Sunday, June 7, 2015

UMMAI APPANU KOOPIDA AASAI LYRICS


உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

1. கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu


உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

KARTHANE EMM THUNAIYANEER LYRICS



கர்த்தனே எம் துணையானீர்
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் என் நிழலானீர்
கர்த்தனே என் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார் - 2
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் - 2
இராஜா உம் அன்பு என்னைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் - 2
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
இராஜனே உம்மைப் பாடக் கூடுமோ?
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை

Kartharai nambiye jeevippom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
  கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

1. ஜீவதேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மாசமாதானம் தங்கும்

2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார்

3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்

4. அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்

5. நீதிமானின் சிரசின்மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை, நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே

6. இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை இராஜ்ஜியத்தில்

AZHAGAI NIRKUM YAAR IVARGAL LYRICS


அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி
செய்து முடித்தோர் – அழகாய்

2. காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் – அழகாய்

5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று – அழகாய்

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும், அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை – அழகாய்

7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே – அழகாய்

Aananthamai naame Aarparippomeh

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
  1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே - அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

2. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்

3. படகிலே படத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்
காப்பாரே அல்லேலூயா

4. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்

POTRI THUTHIPOM EM DEVA DEVANAI LYRICS


போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
 நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
.
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)

2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)

3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)

Pavangal Pokave Sabangal Neekave


பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2

கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
எந்தன் இயேசுவே – 4

2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
எந்தன் இயேசுவே – 4

Pendhaekosthe Anubavam thaarume


பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

Kirubaiyal Nilai Nirkirom


கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை – (7) – கிருபையால்

1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்

2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்

3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்

4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்தது உங்க கிருபை
கிருபை – (7) – கிருபையால்

5. கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை – (7) – கிருபையால்

Katta Patta Manitharellam


கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா… தேவா…

1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே

2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்

3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்

4. இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்

6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

Karthave Devargalil umakkopanavar yaar


கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ?

செங்கடலை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை நடத்தி சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்
ஜனங்களை போஷித்தீரே
உம்மைப்போல் யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட

கன்மலையை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம் இன்றும்
அற்புதம் செய்திடுவீர்

Kartharai Nambidungal


கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவேமாட்டார்
1. உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையைவிட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை
கர்த்தர் காக்கின்றார்
2. கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்

Kalangathe Kalangathe Karthar


கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்

Kadanthu Vantha Pathaigalai thirimbi parkiren


கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

ITHUVARAI SEITHA SEYALGALUKKAGA TAMIL LYRICS


இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Galileya Endra Ooril


கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே
1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

ENDRUM ANANDHAM ENN YESU LYRICS


என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)

1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்

2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்

3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்

4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு

5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்

6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்

7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்

EN UYIRANA YESU LYRICS


என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே

DEVA KIRUBAI ENDRUM ULLATHU LYRICS


தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1. நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே

AAVIYANAVARE ANBIN AAVIYANAVARE LYRICS


ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

AMEN ALLELUJAH MAGATHUVA THAMBARABARA LYRICS

ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா

 பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!
அனந்த தோத்திரா

அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே

சரணங்கள்
1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்

2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,
ஜீவனே விடிந்து, - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது

3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
சொல்லுகிறோம் நாதா

NANDRI ENDRU SOLLUGIROM NAADHA LYRICS


நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றிராஜா
அன்பே என் ஆறுதலே நன்றிராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா

6. சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றிராஜா
புதுபெலன் தந்தீரே நன்றிராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றிராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றிராஜா

DEVA SAAYAL AAGA MAARI LYRICS

தேவசாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் - நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன்

2. +மியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழித்திடுமே
கை வேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன்

3. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார்

4. ஆவியின் அச்சார மீந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே

5. காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம் வாரும் என்று கூப்பிடுதே

7. உன்னத சீயோன் மலைமேல் எனதருமை இயேசுவுடன்
ஜெபவீட்டினிலே மகிழ்ந்தே நான் ஜீவிப்பேனே நீடுழியே

STHOTHIRAMYESU NADHA LYRICS

1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!

2. வான தூதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!

5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!

6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!

AATHUMAME EN MUZHU ULLAME LYRICS


ஆத்துமமே, என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை
அன்பு வைத்தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், +தலத்துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள

2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும், மேலான

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தலைசெய் துயிர்தந்த

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்

6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே

AATHARAM NEER THANAIYA LYRICS



ஆதாரம் நீ தான் ஐயா
ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே
ஆதாரம் நீ தான் ஐயா.

சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் -

1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா எளியன்மேல்
மற்றோர்க்குப் பற்றேதையா எளியனுக்கு

2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு

3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே என்பதியே
வற்றாக் கிருபை நதியே என்பதியே

4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு