Saturday, March 17, 2018

ANBINAL PADAITHEN TAMIL LYRICS

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்
படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
பாவத்தில் மாண்டாய்சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டுஇயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?

NAAM ARADHIKUM DEVAN TAMIL LYRICS

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே – 2

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

NAAN AARATHIKUM YESU TAMIL LYRICS

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே

அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது

அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்

1. உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

2. இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்
நாவின் மேலே அதிகாரம் வச்சாரே

3. உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே