Wednesday, March 21, 2018

PARISUTHAMANA PARANE ENNAI

பரிசுத்தமான பரமனே என்னை 
பாத்திரன் ஆக்கிடுமே 
பரம தரிசனம் தாருமே தேவா 
பரிசுத்த மாக்கிடுமே

கர்த்தருக்கு பரிசுத்தம் 
கருத்துடன் நெற்றியிலே 
பதித்திட உதவி செய்யும் 
பரமனே சுத்தமாக்கும்

அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண 
அடிமைக்கு உதவி செய்யும் 
இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு 
இரங்கிடும் இந்நேரமே

பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக 
காத்திட உதவி செய்யும் 
நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த 
பரிசுத்தம் தந்திடுமே

தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு 
தூயனே துணை செய்வீர் 
வல்லமை தரித்து நான் வாழ்ந்திட இன்று 

உம் ஆவி தந்திடுமே