Tuesday, November 12, 2019

UNNAI THEDI VANTHEN



உன்னைத் தேடி வந்தேன் சுமை தீரும் அம்மா 
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா 

முடமான மகனை நடமாட வைத்தாய் 
கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய்  (2)
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய் 
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய்  -- (உன்னைத் தேடி...)

கடல் நீரும் கூட உன் கோவில் காண 
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் 

அன்பாகி எமக்கு அருள் தாரும் அம்மா  -- (உன்னைத் தேடி...)

No comments: