Monday, February 26, 2018

YESUVE JEEVA MALARE LYRICS

பல்லவி 
இயேசுவே ஜீவ மலரே 
கல்வாரியில் கசங்கிய மலரே

அனுபல்லவி 
பள்ளத்தாக்கின் லீலியாய் 
சாரோனின் ரோஜாவாய் 
இருந்தும் எனக்காய் 
இருந்தும் எனக்காய்

கனிதரும் வாழ்வின் ஆதாரம் 
கல்வாரி மலையின் மாதியாகம்

பொறுக்க இயலா உம் தியாகம் 

குறுக்கையில் ((சிலுவையில்)) சிதையும் உம் யாவும்

THEIVA ASEERVATHATHODE LYRICS

தெய்வ ஆசீர்வாதத்தோடே  
அடியாரை அனுப்பும்  
வார்த்தையென்னும் அப்பத்தாலே  
போஷித்து வளர்ப்பியும்  
இப்போதும்மை தேடி வந்து  
மனதாரப்போற்றினோம்  
மோட்சலோகத்தில் களித்து  
உம்மை வாழ்த்தி தொழுவோம்

SENAIGALIN PARAN YEHOVA LYRICS

சேனைகளின் பரன் யெகோவா 
பரிசுத்தர் பரிசுத்தர் 
பரிசுத்தர் ஆமென் 
திரு மகிமை நிறைந்தவராம் 
பாரிலைங்கும் அல்லேலூயா

சர்வ சுத்தர் பரன் யெகோவா 
பரிசுத்தர் பரிசுத்தர் 
பரிசுத்தர் ஆமென் 
இருந்தவர்தான் இருக்கிறவர் 

வருபவர்தான் அல்லேலூயா

THUTHIPEN THUTHIPEN THUTHIPEN LYRICS

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

NAMBUM THEVANAI NAADI LYRICS

நம்பும் தேவனை நாடி 
நம்பிக்கையோடு கூடி 
யாவருமாய் பாடிடுவோம் 
அல்லேலூயா கீதமே 
அல்லேலூயா (2) பாடிடுவோம் (2) 
அல்லேலூயா பாடிடுவோம்

இன்னல்கள் யாவும் இன்றே அகலும் 
ஏற்றுக்கொள் வாக்குத்தத்தம் 
அன்றே உனக்காய் ஆயத்தம்செய்தார் 
ஜீவனின் மார்க்கம் ஒன்றை 
இயேசு அழைக்கிறார் ஆயத்தமாய் நீ 

இன்னும் ஏனோ தாமதமோ

VAAZHTHIDUVOM NAM VAZHTHIDUVOM LYRICS

பல்லவி 
வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம் 
இயேசுவின் நாமத்தை 
இன்றும் என்றும் ஒன்றாகக் கூடிப்பாடியே

எல்லையில்லா அன்பை அவர் என்றும் ஈவாரே 
தொல்லையில்லா வாழ்வை நம் தாசர்க்கீவாரே 
ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே 
ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

வேதம் தேடி கண்டு நம் இயேசு நாதரை 
கீதம் பாடி கண்டு நாம் போற்றிடுவோமே 
ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே 
ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

NAAL MULUTHUM PAADA VARAM LYRICS

பல்லவி  
நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான்  
வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு  
நாதனே உன்னை நான் 
சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்  
சிலுவையில் எனக்காய் மரித்தவனே  
தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்  
தரணியில் எங்கும் நிறைந்தவனே
இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்  
இறைவனின் பாதம் எனக்கது போதும்  
கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்  
கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே

IRAIVAN ENADHU MEETPAANAR LYRICS

இறைவன் எனது மீட்பானார்  
அவரே எனக்கு ஒளியானார்  
அவரைக் கொண்டு நான் வாழ  
எவரைக்கண்டும் பயமில்லை
வாழ்வில் இறைவன் துணையானார்  
வாடும் எனக்கு உயிரானார்  
தீயோர் என்னை வளைத்தாலும்  
தீமை அணுக விட மாட்டார் (2)
ஒன்றே இறைவா வேண்டுகிறேன்  
ஒன்றே அடியேன் தேடுகிறேன்  
தேவன் உமது திருமுன்னே  
நாளும் வாழ அருள்வாயே (2)

IRANGUM IRANGUM KARUNAIVAARI LYRICS

பல்லவி
இரங்கும் இரங்கும் கருணைவாரி
ஏசு ராசனே, – பவநாசநேசனே!

திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் 
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயாஇரங்கும்

அடியேன் பாவக் கடி விஷத்தால் 
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன்இரங்கும்

தீமை அன்றி வாய்மை செய்யத் 
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயாஇரங்கும்

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் 

பரிந்து கேள் ஐயா, – தயைபுரிந்து மீள், ஐயாஇரங்கும்

IYYA UM THOLGALILE LYRICS

ஐயா உம் தோள்களிலே  
ஆடிடும் மலரிலே  
மெய்யாய் ஒரு மலராய்  
தேவன் தரவில்லையே

பல்லவி  
சின்னப் பூ நானல்லவோ தேவனே  
நான் சொல்லவோ  
என்னை உம் பாதத்திலே  
ஏற்றுக்கொண்டால் என்னவோ(2)

வண்ணம் எனக்கில்லையே  
வாசல் திறப்பில்லையே  
மண்ணில் உதிரும் முன்னே  
வாழ்வு கொடுத்தால் என்னசின்னப் பூ

தொய்யும் உயிர் பிரிந்தே  
ஓடிப்பறக்கும் முன்னே  
தூய விரல்களிலே  
தொட்டுப் பறித்தால் என்னசின்னப் பூ