கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ
நெஞ்சுக்குள்ளே என்னை மறைந்ததும் ஏனோ
பேர்சொல்லி அழைத்தவன் தேவனல்லவோ
உனக்குள் வாழ்வது என் ஜீவனல்லவா
எப்படி நான் மறப்பேன் - உன்னை
எப்படிக் கைவிடுவேன் -
எப்போதும் உன்னோடு இருக்கின்றேன் நானே
உனக்குள் கலக்கங்கள் வருவதும் வீனே
- கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ
1.தாயின் கருவில் உருவாகுமுன்னே உன்னைக் கண்டேன்
எத்தனை பேரிந்தும் உன்னை மட்டும் தெரிந்து கொண்டேன்
என்னேடக் கண்களை நான் உம் மேலதான் வச்சிருந்தேன்
என் நாளும் உனக்கு நல், ஆலோசனை சொல்லித் தந்தேன்
ஏனிந்த வேதனைகள் இ வீணான சோதனைகள்
என்னை நீ மறந்ததெல்லாம் உன்னோட பாவங்கள்
ஆனாலும் நான் மன்னித்தேன் - உன்னை நான் நேசித்தேன்
மண்ணென்று நினைவு கூர்ந்தேன்
- கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ
2.ஆகாரின் அழுகுரல் கேட்டவரும் நான்தானே
அவளின் அன்பு மகன் தாகம் தீர்த்த தேவன் தானே
அன்னாளின் கண்ணீரைக் கண்டவரும் நான் தானே
ஆறுதலாய் பிள்ளைச் செல்வம் தந்த கர்த்தர் நானே
ஏத்தனை அற்புதங்கள் - என்னென்ன மகத்துவங்கள்
உன் வாழ்வில் பெற்றுக் கொண்ட - கோடான கோடி நன்மைகள்
எண்ணிப்பாரு தேவ மகிமையை - என்னை
விசுவாசித்தல் காண்பாயே - இன்னமும் அழுவதேன்
- கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ