Friday, October 25, 2019

URUGAADHO NENJAM NEGILATHO LYRICS

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா (2)

கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
கலங்கியே கரைந்திடுமே (2)
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ

வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
வார்த்தை மாறிடாதே (2)
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
வாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ


என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்திடுவேன் (2)
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
உம் பாதம் சரணடைவேன் – உருகாதோ

THALAI SAIKKUM KAL NEERAIAH

 தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

EN NEETHIYAI VELICHATHAI POLAAKKUVER

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்

உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்

இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை

நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

THAI MARANDHALUM NEER MARAPPADHU ILLAYE

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப-தில்லையே-
தந்தை தாயினும் மேலானவர்
தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2

மேற்குக்கும் கிழக்குக்கும்
எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2
-தாய் மறந்தாலும்

மலைபோன்ற எந்தன்
மாபெரும் பாவங்களை
முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்

காலமெல்லாம் கண்ணீரை
வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்

EN KUOODAVA IRUM OO YESUVE

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது  
என் பக்கத்திலே இரும், ஓ இயேசுவே 
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே 
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே

கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே 
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே 
எனக்கெல்லாமே  நீங்க தானப்பா (2) - என் கூடவே

PAVI EN MEETHU EN INTHA ANBU

பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே - 2

தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே - 2

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா - 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா 
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா - 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா 

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா - 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2