உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்
என்னை அரவணைத்திடு இறைவா -- (2)
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் -- (2)
உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்
என்னை காத்திடு என் இறைவா
பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்
மன்னிப்பில் பனி போல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -- (உம் சிறகுகள்...)
வலையினில் விழுகின்ற பறவை அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள் மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை -- (உம் சிறகுகள்...)
No comments:
Post a Comment