Tuesday, May 29, 2018

EN ENNANGALAI MAATRUM ENN LYRICS


என் எண்ணங்களை 
என் எண்ணங்களை மாற்றும்
என் விருப்பங்களை மாற்றும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை புதிதாக்கும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை உமதாக்கும்
1. கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
எண்ணங்களை கட்ட முடியல
நான் என்ன செய்வேனோ தெரியல
2. வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்
3. சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
சிற்றின்ப மாயை அதை நீக்குமே
பற்றோடு என்னை கண்ணோக்குமே

PAAVIKKU PUGALIDAM YESU RATCHAGAR LYRICS


பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி
2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி
3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி
4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

MEGANGALIL AARAVARATHODU LYRICS

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!
எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்
கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்
மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்
மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

KAATRU VEESUTHE DESATHIN MELE LYRICS


காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து
விட்டாரே எல்லோரும் பாடுங்கள்
களிப்பாய் பாடுங்கள்
இயேசுவைப் போற்றி
கெம்பீரமாய் பாடுங்கள்
1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே …எல்லோரும்
2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே …எல்லோரும்
3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே …எல்லோரும்
4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே …எல்லோரும்
5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே …எல்லோரும்

KONDADUVOM NAAM KONDADUVOM LYRICS


கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்
பாடி கொண்டாடுவோம் – 2
தீயவன் நடுவில் வருவதில்லை – 2
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
2. நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம் – 2
கர்த்தரின் மகிமை மேகம்போல – 2
இறங்கட்டும் இந்நாளிலே – 2
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
3. அசைக்க முடியா கூடாரம் ஆவோம்
அமைதியின் இல்லம் ஆவோம் – 2
நோயாளி என்று சொல்வதில்லை – 2
குற்றங்கள் நீங்கியது – நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

MAGILCHIYODU THUTHIKKINDROM LYRICS


மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா!
எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா, சாரோன் ரோஜா!
1. நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே (2)
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)
நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்பு
தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி
2. நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி
3. அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதமானவரே… உயர்ந்தவரே… இருள்
நீக்கும் ஒளிவிளக்கே
உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – மகிழ்ச்சி
4. தாயைப்போல் என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ! நல்ல அப்பா அல்லோ!
பிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – மகிழ்ச்சி

INTHA MATTUM KAATHA EBENESARE LYRICS


1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)
4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

DEVANA EN NANBANE ENAKKAI LYRICS


தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)
1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

EN SIRUMAIYAI KANNOKKI LYRICS


என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

BEER LAHAI ROHI LYRICS


என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

EN MUDIVUKKU VIDIVU NEERE LYRICS


என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
1. பூமியிலே நான் பரதேசி
ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை
ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக
இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

ENATHU MANAVALANE EN IDHAYA LYRICS


எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (2)
2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே
3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு)
4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா
5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக

EN PAVANGAL EN YESU LYRICS


என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்

EJAMANANEY EN YESU RAJANE LYRICS


எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ
3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்
4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்

DEVA UM SAMUGAME YENATHU LYRICS

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2
1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2
2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2
3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2
4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2
5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

YEN ALUGIRAI YARAI LYRICS


ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
1. கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
2. பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்
3. கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்

YENATHU ULLAM YARUKU LYRICS


எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்
என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே – இயேசையா
1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது
2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது
3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே

YESU KRISTU EN JEEVAN LYRICS


இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்


1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள் நான் வேர்கொண்டேன்
அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை


2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே


3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே


4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவமன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

YESUVAI NAMBINOR MANDATHILLAI LYRICS


1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்
2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்
3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்
4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே
5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே
6. அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

YESU ENNODU IRUPATHAL LYRICS


இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (2)
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
1. கர்த்தரின் பாதத்தில் நித்தம் அமருவேன்
அன்பரின் மார்பினின் சாய்ந்து மகிழுவேன் (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
மகிழுவேன் துதித்து மகிழுவேன் (2) – இயேசு என்னோடு 
2. இளமையிலே நான் இயேசுவைத் தேடுவேன்
உலக ஆசையை உதறித் தள்ளுவேன் (2)
தள்ளுவேன் உதறித் தள்ளுவேன்
வாழுவேன் உமக்காய் வாழுவேன் (2) – இயேசு என்னோடு 
3. பரிசுத்த வாழ்க்கையை நாடி ஓடுவேன்
பிறருக்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுவேன் (2)
காட்டுவேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜீவிப்பேன் சாட்சியாய் ஜீவிப்பேன் (2) – இயேசு என்னோடு 
கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (2)
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
அலேலூயா அலேலூயா
அலேலூயா அலேலூயா
அலேலூயா ஆமேன் அலேலூயா
அலேலூயா ஆமேன் அலேலூயா

YAAR PIRIKKA MUDIYUM NAATHAA LYRICS


யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா


1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா


2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே


3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்


4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

YAAR PIRIKKA MUDIYUM LYRICS


யார் பிடிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
4. பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

YESAIYA UM NAAMAM LYRICS


இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்
இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா
1. எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்
மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்
2. பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்
3. இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா
4. மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற
மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற

YESUVIN PILLAIGAL NANGAL LYRICS


இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
1. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம் 
2. எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
3. இன்று காணும் எகிப்தியரை
இனிமேலும் காணமாட்டோம்
நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு
4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே – இன்று
5. காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்கால்கள் நிரப்பப்படும்
6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்
7. வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாகாமல் மேலாக்குவார்
குறையெல்லாம் நிறைவாக்குவார் – நம்

YESUVE ANDAVAR YESUVE ANDAVAR LYRICS


இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர்
1. நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம்
2. இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர்
3. நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே

YESU KOODA VARUVAR LYRICS


இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா – 2


1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்


2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்


3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்


4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

KIRISTHUVIN ADAIKALATHIL SILUVAIYIN LYRICS


கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்
1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது
2. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும்
3. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை
4. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது

INTHA NAAL VARAIYIL ENNAI LYRICS

இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே – இந்த
1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த
2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த
3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த

EN ARUL NATHA YESUVE LYRICS


1. என் அருள் நாதா, இயேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்
3. கை தலை காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள் முடியும் ஒப்பற்றதே
4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்
5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே

DEVAN NAMATHU ADAIKALAMUM LYRICS


தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட
இருக்கும் துணையுமானார்
1. பூமி நிலை மாறி
மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
3. அமர்ந்திருந்து அவரே
தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர்
4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

DEVANIN AALAYAM THUTHIGALIN LYRICS

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்
1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
கைகள் செய்வது சுத்தமான செயலா
கால்கள் போவது சரியான இடத்திற்கா
நாவு பேசுவது சமாதான வார்த்தையா
சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா
2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
சரீரமென்பதை ஆலயமாக்கிடு

APPA NAAN ENNA SEIYA VENDUM LYRICS


அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)
அருளும் அருளும் அருளும் கரத்தால்
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)
1. உம் வேலை செய்வதுக்காசை
உமக்காக நிற்பது வாஞ்சை (2)
உம் சித்தம் என்னடைக்கலமாய்
நீர் எனக்கு உயிருக்கு உயிராய் (2) – அப்பா
2. உன் ஜீவன் எனக்காக தந்தீர்
உம் இரத்தம் எனக்காக சிந்தி (2)
என் ஜீவ நாள் முழுவதும் நான்
உமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (2) – அப்பா

ANBIN DEVAN YESU UNNAI AZHAIKIRAR LYRICS


அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்
1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்
2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் இயேசு பார்
3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற இயேசு பார்

ANBIN URUVAANAVARAY ALPHA LYRICS

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே 
ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் 
1. மகிமை விடுத்து மரணம் சகித்து
மந்தை காத்த மேய்ப்பன் நீரே
உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே
2. துயரம் நிறைந்து அழகை இழந்து
காயப்பட்ட தெய்வம் நீரே
பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே
3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே