Sunday, December 8, 2019

VANTHARULUM THOOYA AAVIYE

வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே

ஆட்கொள்ளும் தூய ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே

ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்த்திடுமே தூய ஆவியே

வழிகாட்டும் தூய ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே

RAAYAR MOOVAR GEELTHAESAM

1. ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்

ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்

2. பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே — ஓ…

3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே — ஓ…

4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் — ஓ…

RAAKKAALAM PETHLEM MAEYPPARKAL

1.ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.

2.அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன்: திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.

3.தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.

4.இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.

5.என்றுரைத்தான் அஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6.மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.

YUDHA KOTHIRA SINGAMUM

யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே

இனி அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம் அழ வேண்டாம்

மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
அவர் தானே - பாதாளம் முழுவதுமாய்
ஜெயித்தவரும் அவர் தானே
அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே
உன் துக்கம் சந்தேஷமாய் மாறிடுமே

பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின் கண்ணீரைத் துடைப்பவரே
ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியில் வசனத்தால்
சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம்

திறந்த வாசலை நம் முன்னே
வைத்தார் இயேசு - பாதாள வாசல்
இனி மேற்கொள்ள இடமில்ல
சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்
முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்

MULANGAL YAAVUM MUDANGUM

முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
இயேசுவின் நாமமே மேலானதே
இதுவரையில் உதவினீரே
இந்நாள் வரை காத்தினீரே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே
இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இயேசுவின் நாமத்தில் அற்புதமே
இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு
இயேசுவின் நாமம் மேலானதே
இயேசுவே தூயவர்
இயேசுவே ஆண்டவர்.

MAARUM IVV ULAGINILE MAARADHA

மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை
மாறிடும் மனிதன் மாறிடுவான்
மாறாத தேவன் இயேசுவன்றோ

1. பட்டது போதும் சுட்டதும் போதும்
கண்ணீரும் போதும் கவலையும் போதும்
உம் கிருபை எனக்கு போதும் போதும்
மன்னவா எனக்கு நீர் தான் வேணும்

2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்
ஒரு நாள் கை விட்டு ஓடும்
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்