Monday, May 7, 2018

CHANDIRANE SURIYANE KARTHARUKKU LYRICS


சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே 
யோசேப்பை போல பயந்திடுவேன்
சாமுவேல் போல பேசிடுவேன்
தாவீதை போல ஆடிடுவேன்
தானியேல் போல ஜெபிப்பேன்
வானத்தின் நட்சத்திரமே
மேகத்தின் பனி மழையே
எப்போதுமே எந்நாளுமே
சாரோனின் ரோஜாக்கள் நாங்க
பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க 
கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
அவர் நல்லவர் வல்லவர் என்று
சொல்லி பாடுவேன்
ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே 
யோசுவா போல சென்றிடுவேன்
யூதா போல எழும்பிடுவேன்
ஈசாக்கை போல விதைத்திடுவேன்
சிம்சோன் போல கிழிப்பேன்
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என்றென்றைக்கும் எந்நேரமும்
கர்த்தரின் கரத்தில் நாங்க
இயேசுவின் கரத்தில் நாங்க

EGYPTHILIRINDHU KAANAANUKKU KOOTI LYRICS

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா
1. கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது
அல்லேலூயா அல்லேலூயா
2. பாறையினின்று
தண்ணீர் சுரந்தது
தாகம் தீர்த்தது தேவனை துதித்து பாடியது
அல்லேலூயா அல்லேலூயா
3. வெண்கல சர்ப்பம்
ஆனாரே நமக்காய்
உயிர் கொடுத்தாரே நாமும் உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா
4. யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா

JORAA KAIYATHATTI PAADUNGA LYRICS


ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)
நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…
நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா

KUYAVANE KUYAVANE PADAIPPIN LYRICS


குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே

MEI BHAKATHARA NEER VILITHELUMBUM LYRICS


1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்
2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே
3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்
4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்
5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்
6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்

O DEVANUKE MAGIMAI LYRICS


ஓ! தேவனுக்கு மகிமை!
தூக்கியெடுத்தார்
என்னை தூக்கியெடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ! தேவனுக்கு மகிமை!
நான் இயேசுவை நேசிக்கிறேன்
மேன்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நான் நின்று அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்

PIRANTHAR PIRANTHAR VAANAVAR LYRICS

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார் 
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

ROJA POO VASAMALARGAL NAAN LYRICS


ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ
2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ
3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ
4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

UDAINTHA ULLATHADI PAARUNGA YENGAE LYRICS


உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே
1. யாரிடம் சொல்லுவேன்
யாரிடம் கதறுவேன்
2. உற்றார் உறவினர்
பிரிந்து போகையில்
3. நேசரின் மார்பினிலே
என்றும் சாய்ந்திடுவேன்
4. இயேசுவை நம்புவோம்
தேற்றுவார் உள்ளத்தையே

YEHOVAH DEVANE YEHOVAH KARTHARE LYRICS


யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே
எல்ஷடை எல்ஷடை எல்லாம் வல்லவரே
எல்ரோகி எல்ரோகி என்னை காண்பவரே
எபினேசர் எபினேசர் இதுவரை உதவிநீர்

VAA ENDRAZHAIKKUM DHEIVA SATHAM LYRICS


வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்
1. உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
உன் கஷ்டங்கள் அறிவார்
உன் கண்ணீரை அறிவார்
உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்
2. உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
முழுதான மனதோடு துதியோடு
3. உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
பதறாதே தயங்காதே மயங்காதே

ENNIL ENNA KANDEER ENNAI LYRICS

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன
2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன
3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன

JEBAM KELUM BATHIL THAARUM LYRICS


ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா


1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழு லட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்


2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்


3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்


4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்


5. மரித்துப் போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்


6. மிஷினரி ஊழியங்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்


7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்


8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

KARAM PIDITHU VAZHI NADATHUM LYRICS


கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா


1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்


2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்


3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

KARAM PIDITHU UNNAI YENDRUM LYRICS


கரம் பிடித்து உன்னை
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே
படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து
உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே
ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன்
மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே
சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை
என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை
அவர் அணைப்பாரே – கலங்கிடாதே

NAAN ANAATHAI ENDRU ALUTHAEN LYRICS

நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதையில்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்
1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்
3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்

MESIYAA THAAN PORANDHAACHU LYRICS


மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)