Tuesday, March 3, 2020

SAMAATHAANAM NALKUM NAAMAM

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே 
மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே
இயேசு நாமமே, இயேசு நாமமே 
கிறிஸ்தேசு நாமமே (2)

1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே

2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே 
உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே

3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே 
ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே

4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே 
என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

KIRISTHUVUKKUL VAZHUM ENAKKU

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி உண்டு வெற்றி உண்டு

என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு

பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

KARIRULIL EN NAESA THEEPAMAE

1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே

2. என் இஷ்டப்படி நடந்தேன் , ஐயோ! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் , இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

GALEELIYA KADALORAM

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்


1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது


நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு


2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே


3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே 

KALANGINA NERANGALIL KAI THOOKI

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை

தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ
நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ

மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை.

CHRISTHUVIN SAYAL THARITHIDA

கிறிஸ்துவின் சாயல் தரித்திட
தந்தேன் என்னை முழுவதுமாய்
உம்மைப் போல் மாறிட வாஞ்சிக்கிறேன்
மாற்றிடும் என்னை முழுவதுமாய்

உம்மைப் போல் மாற்றிடும்
உம்மைப் போல் வனைந்திடும்
உம்மாக மாறிட வாஞ்சிக்கிறேன்
மாற்றிடும் என்னை முழுவதுமாய்

தாழ்மையின் சிந்தை தரித்திட
தந்தேன் என்னை முழுவதுமாய்
மரண பரியந்தம் தாழ்த்தினீரே
தாழ்த்துகிறேன் என்னை முற்றிலுமாய்

அன்பு என்னில் பெருகிட
அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
அக்கினி அபிஷேக என்னில் ஈந்திடும்
அனலாய் என்றும் பிரகாசிப்பேன்

SATHTHIYA THAEVANIN POORANA VAALVAI

சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய் நான் பெறவேண்டும் 

1. தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க
இயேசுவை நோக்கித் தொடர உதவும்

2. துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்
துணிந்து நின்ற யோபுவைப்போல
அனைத்து வளமும் அகன்று போனாலும்
ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் 

3. கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட
இலட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதிநாள் வரை உண்மையாயிருந்து
அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன்

SAAMBALUKKU SINGAARATHAI THANTHAR

சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்
துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்
துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்
நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்
இராஜரீக கூட்டமானேன்

1. வெட்கமா? நற்பலனும் நாடி வரும்
துன்பமா? சந்தோஷமும் தேடி வரும்
அடிமையா? சுதந்தரமும் கூடி வரும்
நெருக்கமா? விடுதலையும் ஓடி வரும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்
ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்

2. அழுகுரல் களிப்பாக மாறிவிடும்
நீதியோ துளிர்போல முளைத்திடும்
பாழ்நிலம் புதிதாக மாறிடும்
செல்வமோ குறைவின்றி சேர்ந்திடும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்
ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்

SUMAI SUMANTHU SORNTHIRUPPORAE

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே 
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார் 
இளைப்பாற்றி கொடுக்கின்றார் 
இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் – 2 
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்
வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் – 2 
வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்

துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் – 2 
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்
வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே 
வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்

SORNTHU POGATHE MANAME

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)

கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ

வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு

துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ

சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்

THEEVINAI SEIYATHE MAA SOTHANAIYIL

தீவினை செய்யாதே மா சோதனையில் 
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் 
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
ஆற்றித் தேற்றியே காப்பார் 
நித்தம் உதவி செய்வார் 
மீட்பர் பலனை ஈவார் 
ஜெயம் தந்திடுவார்
வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் 
சேராமலே நீங்கி நல்வழியிலும் 
நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான் 
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான் 
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

THUDIPPADE ENN THAGUTHIYALLO

துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே

DEVANE YESU NATHANE

தேவனே யேசுநாதனே இத்
தேவ ஆலயம் வந்திடும்
தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்

பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
பாத்திரர்களோ அல்லவே
பாவநாசராம் யேசுவே உம்மால்
பாத்திரராய் இதைச் செய்தனர்

கூடிவந் தும்மையே பணிந்திடக்
குறித்த இச்சிறு ஆலயம்
நாடி வந்தவர் யாவருக்குமுன்
நல்வசன முளதாகவும்

தேவனே உமக்கான ஆலயம்
பாவியின் சிறு நெஞ்சமே
பாவம் யாவையும் நீக்கியே சிறு
தேவ ஆலய மாக்கிடும்

UNGA PRESSANATHIL

உங்க பிரசன்னத்தில் 
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்

என் தஞ்சமானீரே 
என் கோட்டையானீரே 
என் துருகமானீரே 
என் நண்பனானீரே 

உதவாத என்னையே
உருவாக்கும் உறவே 
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே 

பொய்யான வாழ்வையே 
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே

UYIRE EN AARUYIRE

உயிரே என் ஆருயிரே
என் உயிரே உம்மை மறவேன்
உம் பாதம் சேர்ந்தேனே
என்னையே தொலைத்தேனே
உம் அன்பால் நிதம் நிதம்
என்னை தொலைத்தேனே
உம் அன்பின் மலரிலே
எந்நாளும் வாசம் நான்
அபிஷேக தென்றலிலே
மகிழ்ந்திடும் சோலை நான்
ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே
உம் மார்பில் சாய்ந்தாலே
என்னையே மறப்பேனே
உம் பாச நேசத்தால்
என்னை மறப்பேனே
உம் பாச மழையிலே
எந்நாளும் துளிகள் நான்
உம் பிரசன்ன காற்றிலே
மகிழ்ந்திடும் மனிதன் நான்
ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே

MANUSHARAI KATTI IZHUKKUM

மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன்
தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே
(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே 
உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே 
செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
எதுவும் என்னை பிரித்திட முடியாது