அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே
பொன்னான வாழ்வை புடமிட்டதாலே
பூவாக மணம் வீச வைத்தோம்
புதிரான வாழ்வே எதிரானதாலே
பொலிவாக செய்வாய் ஆண்டவரே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே
அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம்
திரியாக கருகி மெழுகாக உருகி
பலியாக வைத்தோம் ஆண்டவனே
ஒளியாக மாற்றும் தூயவனே
No comments:
Post a Comment