Thursday, December 24, 2015

KUTHUKALAM KONDATTAME

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அப்பாவின் திருப்பாதத்தில்

1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

Konalum Marupadumana ulagathil

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்

1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்

3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
இருப்பதுபோல அவரைக் காண்போம்

4. அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்

5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே

6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

SANTHOSAMA IRUNGA EPPOTHUM LYRICS

சந்தோஷமாயிருங்க
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும், தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

சரணங்கள்

1. நெருக்கத்தின் நேரத்திலும்
தண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

4. என்ன தான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

SORNTHU POGATHE EN NANBANE


1. சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே (2)
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே (2)

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே (2)

2. என் ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன் (2)
என் கரம் பிடித்து மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார் (2) --- இயேசு

3. நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும் (2)
மனம் கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார் (2) --- இயேசு

Thanimaiyin Paathaiyil thagapane

தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ

ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின்

1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ..

2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ..

3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ..

DEIVATHUVATHIN PARIPOORANAM

தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
பொக்கிஷவைப்பாய் கண்டோம்

1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- அவரோடு

2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- சொல் செயல்

3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- ஜெப தூபம்

DEVANE EN DEVA

தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
நீரில்லா நிலம் போல
உம்மை பார்க்கிறேன்

1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்

2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்

3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்

4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கி கொண்டது

5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்

THUTHITHIDUVEN MULU IRUTHAYATHODU


துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் – 2

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
அடைக்கலமே புகலிடமே – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

2. நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதே இல்லை – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

THUTHITHIDUVEN MULU IRUTHAYATHODU

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் – 2

1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டீரையா - (2)
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் - (2)

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2)

2. எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவைப் பகலாக்கினீர் - (2)
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை - (2)

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2)

3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானையா - (2)
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா - (2)

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2)

4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன் - (2)
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2)

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்