Tuesday, September 29, 2015

ENDRENDRUM JEEVIPPOR ATHARISANOR

என்றென்றும் ஜீவிப்போர்
  1. என்றென்றும் ஜீவிப்போர்
அதரிசனர்
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
மா மேன்மை மகத்துவர்
அநாதியோராம்
சர்வவல்லோர் வென்றோர்
நாமம் போற்றுவோம்.

2. ஓய்வோ துரிதமோ இன்றி
ஒளிபோல்
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
வான் எட்டும் மலைபோல் உம்
நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும்
உந்தன் மேகமும்.

3. பேருயிர் சிற்றுயிர்
ஜீவன் தேவரீர்
யாவர்க்குள்ளும் உய்வீர்
மெய்யாம் ஜீவன் நீர்
மலர் இலைபோல்
மலர்வோம் செழிப்போம்
உதிர்வோம் சாவோம்
நீரோ மாறாதோராம்.

4. மா மாட்சி பிதா தூய
ஜோதி தந்தாய்
தாழுவர் உம் தூதர்
மா வணக்கமாய்
துதிப்போம் மகத்தாய்க்
காணத் தோற்றுவீர்
கண் கூசும் ஜோதியாம்
ஜோதி தேவரீர்.

EPPADI PAADUVEN NAAN EN

எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்iலை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்


3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசிர்வதித்தீர்

YERUSALEM EN AALAYAM AASITHA

1.எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே@
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.

2.பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?

3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.

4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5.எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்@
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?

ETHAVATHU ETHAVATHU ETHAVATHU SEIYA VENDUM

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு

1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்

2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை

3. தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்
தாங்க வேண்டும்

oru thai thetruvathu pol en

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் - அல்லேலூயா (4)

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

3. எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

4. ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்