Thursday, May 31, 2018

THAAI KOODA PILLAIGALAI MARANDHU LYRICS

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)
நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

SILUVAIYIL ARAIYUNDA YESAIYA LYRICS


சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

RAGASIYAMAAI ORU VARUGAI LYRICS

ரகசியமாய் ஒரு வருகை
அனைவரும் காணும் ஒரு வருகை
இரண்டுக்கும் நடுவே உபத்திரவம்
அதன் நடுவில் மகா உபத்திரவம்
சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே
வருகிறார் இரகசியமாய்
சபையை தம்மோடு அழைத்து வருகிறார்
வெளியரங்கமாய்
நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே
அதில் மிகுதியாய் பாடுகள் புவியில்
தோன்றுதே 
நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்
மாறிடுவோம் இரகசியமாய்
ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம்
வெளியரங்கமாய்
கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு
சாதனைதான்- இந்த
இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரக
வேதனைதான்
ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும்
எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்
யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும்
காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்
இது ரகசிய வருகை
ஒரு அதிசய வருகை
தீர்க்கதரிசி சொன்ன இறுதி ஏழு வருடம்
அந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான்
மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பின்னே அவனும்
பாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான்
அதை கண்கள் யாவும் காணும்
அது முடிவு நெருங்கும் காலம்
இயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ
மன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ
குற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள்
வேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே
இன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே
ஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய்
சட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய்
மேகத்தில் உன்னைப்போல் நம்பினோர்
நிற்பாரே
இயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல்
மோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே
யாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே
சாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே
நித்திய அக்கினி உனக்கு வேண்டாமே
சத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வா
பரலோகம் ஒருபுறத்தில்
பாடுகள் புவியில் மறுபுறத்தில்
விழிப்புடன் இருந்தால் நீ பிழைத்திடுவாய்
வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய்

POTRI THUTHIPOM EN DEVA DEVANAI LYRICS


போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
. இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)
1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)
2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)
3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)

PAREER ARUNODHAYAM POL LYRICS


பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ
1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே
2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே
3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே
4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே

NEER EN SONTHAM LYRICS


நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்
2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

NAAN ORUPODHUM UNNAI KAIVIDUVATHILLAI LYRICS


நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 
1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

என்ன வந்தாலும் பயமே இல்லை

மாறாத இயேசு உண்டெனக்கு

மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர்

புயலில் என் கன்மலையே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 
2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ

தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

நல்வசனத்தின் வல்லமையாய்

வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற

அற்புதம் நடந்திடுமே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

KARTHAR NALLAVAR RUSITU PAARUNGAL LYRICS


கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2
1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2
2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் -2
3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2

KIRUBA KIRUBA KIRUBA LYRICS

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2
கிருப கிருப கிருப கிருப – 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப
1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப
2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

INNUM NAAM AZHIYALA LYRICS

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2
கிருப கிருப கிருப கிருப – 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப
1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப
2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

EN NESAR ENNUDAYAVAR LYRICS


என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்
திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே

EN SIRUMAIYAI KANNOAKKI PAARTHTHAVAR NEER LYRICS

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் (2)
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் (2)
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே (2)
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே (2) – பீர்லாகாய்
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் (2)
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் (2) – பீர்லாகாய்

AVAR ARPUTHAMAANAVARAE LYRICS


1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே
2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்
3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்
4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

ANDAVAR PADAITHA VETRIYIN LYRICS


ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி
3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி
4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி

Wednesday, May 30, 2018

ISRAVELIN THUTHIGALIL VAASAM SEIYUM LYRICS


இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே
2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே
3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே

EN JANAME MANAMTHIRUMBU LYRICS


என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

ANANTHA GEETHANGAL ENNALUM LYRICS

பல்லவி
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
சரணங்கள்
1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த
2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த
3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த
4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த
5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் – ஆனந்த

AARATHANAI KURIYAVARE UMMAI UYARTHI LYRICS


ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2
1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

KALANGATHE MEGANE LYRICS


கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் – 3


1. மலைகள் பெயர்ந்து கோலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் – 3


2. உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்


3. தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்


4. வியாதி வறுமை நெருக்கலாம்
சோதனை துன்பம் சூழலாம்
உன்னை மீட்டவரோ
உன்னைக் காத்துக் கொள்வார்

EN JEBATHAI KETKIRAR LYRICS

என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) – என் ஜெபத்தை
2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) – என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) – என் ஜெபத்தை

Tuesday, May 29, 2018

EN ENNANGALAI MAATRUM ENN LYRICS


என் எண்ணங்களை 
என் எண்ணங்களை மாற்றும்
என் விருப்பங்களை மாற்றும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை புதிதாக்கும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை உமதாக்கும்
1. கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
எண்ணங்களை கட்ட முடியல
நான் என்ன செய்வேனோ தெரியல
2. வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்
3. சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
சிற்றின்ப மாயை அதை நீக்குமே
பற்றோடு என்னை கண்ணோக்குமே

PAAVIKKU PUGALIDAM YESU RATCHAGAR LYRICS


பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி
2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி
3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி
4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

MEGANGALIL AARAVARATHODU LYRICS

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!
எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்
கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்
மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்
மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

KAATRU VEESUTHE DESATHIN MELE LYRICS


காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து
விட்டாரே எல்லோரும் பாடுங்கள்
களிப்பாய் பாடுங்கள்
இயேசுவைப் போற்றி
கெம்பீரமாய் பாடுங்கள்
1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே …எல்லோரும்
2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே …எல்லோரும்
3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே …எல்லோரும்
4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே …எல்லோரும்
5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே …எல்லோரும்

KONDADUVOM NAAM KONDADUVOM LYRICS


கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்
பாடி கொண்டாடுவோம் – 2
தீயவன் நடுவில் வருவதில்லை – 2
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
2. நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம் – 2
கர்த்தரின் மகிமை மேகம்போல – 2
இறங்கட்டும் இந்நாளிலே – 2
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
3. அசைக்க முடியா கூடாரம் ஆவோம்
அமைதியின் இல்லம் ஆவோம் – 2
நோயாளி என்று சொல்வதில்லை – 2
குற்றங்கள் நீங்கியது – நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

MAGILCHIYODU THUTHIKKINDROM LYRICS


மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா!
எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா, சாரோன் ரோஜா!
1. நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே (2)
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)
நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்பு
தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி
2. நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி
3. அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதமானவரே… உயர்ந்தவரே… இருள்
நீக்கும் ஒளிவிளக்கே
உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – மகிழ்ச்சி
4. தாயைப்போல் என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ! நல்ல அப்பா அல்லோ!
பிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – மகிழ்ச்சி

INTHA MATTUM KAATHA EBENESARE LYRICS


1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)
4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

DEVANA EN NANBANE ENAKKAI LYRICS


தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)
1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

EN SIRUMAIYAI KANNOKKI LYRICS


என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

BEER LAHAI ROHI LYRICS


என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

EN MUDIVUKKU VIDIVU NEERE LYRICS


என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
1. பூமியிலே நான் பரதேசி
ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை
ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக
இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

ENATHU MANAVALANE EN IDHAYA LYRICS


எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (2)
2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே
3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு)
4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா
5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக

EN PAVANGAL EN YESU LYRICS


என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்

EJAMANANEY EN YESU RAJANE LYRICS


எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ
3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்
4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்

DEVA UM SAMUGAME YENATHU LYRICS

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2
1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2
2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2
3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2
4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2
5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

YEN ALUGIRAI YARAI LYRICS


ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
1. கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
2. பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்
3. கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்

YENATHU ULLAM YARUKU LYRICS


எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்
என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே – இயேசையா
1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது
2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது
3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே

YESU KRISTU EN JEEVAN LYRICS


இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்


1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள் நான் வேர்கொண்டேன்
அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை


2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே


3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே


4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவமன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

YESUVAI NAMBINOR MANDATHILLAI LYRICS


1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்
2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்
3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்
4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே
5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே
6. அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே