Monday, December 2, 2019

SINGAARA PAALANAE AA RA RO

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..
சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2
தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2

தங்க தொட்டில் இல்லை
அங்கு தாதியர் கூட இல்லை-2
பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2

தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ-2

மாட்டு தொழுவத்திலே
அங்கு மாபனி சாரலிலே-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2

தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே

SOTHU SUGAM IRUNTHAALUM

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்-2
கிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா-2
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க-2
சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை
அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

UNNADHATHIL UYARNTHAVARAE

1.உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
இயேசுவே இயேசுவே-2

2.உலகத்தின் ஆழத்திலே
மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
உந்தன் அன்பின் ஆழத்திலே
இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
இயேசுவே இயேசுவே-2

3.நீர் என்னை சுமந்ததாலே
தடைகளையும் நான் தாண்டி வந்தேனே
திருக்கரம் தாங்கினதாலே
மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
இயேசுவே இயேசுவே -2

UMMAI VITTA YAARUM ILLA

உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2

நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் என்னக்கு – 2

1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2
என்னுடைய உழைப்பை யாரவந்து
பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2

2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2
புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2

3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2
என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2

YESUVE ORUVARE DEVAN

{இயேசுவே ஒருவரே தேவன்
இயேசுவே நீர் மத்ரேமே x2}
இயேசுவே மகிமையின் ராஜா
சேனைகளின் கர்த்தரே
இயேசுவே நீர் உயர்ந்தவர்
இயேசுவே நீர் உன்னதர்
{உம்மை துதிப்பேன்
உம்மை தொழுவேன்
உம்மை ஆராதிப்பேன்} x2

இயேசுவே பரிசுத்த தேவன்
பரலோக ராஜாவே
இயேசுவே அதிசயமானவர்
ஆலோசனைக் கர்த்தரே
இயேசுவே நீர் உயர்ந்தவர்
இயேசுவே நீர் உன்னதர்
{உம்மை துதிப்பேன்
உம்மை தொழுவேன்
உம்மை ஆராதிப்பேன்} x2

இயேசுவே நீதியின் தேவன்
இரக்கம் நிறைந்தவரே
இயேசுவே அடைக்கலமானவர்
நித்திய கண்மலை
இயேசுவே நீர் உயர்ந்தவர்
இயேசுவே நீர் உன்னதர்
{உம்மை துதிப்பேன்
உம்மை தொழுவேன்
உம்மை ஆராதிப்பேன்} x2

KILAKKIRKUM MEARKIRKUM EVALAVU DHOORAM

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே - இயேசுவே

1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
லட்சங்களுள் அடங்கவில்லை
ஆனால் என் நேசர் கணக்கில்
என் பெயரில் பாவம் ஒன்றில்லை

2. இவர் புகழ் சொல்லி முடிக்க
உலகத்தில் நாட்களுமில்லை
இயேசுவுக்கு நிகராக
உலகில் எந்த உறவுமில்லை
இயேசுவுக்கு நிகராய்
இவ்வுலகில் எந்த உறவுமில்லை

அல்லேலூயா ! போற்றிடுவேன்
அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
மன்னாதி மன்னவனை !
அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
அல்லேலூயா ! ஆராதிப்பேன்
கர்த்தாதி கர்த்தரையே !