மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா -- (மாதா உன்)
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமா மாதா -- (மாதா உன்)
பிள்ளை பெறாத அன்னை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா -- (மாதா உன்)
No comments:
Post a Comment