கலைமான் நீரோடையை ஆர்வமாய்
நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது - உன்னை
ஏங்கியே நாடி வருகின்றது
உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது
இறைவா உன்னை என்று நான் காண்பேன்
கண்ணீரே எந்தன் உணவானது
மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க
என் உள்ளம் பாகாய் வடிகின்றது
1 comment:
Good
Post a Comment