Tuesday, November 12, 2019

KALAIMAAN NEERODAIYAI AARVAMAI


கலைமான் நீரோடையை ஆர்வமாய் 
நாடுதல் போல் 
இறைவா என் நெஞ்சம் மறவாது - உன்னை 
ஏங்கியே நாடி வருகின்றது 

உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது 
இறைவா உன்னை என்று நான் காண்பேன் 
கண்ணீரே எந்தன் உணவானது 

மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே 
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க 

என் உள்ளம் பாகாய் வடிகின்றது