Thursday, September 24, 2015

ORUNAAL VARUVAAR RAJATHI RAAJAN


ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
  ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்

1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் - நம் கால

2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் - நாம் கால

3. தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் - நம் கால

OOH BETHLEGEME SITTRURE


ஓ பெத்லெகேமே சிற்றூரே
  1. ஓ பெத்லெகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

2. கூறும் ஓ விடி வெள்ளிகான்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே
பாரில் அமைதியாம்
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்.

KATTUM KARTHAVE NEER KATTUM KARTHAVE


கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே
அறுந்து போகாத கயிற்றால்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் எங்களை அன்பால்

தேவன் ஒருவராம்
இராஜனும் ஒருவரே
சரீரம் ஒன்றுதானே
பாடுவோம் ஆதலால்

Bind us together Lord
Bind us together with
Cords that cannot be broken
Bind us together Lord
Bind us together Lord
Bind us together with love

There is only one God
There is only one King
There is only one Body
That is why we sing

KANGALAI PATHIYA VAIPOM

கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

2. இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் விற்றிருக்கின்றார்

3. தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் - மனம்
சோர்ந்து போக மாட்டோம்

4. ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் - நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

5. மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு

6. பாவத்திற்கு எதிராய்
போராட்டம் நமக்கு உண்டு
இரத்தம் சிந்தும் அளவு
எதிர்த்து நிற்கவில்லையே

7. தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேற்றும் படிகளாகும்

KANTHAI THUNIGALIL THAVALTHIDUM BAALAN


கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்
  சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசா
சரிகபா – கபதரிசா

கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)

1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)
பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
- சதபா …. கந்தை

2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)
ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
- சதபா …. கந்தை

KANNI PETRA PAALANE KAN URANGU

கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ (4)

1. பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே (2)
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே (2)
- கன்னி

2. ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர (2)
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே (2)
- கன்னி

KARAIYORA KADALALAI SATHAM KAADHORA KAATHULA

கரையோர கடலலை சத்தம் - காதோர காத்துல நித்தம்
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..

1. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)
- கரையோர

2. கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி - இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2)
- கரையோர

3. திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (2)
- கரையோர

KARTHARIN MAAMSAM VANTHUT KOLLUNGAL


1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்

2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்

3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.

4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.

5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்

6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்

7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.

9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.

10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.

KARTHARAI THUTHIYUNGAL AVAR KIRUBAI

கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

4. நம்பினால் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

KARTHAR EN PAKKAMAGIL

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.

2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே;
அதாலே பக்தர் யாரும்
திடன்கொள்வார்களே;
நான் ஏழைப் பலவீனன்,
வியாதிப்பட்டோனே;
அவரில் சொஸ்தம்இ ஜீவன்
சமஸ்தமும் உண்டே.

3. தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே;
அப்பாவே என்று சொல்ல,
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம்செய்ய
என் ஆவி தேறுதே.

4. என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ?
கர்த்தர் என்மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ?
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே.

KARTHAR ENNAI VISARIPPAR

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்.

2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.

3. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போகச் செய்வாரே.

4. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்?

KARTHAR NALLAVAR THUTHIYUNGAL

1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு ஹாலேலூயா
புகழ்ந்து பாடு ஹாலேலூயா
சேர்ந்து பாடு ஹாலேலூயா
போற்றி பாடு ஹாலேலூயா
அல்லேலூயா ஆமென்
களித்து பாடு ஹாலேலூயா
துதித்து பாடு ஹாலேலூயா
அல்லேலூயா ஆமென்

2. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
…….மகிழ்ந்து பாடு
ஹாலேலூயா – (18 Times) (TWICE)

karthar naamam en pugalidame

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1. யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
துதியுமக்கே என்றும் துதியுமக்கே

2. யெகோவாநிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3. யெகோவா ரஃபா சுகம் தரும் தெய்வமெ
துதியுமக்கே - என்றும் துதியுமக்கே

4. யெகோவா ரூபா - எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5. யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
துதியுமக்கே - என்றும் துதியுமக்கே

6. யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

kalippudan kooduvom kartharai naam

1. களிப்புடன் கூடுவோம்,
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2. ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.

3. இஸ்ரவேலைப் போஷித்தார்,
நித்தம் வழி காட்டினார்
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.

4. வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரே ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.

kaakum karangal undenakku

1. காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை!

2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்

3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்

4. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

kaarirul velaiyil kadunkulir nerathil

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலம தாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு
- காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு
- காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு
- காரிருள்

kaalaiyum maalaiyum evvelaiyum


காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானவர்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்

2. எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்

3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்

KAAL MITHIKKUM DESAMELLAM LYRICS

கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் +மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் - அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று - அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை - அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை - அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் - அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள் - அல்லேலூயா