Saturday, October 22, 2022

KAALAA KAALANGAL KATHIRUNTHOM TAMIL LYRICS

பாவமில்லை இனி
சாபமில்லை இனி
மரணமில்லை இனி
கண்ணீரில்ல
துன்பமில்லை இனி
கவலையில்ல இனி
தோல்வியில்லை இனி
தொல்லையில்ல
அடிமையில்லை இனி
வியாதியில்ல இனி
கஷ்டமில்லை இனி
வருமையில்ல

காலா காலங்கள் காத்திருந்தோம்
காதலன் இயேசு பிறந்து விட்டார்
கோடா கோடியாய் தூதர்கள் பாடிட
தூயவர் பிறந்துவிட்டார் - 2
இருள் நீக்கவே அருள் சேர்க்கவே
நமக்காகவே அவர் அவதரித்தார்
பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே
நமக்காவே அவர் அவதரித்தார்
வானம் பூமி யாவும் அவரைப் பாட
                     - காலா காலங்கள்

இனி மனிதனும் இறைவனும் இணையலாம்
அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் - 2
அப்பா என அன்புடன் அழைக்கலாம்
பிள்ளை போல் மார்பினில் மகிழலாம் -2
                      - பாவமில்லை இனி

இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம்
மரித்தோரும் உயிருடன் எழும்பலாம் - 2
அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம்
விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம் - 2
                     - காலா காலங்கள்

SOORIYAN UTHITHATHU KAARIRUL MARAINTHU TAMIL LYRICS

சூரியன் உதித்தது காரிருள் மறைந்தது
புதிய நம்பிக்கை உலகில் தோன்றினது
கல்லறை திறந்தது மரணம் தோற்றுப்போனது
யூத ராஜ சிங்கம் வெற்றி சிறந்தாரே
இவரே உலகின் இரெட்சகர்
பாடுவோம் கொண்டாடுவோம்
வெற்றி சிறந்தாரே
மனிதனாக வந்த தேவனே
வாழ்கவே வாழ்கவே எங்கள் தேவனே

கல்லறையில் இயேசுவை காணவில்லையே
கவலையுற்ற மரியாளை இயேசு கண்டாரே
மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடு இருக்கிறேன் என்று சொன்னாரே
மரணத்தை வென்ற தேய்வமே
ஆற்றுவார் மாற்றுவார் எங்கள் காயத்தை
மகிமையாய் மீண்டும் வருவாரே
வாழ்கவே வாழ்க எங்கள் தேவனே

ஆதி அந்தம் ஆனவர் நீர் ஒருவரே
உலகம் தோன்றும் முன்னமே
இருந்த வார்த்தையே
துதியும் கனமும் மகிமையும்
வல்லமையயும் சிரசில் கிரிடமாக
அணிந்த ராஜ ராஜனே
அவரில் மரித்த மனிதர் யாவரும்
அவரோடு எழுவாரே ஆழுகை செய்வாரே
இன்றும் என்றும் ஆழும் தெய்வமே
வாழ்கவே வாழ்க எங்கள் தெய்வமே