Thursday, July 28, 2016

Magimai Matchimai Nirainthavare

மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

4. நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

5. அற்புதம் தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே!
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

MARAVAR YESU MARAVAR

மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின இயேசு மறவார்

அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்
மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்

தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கி நடத்திட மறவார்
எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்

வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்
வானமும் பூமியும் நிலைமாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார்

MANNAVA MEETKA VANTHA JOTHIYE

மன்னவா மீட்க வந்த ஜோதியே
எனக்காய் மரித்த நாயகா
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
மன்னவா மீட்க வந்த ஜோதியே

1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
செல்லும் தேவா செல்லும் தேவா

2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலுமே நான் பயப்படேனே
தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா

3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
சேரும் தேவா சேரும் தேவா

Maaridum ellaam maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே

4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே துக்கம் மாறுதே
என் இயேசுவாலே துக்கம் மாறுதே

5. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே

6. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே

7. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே

8. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே

மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

MULANGALIL NINDRU JEBIKKA AASAI

முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
முழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசை
முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசை
எனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை

1. கவலைகள் யாவும் மறந்திட ஆசை
கர்த்தரின் கருணையில் களிகூர ஆசை
பாவத்தை விட்டுவிட ஆசை ஆ....
சிலுவையின் நிழலில் வாழ ஆசை
ஆசை ஆசை ஆசை - எனக்கு
ஆசை ஆசை ஆசை

2. புதுப் புது பாடல்கள் பாடிட ஆசை
புதுப் புது தரிசனம் கண்டிட ஆசை
உம் சத்தம் கேட்க ஆசை ஆ....
தேவனே உம்மோடு பேச ஆசை
ஆசை ஆசை ஆசை - எனக்கு
ஆசை ஆசை ஆசை

3. அபிஷேக மழையில் நனைந்திட ஆசை
அந்நிய பாஷையில் துதித்திட ஆசை
உம் பாதையில் நடக்க ஆசை ஆ....
உம்மோடு சேர்ந்து வாழ ஆசை
ஆசை ஆசை ஆசை - எனக்கு
ஆசை ஆசை ஆசை

MESSIAH YESU RAJA

மேசியா இயேசு ராஜா
அவர் மீண்டும் வருகிறார்
எந்தன் ஆவல் தீர்க்க
அவர் சீக்கிரம் வருகிறார்
அவர் முகமே நான் கண்டிடுவேன்
அவரோடு நானும் சென்றிடுவேன்
மகிமை மகிமை அந்த நாள் மகிமை

1. தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
சந்தோஷமாகவே மாறியே போகும்
தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
மகிமையாய் அன்று மாறிடுமே
இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
மகிமைக்கு ஈடாய் ஆகுமோ

2. இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
இனியும் தாமதம் செய்யாரே அவர்
சொன்னபடியே வந்திடுவார்
அந்த நாளில் அவரை கண்டு நானும்
ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்

3. எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
கண்டு ஆயிரம் முத்தங்களிடனும்
சிலுவை சுமந்து நடந்த பாதம்
விழுந்து நன்றி சொல்லிடணும்
இந்த தியாகம் செய்த அன்பு முகமே
காண ஏங்குகின்றேன்

JODHIGALE ELLORUM KARTHARAI

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே

1. இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்

3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்

4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட

5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

JEBAM KETEERAIYA JEYAM

1. ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

2. கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா --- புகழ்

3. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா --- புகழ்

4. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே --- புகழ்

ABISHEGA NATHA ANAL MOOTUM

பல்லவி

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

சரணங்கள்

1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

AZHAGANAVAR ARUMAIANAVAR INIMAI

பல்லவி

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்
ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர்
அவ‌ர் இயேசு இயேசு இயேசு

சரணங்கள்

1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா
என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்
இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்
என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே

2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்
என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா
என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே

3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்
பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா
என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்

ADHIKALAYIL UM THIRUMUGAM

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூய பலியாய் - இந்த
உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்