Tuesday, November 12, 2019

ANBODU VANDHOM KANIKKAI THANTHOM



அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் 
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம் 
பலியோடு சேர்ப்பாய் தூயவனே 

பொன்னான வாழ்வை புடமிட்டதாலே 
பூவாக மணம் வீச வைத்தோம் 
புதிரான வாழ்வே எதிரானதாலே 
பொலிவாக செய்வாய் ஆண்டவரே - உம் 
அருளோடு அணைப்பாய் மாபரனே 

அருளான வாழ்வு இருளானதாலே 
திரியாக எமை ஏற்றி வைத்தோம் 
திரியாக கருகி மெழுகாக உருகி 
பலியாக வைத்தோம் ஆண்டவனே 

ஒளியாக மாற்றும் தூயவனே 

No comments: