல்லேலூயா ....
2. நான் ஏன் சுமப்பேன் நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின்  (2)
யெகோவா தேவன் யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி  (2)
                ஆ அல்லேலூயா ....

3. பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது  (2)
இயேசுவின் இரத்தம்  இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து  (2)
                ஆ அல்லேலூயா ....

Indru Namakaga Meetpar Peranthullar

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)

ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறங்கள் (2)
வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் -2
கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்

Yesu Peranthuvitar Messiah Vanthuvitar

இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்
சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே
தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்
சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே

மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே
ஏழையின் குடிசையிலே பிறந்தவனே
தேவதூதன் சொன்ன செய்தியிது
பாவம் போக்க வந்த தெய்வமிது
எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி
பாலனின் பிறப்பில் அக்களிப்போம்

காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா
இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்
விண்மீன் காட்டி தந்த வழியுமிது
மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது
ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி
நாடுவோம் அவன் அருளைத் தேடி

Yesu Pirantha naalithu

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது
காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

மணமில்லாத மலரை போல்
இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2

துள்ளி மகிழும் குழந்தையே
உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே
விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2

தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2
சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2

Idayargal Thantha Kaanikkai

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே (2)

கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) – இயேசு…

நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) – இயேசு…

Indha mannil vanthu mannan Yesu

இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்
இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)
இறைவாக்கினர்கள் சொன்னபடி
பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்
போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்

மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்
மாடுகள் அடையும் தொழுவத்திலே -2
மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே
Happy Christmas – 2 Happy Happy Christmas

புவியில் நன்மனம் கொண்டவர்கள்
நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே
அமைதியின் வேந்தன் அவனியிலே -2
அழகிய குழந்தையாய் உதித்தாரே

Aanduku oru murai varugirathu

ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்
மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்
அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுது
ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது

தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்
இதயத்தை நாமும் அலங்கரிப்போம்
மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்
சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்
கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லை
இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லை
தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்
பிறப்பைக் காணுவோம்

ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோது
எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு
தாயும் சேயும் நலமாய் வாழ வகைவகையான உபசரிப்பு
மாடுகள் அடையும் தொழுவம் மன்னன் பிறப்பும் அரண்மனை
எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை அண்ணலின் அன்பு உறவுகள்
உள்ளத்தில் குழந்தை உபசரித்திடுவோம் போற்றியே வாழ்த்துவோம்

Puviel puthumai puribavare

புவியில் புதுமை புரிபவரே
புனித யூதா ததேயுசே
புவியோர் எம்மைப் புரந்திடுவோர்
புதிய வாழ்வும் தந்திடுவீர்.

திருமறை போற்றும் போதகரே
திக்கற்றோரின் காவலரே
இறைவன் இயேசுவின் சாயலையே
நெஞ்சில் தரித்துக் கொண்டவரே.

இயேசுவின் அரசை வளர்த்திடவே
எழுந்த பெரும் அப்போஸ்தலரே
யேசுவின் நெருங்கிய உறவினரே
எம்குறை தீர்த்தருள் புரிவீரே.

AMMAI APPAN UNTHAN LYRICS

நீயே நிரந்தரம்.....இயேசுவே......என்.... வா...ழ்வில்... நீயே நிரந்..தரம்...
ஆ......ஆ........ஆ......ஆ......ஆ.......ஆ.­......
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.­.. ஆ...ஆ..(அம்மை அப்பன்...)

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்.....
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்....
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.­.....

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்...
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்....
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.­....(அம்மை அப்பன்...)

NEEYE NIRANTHARAM YESUVE LYRICS

நீயே நிரந்தரம்.....இயேசுவே......என்.... வா...ழ்வில்... நீயே நிரந்..தரம்...
ஆ......ஆ........ஆ......ஆ......ஆ.......ஆ.­......

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.­.. ஆ...ஆ..(அம்மை அப்பன்...)

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்.....
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்....
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.­.....

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்...
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்....
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.­....(அம்மை அப்பன்...)

Sarva Srishtikkum Yejamaan Neere

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணீந்து தொழுவோம்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ-- மேன்

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறா
இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைய்ப்பான்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ-- மேன்

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ-- மேன்

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே -

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ-- மேன்

சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ-- மேன்

Koodume Ellaam Koodume

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

1. கடல் மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே

2. செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா

3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா

4, உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கைநீட்டினால் நோய்கள் மறையுதையா

5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா

6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே

7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர்
கரையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்

8. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்

Unai Athisaiyam Kana Seiven

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்

இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார் --- உன்னை

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே --- உன்னை

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே --- உன்னை

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே --- உன்னை