Thursday, November 7, 2019

ITHU ATHISAYAME ENAKAANANTHAME

இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்

விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணிலே தம் மனதில்
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய்த் தோன்றினார் - தேவ

மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மா பிரபையோடிலங்கும் மகிபன்
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே இயேசுவையே -எந்தன்

சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே எந்தன்

பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில்

சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்

INDHA ULAGAM ENNAI PAARTHADHU POLA

இந்த உலகம் என்னை பார்த்தது போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதே x (2)

உங்க சிலுவையால் வாழ்கிறேன்  
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் x (2)
We ara the J Generation (4)

தாயின் கருவில் உருவாகும் முன்னே  
என்னை நீர் கண்டீரே 
இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை 
என்னைபெயர் சொல்லி அழைத்தீரே x(2)

உங்க சிலுவையால் வாழ்கிறேன்  
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் x (2)
We ara the J Generation (4)

வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ 
உம்மை விட்டு பிரியேனே
இந்த உலகம் முழுதும் 
உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே x(2)
இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன்  
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன்x (2)

We ara the J Generation (4)
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க இயேசுவின் சந்ததி 
Jesus ....We ara the J Generation
Jesus ....We ara the J Generation

INDRU NAMAKAGA MEETPAR PERANTHULLAR

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)
ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறங்கள் (2)
வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் -2
கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்

IMMANUELIN RATHATHAL NIRAINTHA

இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே 
எப்பாவத் தீங்கும் அதினால் 
நிவிர்த்தியாகுமே 

பல்லவி

நான் நம்புவேன் ! நான் நம்புவேன் ! 
இயேசு எனக்காய் மரித்தார் - மரித்தார் 
பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்
தேவனைத் துதியுங்கள் 

2. மா பாவியான கள்ளனும் 
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான் --- நான்

3. அவ்வாறே நானும் யேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன் --- நான்

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை 
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் --- நான்

5. பின் விண்ணில் வல்ல நாதரை 
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன் --- நான்

YESU KRISTHUVIN NAL SEEDARAGUVOM

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் 
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே 
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே 
இனி நான் அல்ல , அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

YESUVALE PIDIKKAPDDAVAN AVAR

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் -அவர்
இரத்தத்தாலே கழுவப்பட்டவன் -நான்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்லை

எல்லாமே இயேசு..... என் இயேசு
எல்லாமே இயேசு இயேசு இயேசு

பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே

அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
இந்த அடிமையை தெரிந்தெடுத்தார்

இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் -நான்

பாடுகள் அனுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் -நான்

பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்

IYAESUVAE UM VARAVAI NITHTHAM

இயேசுவே என் ஏக்கம்
இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2

இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2

1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2

2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2

3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2

ISRAVELIN JEYABELAME ENGEL SENAIYIN

இஸ்ரவேலின் ஜெயபெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே

உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்

நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்

பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே

எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே 

ISRAVELE ISRAVELE NEE YAEN


பல்லவி
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் - 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ திகையாதே - 2

சரணம் I
இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்
தரவில்லையே -2 
இருளை அகற்றி ஒளியாய் உன் முன்
நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ - 2

சரணம் II
காக்கும் தேவன் உன்னை தோளில்
சுமக்கவில்லையோ - 2
சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து
உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ
(உன் வாழ்வு செழிக்கவில்லையோ)

சரணம் III
செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்
செய்யவில்லையோ - 2
எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி
கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ - 2

UNNAI KAANGIRAAR UN KANNEER

உன்னைக் காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் -உன்னை

1. நோய்நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார்

2. கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார்

3. எதிர்காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்

4. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள்

5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம்
நற்செய்தி முழங்குவோம்

UNNATHA MANAVARIN UYAR MARAIVILIRUKKIRAVAN

1. உன்னதமானவரின் – உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே 
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் 

2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே — அவர்

3. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் — அவர்

4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே — அவர்

5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் — அவர்

6. உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் — அவர்

7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார் — அவர்

8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் — அவர்

ANDAVAR PADAITHA VEATTRIEN NAALITHU

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு


1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2


தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்


2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி


3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி


4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி