Sunday, October 27, 2019

PARADESIYAGA NAAM VAALUM ULAGIL

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்
சொந்தமென்று ஒன்றும் இல்லையே
நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை
அந்நியராய் செல்வோம்

கூடாரவாசிகள் நாம் - இங்கே கூடாரவாசிகள் நாம்
நித்திய நகரம் நோக்கியே செல்லும்
நித்தியவாசிகள் நாம் - அங்கே நிரந்தரவாசிகள் நாம்

2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்
நம்மோடு வருவதில்லை
நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்
நம்மை விட்டு ஓடிவிடும்
- கூடாரவாசிகள் நாம் - இங்கே

3. இளமையும் மாயை அழகும் மாயை
பெயர் புகழும் மாயை
அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்
இயேசுவை பின் தொடர்வோம்
- கூடாரவாசிகள் நாம் - இங்கே

4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
வரும்வேளை நாம் அறியோம்
பரலோக சிந்தை என்றும் மாறாமல்
பாடியே பயணம் செய்வோம்
- கூடாரவாசிகள் நாம் - இங்கே

5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம்
இயேசுவை கண்முன் வைப்போம்
மறுகரை சேரும் நாள் வரும் வரையில்
மங்காமல் ஜொலித்திடுவோம்

AZHAGANA YESUVE ARADHIPPEN

அழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே
உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே
உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன்
உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன்

உலகம் தருமா உம் அன்பைப் போலவே
எதுவும் தருமா உம் அன்பு தரும் இன்ப சந்தோஷம்
உம் சிலுவையின் மகிமை என் மனதுக்கு இனிமை
உம் சிலுவையின் பெருமை என் மனதுக்கு வலிமை

உன் நாமம் பாடப் பாட மனம்
கோயிலாக உணர்ந்தேன் சந்தோஷமாய்
உன் வேதம் தேட தேட நித்தம்
வாழ்வின் பாதை அறிந்தேன் கொண்டாட்டமாய்
உம் பார்வை நாடி நாடி அலைந்தேன்
என் நேசர் நீர் தானே
உம் பாதை போக போக உணர்ந்தேன்
என் பாதை நீர் தானே-அழகான

உம்மோடு பேச பேச அருள் ஜீவ ஊற்றை
அறிந்தேன் அற்புதமாய்
உம் வார்த்தை கேட்க கேட்க இருள் ஓடி
போக உணர்ந்தேன் நித்தியமாய்
உம் பாதம் தேடி தேடி அமர்வேன்
என் ஜீவன் நீர் தானே
உம் நேசம் வாஞ்சையோடு துதிப்பேன்
தெய்வீகம் நீர் தானே - அழகான

UYIRANAVARE UMMAI AARADHIKKIROM

உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம்
உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம்-4

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3

முடியாத காரியத்தை முடிக்க செய்தீர்
முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே-2
உம் பாதம் ஒன்றே போதும்
என் வழிகள் நேர்த்தியாகும்-2

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3

விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே
வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே-2
வழுவாமல் காத்தீரய்யா
விழுந்து பணிந்திடுவேன்-2

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3-உயிரானவரே

KARTHAR EN SAGAYAR

நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் 
நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காமலே போகும்-2

மந்திரமோ சூனியமோ
சர்ப்பங்களோ தேள்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
நான் எரிந்து கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்-2

யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
முடித்திடுவாரே
நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
இயேசுவின் நாமத்திலே-2

தடைகளோ தாமதமோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)-நான் பயப்படும்

NAAN BAYAPPADUM NAALILE

நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் 
நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காமலே போகும்-2

மந்திரமோ சூனியமோ
சர்ப்பங்களோ தேள்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
நான் எரிந்து கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்-2

யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
முடித்திடுவாரே
நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
இயேசுவின் நாமத்திலே-2

தடைகளோ தாமதமோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)-நான் பயப்படும்

KAIVIDATHIRUPPAR ENN VALVIN

கைவிடாதிருப்பார்
என் வாழ்வின் பாதையிலே-2
கடின பாதையிலே உடன் இருந்து
எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர்

1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2
முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்
வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார்

2. அக்கினியில் நான் நடந்தாலும்
வெந்து போகாமல் பாதுகாப்பார்-2
பொன்னை போல என்னை
புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2-கைவிடாதிருப்பார்

VELLAM POLA THUMBAM VANDHUM

வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன் 
எந்தன் இயேசு என்னோடு

நானாக நான் வந்தேனே 
என்னையே தந்தேனே 
தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே

1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
வெறுப்பாக யாரும் என்னை
தள்ளிவிட்டாலும் 
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே

2 நான் போட்ட திட்டங்களும்
வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி
சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக்
காத்துக் கொண்டீரே

NEER ENNAI THANGUVATHAL

நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்-2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

2.கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்-2
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

3.இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை-2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

EDHIRPAARTHA MUDIVAI THARUBAVARAE

{எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே} x2
{யஹோவாயிரே யஹோவாயிரே
எல்லாமே செய்து முடிப்பீர்} x2
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே

{பெலத்தால் செய்ய முடியாதையா
பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா} x2
{பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லா
உம் ஆவியல் செய்து முடிப்பீர்} x2
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே

என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியம் செய்து முடிப்பீர்
சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்
எவ்வழியாய் செய்து முடிப்பீர்
{எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே} x2
{யஹோவாயிரே யஹோவாயிரே
எல்லாமே செய்து முடிப்பீர்} x2

ENN SAMADHANATHIN KAARANARE

என் சமாதானத்தின் காரணரே
யெகோவா ஷாலோம் நீரே-2
பயமின்றி வாழவைப்பீர்
என் பகைஞரை விலக்கிடுவீர்-2

ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

உமது செய்கைகளால்
என்னை மகிழ்ச்சியாக்கினீரே-2
உமது கரத்தின் கிரியைகளால்
ஆனந்த சத்தமிடுவேன்-2

ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

எந்தன் பெலவீனத்தில்
உம் பெலன் தாங்கிடுதே-2
நீரே என் பரிகாரி
என் வாழ்க்கையின் அதிகாரி-2-என் சமாதானத்தின்

ENNAI URUMATRA NEER EN LYRICS

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ -2

உம் சித்தம் மறந்தேன்
உம் சத்தம் வெறுத்தேன்
உம்மையே பிரிந்தேன்
என்னை ஏன் தேடி வந்தீர்-2

மாசில்லா நீரே மகிமையை தந்து
மண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2

என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ