Tuesday, November 12, 2019

DESAMEY PAYAPPADAATHEY MAGILDHU

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில் 
பெரிய காரியம் செய்திடுவார்

1.பலத்தினாலும் அல்லவே 
பராக்கிரமம் அல்லவே 
ஆவியினாலே ஆகும் 
என்று ஆண்டவர் வாக்கு அருளினாரே

2.கசந்த மாரா மதுரமாகும் 
கொடிய யோர்தான் அகன்றிடும் 
நித்தமும் உன்னை நல்வழிநடத்தி 
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

3.கிறிஸ்து இயேசு சிந்தையில் 
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய் 
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்

No comments: