Tuesday, December 8, 2015

boomikkoru punitham vanthathippo



பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால்

                      பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும்
                     இனி எல்லை இல்லை இறைவன் பிறந்ததால்


1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே  வசந்தத்தின் துவக்க நாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்  - 2
இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசு பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்

2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவன் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்த நாள் -  2
பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்