Tuesday, November 12, 2019

ANBIN PALIYAAY EARPAAY UNNAI



அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை 
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய் 
அன்பின் பலியாய் ஏற்பாய் 
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் - எமை 
புண்ணிய வாழ்வில் நிலைபெற செய்வாய் 

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள் 
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் 
முழு முதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - எமை 
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம் 

படைப்பின் மீதே பரிவிருக்க - அந்த 
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க 
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - உனில் 

படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க 

No comments: