Friday, June 12, 2015

SAMAYAMITHU NALLA SAMAYAM

சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே

அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-

சரணங்கள்
யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம

ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை, - சம


ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், - சம

பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சம

KALYANAMMA KALYANAM

கலியாணமாம் கலியாணம்
கானாவூரு கலியாணம்
கர்த்தன் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
கலியாணமாம் கலியாணம் ஆ-ஆ-ஆ-

1.விருந்தினர்கள் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே...
அறிந்த மரியாள் அவரிடம்
அறிவிக்கவே விரைந்தனள்

2.கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய் ....
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்

3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்

NALLAVI OOTRUM DEVA LYRICS

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதி பாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தேகொஸ்தே நாளிலே
   உந்தனாவி ஈந்தீரே
   இந்த வேலையில் இறங்கிடுவீரே
  விந்தை செய் விண் ஆவியே

2.மெத்த அசுத்தன் நானே
   சுத்தாவி கொண்டென்னையே
   சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
 
3.ஆவியின் கனி ஒன்பதும்
   மேவி நான் தந்திடவும்
    ஜீவியமெல்லாம் புவி மீதிலே
    சுவிசேடப் பணியாற்றவும்

4.பாவம் செய்யாதிருக்க
   பாரில் சாட்சி பகர
   பார் மீட்க வந்த பரமனையே
   பாரோர்க்கு எடுத்துரைக்க

NANDRIYAL NENJAM NERAITHEDUTHE LYRICS

நன்றியால்  நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே ... ஆ ! ஆ !

சரணம்
1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
  ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
  சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
  தூயநல் தேன் மலர் தீங்கனிகள்.

2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
 எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
 துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்

3. உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
    உதவிகள் செய்திட பல்பணியர்
   அறவழி   காட்டிட அருள் பணியர்
  அன்புடன் ஏற்றிட ஆண்டவர்

4.உருவுடன் விளங்கிட ஒருடலம்
   உடலதில் இறைவனுக்கோர் இதயம்
  பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
   திருமறை பேசிடும் வானுலகம்

KALVAARI MALAIYORAM VAARUM

கல்வாரி மலையோரம் வாரும்
கல்வாரி மலையோரம் வாரும் - உம்
பாவம் தீரும்.
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே.
சரணங்கள்
1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய் திரண்டு,
   நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,
   தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
   சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு ,
   சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா - ஜோதி

2. ஒண்முடி மன்னனுக்கு முன்முடியாச்சோ
    உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ ?
   விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ ?
   மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?
   மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே- ஜோதி

3.மலர்ந்த சுந்தர கண்கள் மயங்கலுமோ
  மதுரிக்கும் திருநாவு வரண்டதுமேனோ
  தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ ?
  தண்ணீரில்    நடந்த பாதம் சவண்டதுமேனோ?
 சண்டாளர்கள் நம்மால் தானே நம்மால் தானே  - ஜோதி




IYANE UMADHU THIRUVADIGALUKKE

1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
 ஆயிரந்தரந் தோத்திரம் !
 மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
 விவரிக்க எம்மாத்திரம்?

2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
    சேர்ந்தர வணைத்தீரே:
    அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
    யாகவா  தரிப்பீரே .

3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
   ஏழையைக் குணமாக்கும்
   கருணையாய்  என்னை உமதகமாக்கிக்
   கன்மமெல்லாம் போக்கும்.

4. நாவிழி செவியை நாதனே, இந்த
   நாளெல்லாம்  நீர் காரும்.
  தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
  தெய்வமே , அருள் கூரும் .

5.கைகாலால் நான் பவம் புரியாமல்
  சுத்தனே துணை நில்லும்
  துய்யனே , உம்மால் தான் எனதிதயம்
  தூய் வழியே செல்லும்.

6. ஊழியந் தனை நான் உண்மையாய்ச் செய்ய
   உதவி நீர் செய்வீரே .
   ஏழை நான் உமக்கே இசையானால் ஆவி
  இன்பமாய்ப் பெய்வீரே.


7.  அத்தனே ! உமது மகிமையை நோக்க 
    அயலான் நலம் பார்க்கச் 
    சித்தமாய் அருளும், மெய் விசுவாசம் 
    தேவனே உமக் கேற்க.
 
8. இன்றும்  என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ 
    டேயடியேன்  நடத்தப் 
    பொன்றிடா பலம் தாரும் , என் நாளைப் 
    பூவுலகில் கடத்த 
 
9. இந்த நாளிலுமே திருச்சபை வளர 
    ஏகா தயைகூரும் 
    தந்தையே , நானதற்  குதவியாயிருக்கத் 
   தற்பரா வரந் தாரும்

SILUVAI SUMANTHA URUVAM

சிலுவை சுமந்த என் இயேசு
சிந்தின இரத்தம் புரண்டோடியே
 நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை காணாய்
நிலையான சந்தோஷம் பூவினில்
 கர்த்தாவின் அன்பண்டையில் வா

ஆத்தும  மீட்பை பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே

பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்

நித்ய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்

தாகமடைந்தோர்  எல்லாருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்

THETTRARAVAALAN YESUVE

தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே – 2

தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2

தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

1. வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றி தவிக்கும் நேரத்திலே – 2
பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில்
கடலினில் தரைவழி தந்தவர் நீர் – 2

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

2. இருண்ட வாழ்க்கை பாதையிலே  
இன்னல்கள் சூழ்ந்திட்ட நேரத்திலே – 2
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் – 2

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

3. மனுஷரின் வார்த்தை மாறாகி
  மனதினில் துயரங்கள் அழுத்துகையில் -2
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையின் வார்த்தையால் மகிழச்செய்தீர் –2

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே –2

தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2

தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

NAMBI VANTHA MANITHERKELLAM

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2

1.மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக்கொள்வீர் – 2
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்
அணுகாமல் காப்பாற்றுவீர் – 2
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2

2.என் பெலன் நீர்தானே
கேடகமும் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2


3.கானானிய பெண் ஒருத்தி
கத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள்
அம்மா உன் விசுவாசம் பெரியது என்று
பாராட்டி புதுமை செய்தீர்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2

NAMBIKKAI NAGOORAM NAAN NAMBUM DEIVAME

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே


1. பார்வோனை வென்றவரைத் துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் – 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர்  வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே


2. கன்மலையை பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் – 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே


3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம் – 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

என் நம்பிக்கை நீர்தானே
என் நங்கூரம் நீர்தானே – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

NALLA POORSEVAGANAI - VARUM

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்


1. பக்தியோடு வாழ விரும்பும்
பக்தர்கள் யாவருக்கும்
பாடுகள் வரும் என்று
பவுல் அன்று சொல்லி வைத்தாரே

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்


2. வேதனைகள் வழியாகத்தான்
இறையாட்சியில் நுழைய முடியும்
சிலுவை சுமந்தால்தான்
சீடனாக வாழ முடியும்

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்


3. துன்பங்களை சுமக்கும்போதெல்லாம்
வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம்

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்


4. இயேசுவின் நாமத்தினிமித்தம்
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
என்று இயேசு சொல்லி வைத்தாரே

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்

NAAN UYIRODU IRUKKUM NAALELLAM

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2


1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

NAAM AARAATHIKUM DEVAN NALLAVAR

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2
எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே – 2
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே


1. நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜூவாலை நம்மை அவியாமல் காத்திடுவார்

இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே


2. நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன்சென்றிட கரம்பற்றி நடத்திடுவார்

இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே


3. சத்துருவின் கோட்டைகளைத் தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட தாங்கியே நடத்திடுவார்

இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே  – 2
எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே – 2
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே

NAAN UNNAIVITTU VILAGUVATHILLAI

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே – 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் – 2
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2


2.திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடன் இருக்க பயமேன் – 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – 2
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

3.அனுதினமும் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் – 2
அத்திமரம்போல் செழித்திடுவாய் – 2
நான் ஆசையாய் உண்ணக் கனிக்கொடுப்பாய் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

NIRMULAMAGATHIRUPPATHU UNTHAN MAA KIRUBAI

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்

கிருபை கிருபை
மாறாத கிருபை


1.கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே – 2
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2


2.கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2


3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

NEE MALAIMEL ULLA PATTANAM

நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழுந்து ஒளி வீசு – 2
1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
சாட்சியாய் நீ வாழ்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
2.அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செய்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
3. இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல

எழுந்து ஒளி வீசு – 2

UNTHAN SAMUGAM YENAKKANATHAME

உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

1. கண்ணீரின் வாழ்க்கையே
   என் வாழ்க்கை ஆனது
   எந்தன் கண்ணீரைத் துடைப்பது
   நீர் அன்றி யார் உண்டு
நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

2. தனிமை நேரங்களில்
   துணையாய் வந்தீரே – என்
   எந்தன் வேதனை நேரத்தில்
   உம் வார்த்தையால் தேற்றினீர்
நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

3. என் வாழ்க்கையில் யாரும் இல்லா
   அநாதை ஆனேனே
   நான் உண்டு உன் துணை
   என்றீரே இயேசுவே
உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

NEER ENNODU IRKKUMPOTHU

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2
தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

1.மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2


2.சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே – 2
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2


3.மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? – 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே –2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

NEER ORUVAR MATTUM YESSUVE

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ? – 2

1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்
தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும் – 2
நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?

2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் – 2
எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும்
வந்த காரிருள் மாயையால் மறைந்த பின்னும்

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ? – 2

NEER SEITHA NANMAIKALAI NINAIKINDREN

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே – 2

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


1. பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மைவிட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே – 2

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


2. நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம்நொந்து
மடிகின்ற நேரத்தில்
மகன் என்னைத் தேடி வந்தீரே

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


3. நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரையா
சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2


நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே – 2

நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2

NEER NEERE PERIYAVAR

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
1. எல்ரோயீ என்னைக் காண்பவரே
    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    ஏலோஹிம் என்றும் உள்ளவரே
    யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே
கரங்களை உயர்த்தி
துதிபலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி
ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

2. மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
    பள்ளங்கள் நிரப்பி சமமாக்குவீர்
    கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
    செம்மையான பாதையில் நடத்திடுவீர்
கரங்களை உயர்த்தி
துதிபலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி
ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

NEER MAATHIRAM ENAKKU

நீர் மாத்ரம் எனக்கு – 2
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு – 2

மாயையான உலகில்
நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில்
நீர் மாத்ரம் எனக்கு – 2


1. அரணும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும்
நீர் மாத்ரம் எனக்கு – 2

துருகமும் கேடகமும்
நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும்
நீர் மாத்ரம் எனக்கு – 2


2. ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

ஆனந்தம் உம்மையன்றி
ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

PARALOGA DEVANE PARAKKIRAMAM ULLAVARE

பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே – 2
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை
1. எல் ஷடாய் எல் ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே – 2
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
2. யெஹோவா நிஸியே
வெற்றி தந்த தெய்வமே – 2
3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே – 2
4. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே – 2

BALAMUM ALLAVE BARAKKIRAM ALLAVE

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே
பயப்படாதே சிறு மந்தையே
கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார்
1. தாழ்வில் என்னைத் தூக்கினார்
    சோர்வில் என்னைத் தாங்கினார்
    கஷ்டத்தில் என் தேவன்
    என்னை நடத்திச் சென்றார்
இதுவரை தாங்கினார்
இனியும் தாங்குவார்
முடிவு வரை இயேசு
என்னை கைவிடமாட்டார்
2. கண்ணீரெல்லாம் துடைத்தார்
    கவலை எல்லாம் போக்கினார்
    கண்மணிபோல் தேவன்
    என்னைக் காத்துக்கொண்டார்
சாபங்களை உடைத்தார்
சமாதானம் தந்தார்
அடைக்கலத்தில் தேவன்
என்னை வைத்துவிட்டார்

BALIYIDU THUTHI BALIYIDU

பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

1. துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே – 2
யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

2. நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய் – 2
பலுகிப் பெருகச் செய்தார் – அன்று – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

3. நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது – 2
கண்டார்கள் கர்த்தர் மகிமையை – அன்று – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

4. சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின – 2
அதிகாரி இரட்சிக்கப்பட்டான் – அந்த – 2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும் -2
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2

PRASANNAM THARUM DEVANE LYRICS

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே


1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்


2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்


3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே


4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்


5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

BOOMIYIN KUDIGALE ELLARUM KARTHARAI

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
கெம்பீரமாகவே பாடுங்களே

1. சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின் லீலியே
பரிசுத்தர் என் நேசர் அவர்
பதினாயிரங்களில் சிறந்தோர்

2. வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குத்தத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்

3. வார்த்தையின் தேவனவர்
வார்த்தையால் தாங்குபவர்
சர்வத்தையும் தாங்குபவர்
வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே

4. முற்றும் அழகுள்ளவர்
அன்பில் இணையற்றவர்
மதுரமாம் அவர் நேசம்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே

BELANUM ARANUM EN KEDAGAMUM RATCHIPPUM

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2
யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

1. தேவன் சகாயர் எனக்கு
எவருக்கும் அஞ்சிடேனே
ஒருபோதும் என்னை விட்டு
விலகுவதில்லை தேவன் – 2
யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

2. பயமின்றி துணிந்து நானும்
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே பெலனும் கொண்டு
மதிலையும் தாண்டிடுவேன் – 2
யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

3. உம்மையே நம்பும் எனக்கு
நித்திய கன்மலை நீர்
உம்மையே நோக்கிடும் நான்
வெட்கம் அடைவதில்லை – 2
யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2
யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2

POTRI THUTHIPPOM YEM DEVA DEVANAI

 1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித் துதிப்பேன்


இயேசு என்னும் நாமமே (நாமமே)
என் ஆத்துமாவின் கீதமே (கீதமே)
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்


2.கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்


3.யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெயத்தொனியோடு பாதுகாத்த
அன்பை என்றும் பாடுவேன்


4.தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்


5.பூமி அகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
ஈந்து தொண்டு செய்குவேன்