Wednesday, May 16, 2018

SARUVA LOGATHIBA NAMASKARAM LYRICS


1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்
2. திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
பரம சற்குருவே, நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
4. முத்தொழிலோனே, நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்

THOONGAMAL JEBIKKUM VARAM LYRICS


தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான்
1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும்
3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்
4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
5. மோசேயை போல மலைமேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும்

UMMAI POLA APPA ILLAI LYRICS


உம்மை போல அப்பா இல்ல
உம்மை போல அம்மா இல்ல
உம்மை போல நண்பன் இல்ல
உம்மை போல யாரும் இல்ல – 2
இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மை போல யாரும் இல்லப்பா – 2
1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2
திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2
2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2
அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2
3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2
உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2

UMMAI NAMBI UNTHAN PAATHAM LYRICS


உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2
1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்

UMMAI PIRINTHU VAAZHA MUDIYATHAIYAA


உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)
1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

UMMAI PADAMAL YARAI NAAN LYRICS


உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா
1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2
2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2
3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2
4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்

YELLA MAGIMAIKUM PATHIRARAY LYRICS

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே
1. செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே
2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
என் வாழ்கையில் அசைவாடுமே
3. ஆசரிப்பு கூடாரத்தில்
அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே
3. பவுலும் சீவாவும் பாடும் போது
சிறைச் சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே

KARTHAR THAMAE KARTHAR THAMAE LYRICS

Karthar Thamae Karthar Thamae
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
நம் பட்சத்தில் நிற்பதால்
சத்ரு வெள்ளம்போல் வந்தாலும்
பத்திரமாய் நிற்கின்றோம்
நம்மை நம்பி, பிறரை நம்பி
நாம் நடந்தால் விம்முவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம்
1. மனித வாழ்க்கை கண்ணீர் என்பார்
உலகில் அநேகர் உண்டல்லோ
கர்த்தரின் துணை அறியார் கூறும்
மன வருத்தம் அதுவல்லோ
துன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள்
எதுவென்றாலும் வெல்லுவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்
2. இம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர்
இனிமேலும் உன்னை நடத்தாரோ
கர்த்தரில் நீ மனம் பதித்து
நிதம் நடந்தால் நடத்தாரோ
மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள்
வியாதி, தோல்வி வந்தாலும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்
3. என் உள்ளத்தில் என் உள்ளத்தில்
வாசம் செய்யும் கர்த்தாவே
இயேசுவில் நான் நேசம் கொண்டு
வளரச் செய்யும் கர்த்தாவே
கறைகள் இன்றி, குறைகள் இன்றி
உலகை கடக்கச் செய்திடும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்

KONDADUVOM NAAM KONDADUVOM LYRICS


கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசுவை – 4
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4
சந்தோஷமே இனி சந்தோஷமே
சந்தோஷம் என் வாழ்விலே -4 -அல்லேலூயா
துக்கமில்லை இனி துயரமில்லை
ஆனந்தம் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா
வியாதியில்லை இனி வருத்தமில்லை
ஆரோக்கியம் என் வாழ்விலே-4 -அல்லேலூயா
மகிழ்ச்சியே ஓ மகிழ்ச்சியே
மகிழ்ச்சி என் வாழ்விலே – 4 – அல்லேலூயா
அழுகையில்லை இனி அலரில்லை
ஆறுதல் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா
கண்ணீரில்லை இனி கவலையில்லை
மகிழ்ச்சி என் வாழ்விலே – 4 – அல்லேலூயா

KUTHUHALAM KONDATTAME EN YESUVIN LYRICS


குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்திலே
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே
3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றிதந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா

KUYAVANAE UM KAIYIL LYRICS


குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் -2
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே -2
1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் -2
2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே -2
3. உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே -2
4. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே -2

MAARIDUM ELLAM MAARIDUM LYRICS


மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)
1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே
2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே
3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே
4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே துக்கம் மாறுதே
என் இயேசுவாலே துக்கம் மாறுதே
5. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
6. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
7. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
8. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

KRISHTHORE ELLORUM KALIKOORNTHU PAADI LYRICS


1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை
2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை
3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை
4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

KOODUM ELLAM KOODUM LYRICS


கூடும் எல்லாம் கூடும்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
கூடும் எல்லாம் கூடும்
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை 
அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை
இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும் 
1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது 
அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் நிலைமையை மாற்ற
அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் துக்கத்தை போக்க } – 2 – கூடும் 
2. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது 
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
ஒன்றும் இல்லவே இல்லை
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை 
3. கடனா அதை அடைக்கக்கூடும்
கடினம் அதை முறிக்கக்கூடுமோ
வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடுமோ
கூடாதது ஒன்றுமில்லை 
சோர்வை தோற்றக்கூடும்
கண்ணீரை மாற்றக்கூடும்
பிரிவை சேர்க்கக்கூடும்
கூடாதது ஒன்றுமில்லை) – 2 – கடனா
– கூடும்

KIRUBAIYE UNNAI INNAL VARAIYUM LYRICS


கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே
2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே
3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே
4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே – கிருபையே
5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே – கிருபையே

ISRAVELIN DEVANE ENGAL LYRICS

இஸ்ரவேலின் தேவனே எங்கள்
ஈசாக்கின் தேவனே
ஆபிரகாமின் தேவனே எங்கள்
ஆருயிர் நண்பனே
1. உளையான சேற்றினின்று
என்னை விடுவித்த தேவனே
கன்மலைமேல் நிறுத்தி என்னை
உயர்த்திய தேவனே – இஸ்ரவேலின்
2. என்னை பிழைக்க வைத்தீர்
உந்தன் சாட்சியாய் மாற்றினீர்
கவலையிலும் கண்ணீரிலும் (எந்தன்)
உதவின எபிநேசரே – இஸ்ரவேலின்
3. புதுவாழ்வு அளித்தவரே
புதிய பெலனால் நிரப்பிடுமே
உயிருள்ள நாட்களெல்லாம் (எந்தன்)
உயர்த்தியே பாடுவேன் – இஸ்ரவேலின்

ENGAL DEVAN VALLAVARE LYRICS


எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
1. தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்
2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
3. அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

THAVITHAI POLA NADANAMADI LYRICS


தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தாப்பேன்
5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

APPA UMMAI NESIKKIREN LYRICS


அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா
2. பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா
3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேகர் நீர்தானையா – ஐயா
4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா
5. அனுதின உணவு நீர்தானைய -என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு
6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா
7. ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்

APPA UMMAI AARATHIPEN LYRICS


அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
அப்பா உம்மை ஆராதிப்பேன் – 2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2
உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2
உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2
கல்லு மண்ணு இல்ல – 2
உண்மை தெய்வம் நீங்க
உம்மைத்தானே நாங்க
ஆராதிக்க வந்தோம் – 2
என்னை காண்கிற – 2
தெய்வம் நீங்க தான்
நீங்க இல்லாம வாழ முடியாது – 2
சர்வ வல்ல தெய்வமே -2
உம்மை போல யாரும்
இங்கு இல்லப்பா எங்கும்
இல்லப்பா – 2