Saturday, June 13, 2015

ENNA NADANTHALUM YAAR KAIVITTALUM

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
   தூய மகனாக்கினீர் – 2
   துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

2. ஆவியினாலே அன்பை ஊற்றி
   பாவங்கள் நீக்கினீரே – 2
   சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
   எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
   நினைத்துப் பாடுகிறேன் – இராஜா
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

ENN MEIPARE YESAIYA

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2


1. பசும்புல் மேய்ச்சலிலே
(என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2


2. அமர்ந்த தண்ணீரண்டை
(என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2


3. ஆத்துமா தேற்றுகிறீர்
(என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2


4. (உம்) கோலும் கைத்தடியும்
(என்னை) தினமும் தேற்றிடுமே – 2


5. (உம்) நீதியின் பாதையிலே
(என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2


6. (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
(நான்) நடந்தாலும் பயமில்லையே – 2

 
7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
(உம்) கிருபை என்னைத் தொடரும் – 2

ENN MEIPARAI YESU IRUKINDRAPOTHU

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளிமயமே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


3. இப்பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தைப் பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் எதற்கும் அஞ்சிடேனே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


4. என்னை அவர் ஆசீர்வதித்ததினால்
சத்ருக்கள்முன் உயர்த்தி வைத்ததினால்
என் உள்ளமே ஆஹா என் தேவனை
ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

ENN MEETPER EN NESAR SANNITHIYIL

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
1.மானானது நீரோடையை
  தேடித் தவிப்பதுப்போல்
  என் நெஞ்சம் உமைக் காண
  ஏங்கித் தவிக்கிறது
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
2.பகற்காலத்தில் உம் பேரன்பை
  கட்டளை இடுகிறீர்
  இராக்காலத்தில் உம் திருப்பாடல்
  என் நாவில் ஒலிக்கிறது
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
  (உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்
  கர்த்தரையே நீ நம்பி இரு
  அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி
ஜீவனுள்ள தேவன் – அவர்
சீக்கிரம் வருகிறார்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?

ENN THAGAPPAN NEERTHANAIYA

என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
எப்போதும் எவ்வேளையும்
உம் கிருபை என்னைத் தொடரும் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
1. மாண்பு மிக்கவர் நீர்தானே
மிகவும் பெரியவர் நீர்தானே – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
2. தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்
விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
3. ஏற்ற வேளையில் அனைவருக்கும்
ஆகாரம் நீர் தருகின்றீர் – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
எப்போதும் எவ்வேளையும்
உம் கிருபை என்னைத் தொடரும் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்

YELLAIILLA UNTHAN ANBAL

எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
1. கள்ளமில்லா உந்தன் அன்பினால்
எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2
கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2
என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
2. தொல்லை மிகுந்த உலகில்
இல்லை ஆறுதல் எனக்கு – 2
அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – 2
என்னை அணைத்திட்ட விதம் தனை மறவேன் – 2
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
3. சொல்லி முடியாது நாதா
உம் அன்பு அள்ளி தீராது தேவா – 2
உள்ள உறுதியுடன் நானும் – 2
உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் – 2
நான் துதிப்பேன் – 3 என்றென்றும் துதிப்பேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி

EPPOTHUM ENN MUNNE LYRICS

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – 2
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


1. உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் – 2
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


2. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது – 2
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


3. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா – 2
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர் – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


4. கல்வாரி எனக்காக
காயங்கள் எனக்காக – 2
திரு இரத்தம் எனக்காக
சிந்தியே ஜீவன் தந்தீர் – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

என் மேய்ப்பர் நீர்தானையா
குறைவொன்றும் எனக்கில்லையே – 2

பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

EGIPTHILIRUNTHU KAANAANUKKU KOOTI SENDREERE

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
1. கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது – 2
கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
2. பாறையினின்று
தண்ணீர் சுரந்தது – 2
தாகம் தீர்ந்தது கர்த்தரை
மனமும் போற்றியது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
3. பாடுகள் பட்டு
மரித்தாரே நமக்காய் – 2
உயிர் கொடுத்தாரே அவரை
உயர்த்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
4. யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம் – 2
ஜெயம் கொடுத்தாரே அவரை
துதித்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2

OOTRUGAIYA OOTRUGAIYA PERUMALAIYAGA

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை

1.உம்மைப்போல் மழை உண்டாக்க
   தேவர்கள் உண்டோ
   வானமும் தானாகவே
   மழையைப் பொழியுமோ
நீரல்லவோ நீரல்லவோ –2


2.வயல்களும் ஆறுகளும்
   வற்றிப் போயிருக்கும்
   ஆவி ஊற்றப்பட்டால்
   வனாந்திரம் செழிக்கும்
நீரல்லவோ நீரல்லவோ –2

3.இராஜாவின் முகக்களையில்
   ஜீவன் இருக்கும்
   உங்க தயவுக்குள்ளே
   பின்மாரி இருக்கும்
நீரல்லவோ நீரல்லவோ –2

UNNATHARE ENN NESARE

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


1. முழு மனதோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்பிக்கின்றீர்

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


3. வலதுகரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றுமுள்ளது உமது அன்பு

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர்தந்த வெற்றியில் களிகூறுவேன்
மனதின் ஏக்கங்கள் மலரசெய்தீர்
வாய்விட்டு கேட்டதை மறுக்கவில்லை

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்

UNAKKULE IRUKINDRA UNN YESU

உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு
என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கெட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார்

1. இல்லையென்ற நிலை வந்ததோ
இருப்பதுபோல் அழைக்கும் தேவன்
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே

2. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே

3. நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே

4. மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளி வரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே

5. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே

6. செங்கடல் உனக்கு முன்னானதோ
சேனைகளெல்லாம் பின்னானதோ
சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
சேதமின்றி காப்பார் கலங்காதே

UYIRULLA THIRUPALIYAI

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்  – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
1. உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக – 2
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன் – 2

UMMAITHANE NAAN MUZHU ULLATHODU

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன் – 2
1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே – 2
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே -2
அல்லேலூயா ஆராதனை – 4
2. நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர் – 2
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர் – 2
அல்லேலூயா ஆராதனை – 4
3. நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும் – 2
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர் – 2
அல்லேலூயா ஆராதனை – 4
4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர் – 2
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்க செய்தீரையா – 2
அல்லேலூயா ஆராதனை – 4

UM PATHAM PANITHEN ENNALUM THUTHIYE

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் இயேசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே


1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம்பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்


2. புது எண்ணெயால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகிறீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர்


3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னை தாங்குகிறீர்


4. என்முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே


5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் நிலைத்திருக்க
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர்


6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்றும் கண்டிடுவேன்

 
7. சீருடனே பேருடனே சிறந்து
ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன்

UNGA MUGATHAI PARKANUME YESAIYA

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2

6.எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

ISRAVELE UNNAI EPPADI KAIVIDUVEN

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?
எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?
என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது – 2
எப்படி கைவிடுவேன்? – நான்
எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2
என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?
என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

2. நானே தான் உன்னைக் குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ? – 2
எப்படி கைவிடுவேன்? – நான்
எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2
என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?
என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்கப் பழக்குகிறேன் – 2
எப்படி கைவிடுவேன்? – நான்
எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2
என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?
என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் – 2
எப்படி கைவிடுவேன்? – நான்
எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?
எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?
என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

ISRAVELIN THUTHIKKUL

இஸ்ரவேலின் துதிக்குள்
வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின்
துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே

1. உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம் (2)

2. இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்து முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுமே (2)

3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றும் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே (2)

4. உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன்குறித்தீர்
எம் சுதந்தரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
உம் ஆவியானவரால் (2)

RAJA UM MAALIGAIYIL

இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2
(உம்மை) துதித்து மகிழ்ந்திருப்பேன்
(எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

1. என் பெலனே என் கோட்டையே
ஆராதனை உமக்கே – 2
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே – 2
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

2. கர்த்தரே தேவன் யெஹோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே – 2
எங்கள் நீதியே யெஹோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே – 2
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

3. பரிசுத்தமாக்கும் யெஹோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே – 2
உருவாக்கும் தெய்வம் யெஹோவா ஓஸேனு
ஆராதனை உமக்கே – 2
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2
(உம்மை) துதித்து மகிழ்ந்திருப்பேன்
(எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

RAJAREEGA KEMBEERA THONIYODU

இராஜரீக கெம்பீரத்தொனியோடு
இராஜராஜனை தேவதேவனை
வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி
வீரசேனை கூட்டமாக சேவிப்போம்
மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம்
முற்று முடிய வெற்றியடைய
சற்றும் அஞ்சிடாமல் இயேசு நாமத்தில்
சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம்
1.சூலமித்தி இரண்டு சேனைக்கொப்பாக
சூரியனைப் போல் சந்திரனைப் போல்
கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க
கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள்
2. செங்கடல் நடுவிலே நடத்தினார்
எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்
கடலை பிளந்து நதியைப் பிரித்து
காய்ந்து நிற்கும் பூமியிலே நடத்துவார்
3. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்
தளர்ந்திடவே அடங்கிடவே
பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும்
பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம்
4. ஜெபமே எமது அஸ்திபாரமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம்
ஆச்சரியமாகவே நடத்துவார்
5. பரலோகவாசிகள் சுதேசிகள்
பரதேசிகள் சில சீஷர்கள்
பின்திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல்
பற்றும் விசுவாசத்தோடு முன்செல்வோம்
6. குணசாலிகள் கூடாரவாசிகள்
கூட்டமாகவே கூடிச்சேரவே
மணவாளனை நம் மன்னன் இயேசுவை
தம் மங்கள சுபதினம் கண்ணால் காண்போம்

RATCHANYAM MAGIMAI

இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவோ
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா
பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

1.சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2.காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3.சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4.மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

YESU ENDRA THIRUNAAMATHIRKU

இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்


1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது


2. வேதாளம் பாதாளம் யாவையும்
ஜெயித்த வீரமுள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே


3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது


4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது


5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றுமகற்றிடும் நாமமது

ROJA POO VAASA MALARGAL NAAM IPPO

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ 
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) 

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி 
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி 
நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ 
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)  

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் 
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ 
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ 
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) 

புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும் 
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம் 
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ 
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) 

கறை திறையற்ற மணவாட்டி சபையை 
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும் 
மங்கள நாளை எண்ணியே இப்போ 
நேசமணாளன் மேல் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ 
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

THUTHITHIDUVEN MUZHU IDAYATHODU

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் – 2
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
அடைக்கலமே புகலிடமே – 2
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

2. நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதே இல்லை – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் – 2
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

THUYARATHIL KOOPITTEN UDAVIKKAI KADHARINEN

1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டீரையா – 2
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் – 2
குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – 2
2. எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவைப் பகலாக்கினீர் – 2
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை – 2
எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – 2
3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானையா – 2
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா – 2
தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே – 2
4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன் – 2
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் – 2
புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

DEVANAI GEMBIRAMAI PAADU

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4
இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
எக்காளம் ஊதுங்களேன் – 2
தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

1. நியமித்த காலத்திலும்
நம் பண்டிகை நாட்களிலும் – 2
இனிமையான ஓசை எழுப்பி
சங்கீதம் பாடுங்களேன் – 2

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

2. மெரிபாவின் தண்ணீராலுமே
கன்மலையின் தேனினாலுமே – 2
உச்சிதமான கோதுமையாலுமே
போஷித்தவர் அவரல்லவோ – 2

இஸ்ரவேலின் தேவனல்லவோ
இயேசு கிறிஸ்து அவரல்லவோ – 2

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4
இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
எக்காளம் ஊதுங்களேன் – 2
தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

DEVA UM NAAMATHAI

தேவா உம் நாமத்தைப்
பாடிப் புகழுவேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள்
ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே

ஏழைகளின் தேவனே
எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற
துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே

2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
அற்புத தேவன் நீரே
அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
அதிசய தேவன் நீரே
 

3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
உத்தம தேவன் நீரே



THANTHANAI THUTHIPPOME THIRU

தந்தானைத் துதிப்போமே;- திருச்
சபையாரே, கவி- பாடிப்பாடி .

அனுபல்லவி
ஒய்யாரத்துச் சீயோனே, -நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பி துதி
செய்குவையே ,மகிழ் கொள்ளுவையே , நாமும் -தந்

கண்ணாரக் களித்தாயே ,-நனமிக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து ;
எண்ணுககடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமென்மேற் சோனா மாரிபோற பெய்துமே .- தந

சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
முற்றாய் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தை சிந்தி எடுத்தே உயிர் வரம் -தந

தூரம் திரிந்த சீயோனே ,-உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை- தந

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

சரணங்கள்
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் -தேவ

VARAVENUM PARANAAVIYE

வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே,

அனுபல்லவி
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

சரணங்கள்
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

PUNNIYAR IVAR YAROO VEELTHU JEBIKKUM

புண்ணியர் இவர் யாரோ ? - வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?

அனுபல்லவி
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் - புண்

சரணங்கள்
1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்

ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-

2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-

நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்
3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

UNTHAN AAVIYAI SWAMI ENTHAN MEETHINIL

உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்
1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன்

2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . - உந்தன்

3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , - உந்தன்

4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்த