தலைவா உன்னை வணங்க - என்
தலை மேல் கரம் குவித்தேன்
வரமே உன்னை கேட்க - நான்
சிரமே தாழ் பணிந்தேன்
அகல் போல் எரியும் உன் அன்பு
அது பகல் போல் மணம் பரவும்
நிலையாய் உன்னை நினைத்தால் - நான்
மலையாய் உயர்வடைவேன்
நீர்போல் தூய்மையையும் - என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் - என்னை
சீக்கிரம் தூக்கிவிடும்
No comments:
Post a Comment