Saturday, June 2, 2018

EN NAMBIKAIYAE UMAKKU STHOTHIRAM LYRICS


என் நம்பிக்கயே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைதான் நான் நம்பி இருக்கென்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
1. நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க
2. ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ரெட்டிப்பாண நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே
இன்றைக்கெ தந்ததிடுங்க இப்பவே தந்ததிடுங்க
3. உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐஷ்வரியம் கணமுமே உம்மாலே தான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மென்மைபடுதுங்கப்பா

EN YESU RAJA SARONIN ROJA TAMIL LYRICS


என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

ELLA NAMATHIRKUM MIGA MELANA LYRICS


எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே – 2
இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே
2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
கிறிஸ்தேசுவின் நாமமே
3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே

VANDHARULUM THOOYA AAVIAYAE LYRICS


வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே
ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே
அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் தூய ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே
ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்திடுமே தூய ஆவியே
வழிகாட்டும் தூய ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே

VALLAMAI UNDU UNDU ARPUTHA LYRICS


வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!
There is power, power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb.

VAANAMUM BOOMIYUM PADAITHTHA DEVAN LYRICS


வானமும் பூமியும் படைத்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)
சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)
பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவமாக மாறினீரே
பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)
யூ அலோன் ஆல் ஹோலி
யூ அலோன் ஆல்மைட்டி
யூ அலோன் ஆல் வர்தி
தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (2)

VISUVASIYIN KATHIL PADA YESU LYRICS


விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்
1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே – விசுவாசியின்
2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும் – விசுவாசியின்
3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் – விசுவாசியின்
4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே – விசுவாசியின்
5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே – விசுவாசியின்

YAAR VENDUM NATHA NEERALLAVO LYRICS


யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்
3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

YESU RAJA VANTHIRUKIRAR LYRICS


இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்
1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்
2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கிறார்
ஓடிவா என் மகனே (ளே)
3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்
4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே – நம்ம
5. பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்
6. கசையடிகள் உனக்காக
காயமெல்லாம் உனக்காக
திருஇரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே!

PAADUVOOM MAGILVOOM KONDADUVOM LYRICS


பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்


1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி


2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்கும் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்;தானையா
என் பிரியமும் நீர்தானையா


3. கல்வாரி சிலுவையினால்-என்
சாபங்கள் உடைந்ததையா
ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்கு கிடைத்ததையா


4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து -உம்
அன்பை ஊற்றினீரே


5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன்-என்
உயிரான கிறிஸ்து வந்ததால்-உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

NEER ENTHAN KOTTAI LYRICS


1. நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் துருகம்
நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே
நீர் எங்கள் ராஜா
சாரோனின் ரோஜா – இயேசுவே
உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் போற்றுவேன்
உம்மையே நான் புகழுவேன்-2
2. நீர் பரிசுத்த தேவன்
நீர் மகத்துவ தேவன்
நீர் வல்லமை தேவன் – இயேசுவே
நீர் எங்கள் சத்தியம்
நீர் எங்கள் நித்தியம்
நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே
உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் வாழ்த்துவேன்
உம்மையே நான் வணங்கிடுவேன்-2

KALANGATHE MEGANE MAGALE LYRICS


கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் – 3
1. மலைகள் பெயர்ந்து கோலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் – 3
2. உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்
3. தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்
4. வியாதி வறுமை நெருக்கலாம்
சோதனை துன்பம் சூழலாம்
உன்னை மீட்டவரோ
உன்னைக் காத்துக் கொள்வார்

KATTI PIDITHEN UNTHAN LYRICS


கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா
1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
உம் வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

EN AANDAVAR EN RATCHAGA LYRICS


என் ஆண்டவா என் ரட்சகா
என் மேய்ப்பரே என் மீட்பரே
நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு
1. துக்கம் வந்து நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் பக்கம் வந்து நிற்பேன்
என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்
2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் சமூகம் வந்து சொல்வேன்
நீர் யுத்தம் செய்திடுவீர்
3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
நான் முன்னேற முடியாத நேரம்
உம் சமூகம் வந்து துதிப்பேன்
என்னை முன்னேற செய்திடுவீர்

DEVANUKE MAGIMAI DEIVATHIRKE MAGIMAI LYRICS


தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க
1. உன்னத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டும் – ஐயா
3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா
5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா

ARPANITHEN ENNAI MUTTRILUMAAI LYRICS


1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன் 
அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே 
2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 
3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் 
4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்

ARABIKADAL VATRINAALUM YAESU ANBU LYRICS

அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2)
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் (2)
என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம் (2)
பார்வையிலும் எந்தன் பாதையிலும்
என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
என் துன்பங்களை வந்து நீக்குகின்றார் 
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக் கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா 
என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (2)
வாழுகின்ற அந்த காலம் வரை
என் தேவனவர் என்றும் எனக்குத் துணை
பாடுகின்ற இந்த பாவியென்னை என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா 
நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2)
கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள்
உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
உன் வழிகளை நீ ஒப்புவித்தால்
எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா 

KAVALAIGAL KANNEERGAL SOOZHNDHA LYRICS


கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் – 2
கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்
நீர் தானே பேரின்பம் -2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 
1. பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்
ஒரு நாளில் பல மாற்றம் அடைவதைக் கண்டேன் – 2
மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்
மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 
2. உமக்காக வாழ்ந்து உமக்காக மறிக்கும்
ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம் கேட்டேன் – 2
உலகத்தின் கரங்கள் அதைத் தாக்கும்போது
உன்னதா உம் கரத்தால் எனைத் தூக்கக் கண்டேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 
3. அழுகையின் பள்ளத் தாக்கினைக் கடந்து
அருமையாய் நீரூற்றை என் வாழ்வில் கண்டேன் – 2
கண்ணீரால் நானும் விதைதிடும் விதைகள்
கெம்பீர அறுவடையாய் உம் கரத்தில் பெறுவேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் – 3

MEGANGALUDANE VARUGIRAAR KANGAL LYRICS


மேகங்களுடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரைக் காணும்
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு வருகிறார்
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
1. இருந்தவரும் இருக்கின்றவரும்
வருபவரும் சர்வ வல்லவர் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே
2. அல்பாவும் ஒமேகாவும்
ஆதியும் அந்தமுமானவர் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே
3. முந்தினவரும் பிந்தினவரும்
மரித்தவரும் உயிரோடிருக்கிறார் (2)
இயேசுவே உமக்கே மகிமை
இராஜனே உமக்கே மகிமை (2)
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)
– மேகங்களுடனே

NIRAPPIDUME ENNAI NIRAPPIDUME LYRICS

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா -2X
1. பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே
2. அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்
3. பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே
பெரும் காற்றே இங்கு வீசிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2

PAVANGAL POKAVE SABANGAL NEEKAVE LYRICS


பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
எந்தன் இயேசுவே – 4
2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
எந்தன் இயேசுவே – 4

PAAVA SANJALATHAI NEEKA PRANA LYRICS


1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்
2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்
3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

PARISUTHARAE ENGAL YESU DEVA LYRICS


பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை
அல்லேலூயா
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்
வருத்தங்கள் பசிதலம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

POORANA AASEER POZHINTHIDUME LYRICS


1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே
வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே
2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே
3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா
4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்
5. குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே
6. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

THAVITHAI POLA NADANAMADI LYRICS


தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தாப்பேன்
5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

THUTHIPAEN THUTHIPAEN DEVANAI LYRICS


துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்
2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்

UMMODU IRUKANUME IYYA UMMAI LYRICS


உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே
3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான்
4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கள் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே – நான்
5. வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான்

UNNATHA DEVAN UNNUDAN IRUKKA LYRICS


உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் நல்லவரே என்றும் வல்லவரே
நன்மைகள் குறையாதே
பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கினாரே
தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கினாரே – உன்னத
அந்நாளில் தம் பாதம்
அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் திரிந்த
அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத
இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானைக் கடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத

UTHAMAMAI MUN SELLA UTHAVI LYRICS


உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2
1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும்
2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள் உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும்
3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம்
4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே

VALLAMAIYIN AAVIYANAVAR ENNUL LYRICS


வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை – ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்


1. Power ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை


2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை ஊழவெசழட பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன்நான்


3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
மீட்பு பெறும் அனைவருக்கும் -நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்


4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
இந்த ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் – நான்
எப்போதும் சுவை தருவேன்


5. கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் – நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்


6. தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை

VIZUKUTHU VIZUKUTHU ERIKO KOTTAI LYRICS


விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்
யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்
கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே
மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்
அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்
தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்
செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்

YESU NALLAVAR PAATTU PAADUNGAL LYRICS


இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)
மனதுருக்கம் நிறைந்தோரவர்
மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்
2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)
உலகெங்கும் சென்றிடுங்கள்
ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்
3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் (2)
பாதாள வல்லமைகள்
பரிகரிக்க பிறந்தாரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்