Monday, June 18, 2018

NAMATHU YESU KRISTHUVIN LYRICS


1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்
பல்லவி
தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்
2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் — தேவ
3. பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ
4. பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் — தேவ
5. நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் — தேவ
6. பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் — தேவ

MAGILNTHU KALIKURUNGAL MAGILNTHU LYRICS


மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்
1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்
2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்
3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

NAAN YENGA PONAALUM LYRICS


நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க கிருபைதான் என்னை சூழுது
அன்புதான் அன்புதான் அன்புதான்
கிருபைதான் கிருபைதான் கிருபைதான்
1. உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
எங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பா
இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்
உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2
2. என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்
சுமந்துக்கொண்ட இயேசுராஜாவே
உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
எனக்கு நிரந்தர சமாதானமே
என் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர்
நீர் ஒருவர் தானே இயேசுராஜாவே
உம்சித்தம் என் உள்ளத்தில்
ஆசையாய் எழும்பட்டுமையா
Naan Yenga Ponaalum
Unga Ninaipuladhan Vazhven
Naan Yena Seidhalum
Unga Ninaipuladhan Seiven
Unga Anbudhan Yenna IIlukkuthu
Unga Kirubaidhan Yennai Suludhu – 2X
Anbuthan Anbuthan Anbuthan
Kirubaithan Kirubaithan Kirubaithan
1. Unga Samugathirku Odivanthonpa
Ummai Araathikae Thuthika Vandoenpa
Unga Samugathirku Odivanthonpa
Yengae Bhaarathai Sollavanthonpa
Indha Oru Idamdhan Yen Arudhal
Unga Vaarthadhaan Yen Nambikkai – 2X
2. Yen Kavalai Kanneer Vedhanai Yellam
Sumandhukonda Yesurajave-2x
Ummodu Enaithdhu Vazhdhaal Podhum
Enakku Niranthara Samadhanamae
Yen Kookuralin Jebathaiketpavar
Neer Oruvar Thane Yesurajave-2x
Umsitham Yen Ullathil
Aasaiyaai Yelumbattumaiya

PADUVOM NAM DEVANAI LYRICS


பாடுவோம் நம் தேவனை
புது பாடல் பாடியே
அவர் நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்
1. சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே
2. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
என்றும் உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலை தோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது
3. அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே
Paaduvoam nam dhaevanai
Pudhu paadal paadiyae
Avar nallavar nanmai seibavar
Sarvavallavar avar adhisayamaanavar
1. Sagala janamae kaikotti kartharai
Kembeeramaai paaduvoam
Suramandalam maelathaalangal
Muzhangiyae thuthithiduvoam
Thaazhvil nammai ninaithaarae
Paer solliyae azhaithaarae
2. Karthar nallavar avar kirubai
Endrum ulladhenrae solluvoam
Avar kirubai maaraadhadhu
Endrendrum nilaiyaanadhu
Kaalai dhoarum pudhidhaanadhu
Nammai vittu vilagaadhadhu
3. Appaa pidhaavae endrae azhaikkum
Baakkiyam koduthaarae avar pillaiyaai naam maarida
Kirupaiyum pozhinthaarea
Paavangalai mannithaarae
Parisuthamaai maatrinaarae

THADUKKI VIZHUNTHORA THANGUGIRIR LYRICS


தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை


1. போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே
உம்நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே


2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர்


3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்


4. அன்பு கூறும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்


5. உம் அரசின் மகிமை, மாட்சிதனை
அறிவித்து மகிழ்ந்திடுவேன்
உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
தியானித்து துதித்திடுவேன்

SORVANA AAVIYAI NEEKUM LYRICS


1. சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
2. ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
3. வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
4. இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர் – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
5. காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

UMMAI PUGALINTHU PAADUVATHU NALLATHU LYRICS


உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது


1. பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது – 2


2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைத்து விசாரித்து
நடத்த நான் எம்மாத்திரமையா


3. வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்


4. அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் சொன்னீர்

UNGALAPATHI THANAE PAESIKITTU IRUKKOM LYRICS


உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க
வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க
வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க
வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்
என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க
என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க
எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க
எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க
என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க
என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க –
எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க
எங்க எல்லாருக்காகவும் உயிரையே கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல
Ungalapathi Thanae paesikittu irukkom – unga
Vasanam mattum thaanae vaasichittu irukkom – unga
Vallamai pathi thaanae paadikittu irukkom – unga
Varugaikkaaga thaanae kaathukittu kedakkom 
Endrum maaraadha unga anba paata paaduvonga
Endrum theeraadha unga thayava yettil ezhudhuvonga
Enga kartharae unga kiruba kavidhaiya solluvonga
Enga vaalnaal muzhuvadhum unga samugathil
Kondaatam kondaatamga
Endrum neengaadha unga peruma paesikittu povonga
Endrum mangadha unga magimai mechikittu irupponga
Enga ayyavae unga azhaga annaadam alapponga
Enga ellaarukkaagavum uyirayae kodutheenga
Ungalapol yaarumilla

UNNATHATHIN AAVIYAI UNTHAN BAKTHAR LYRICS


உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழை போல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும்
எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்
2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல்மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு
வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

YESU NALLAVAR YESU VALLAVAR LYRICS


இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர்
குருடரின் கண்களை திறந்தவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறந்தவர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Yaesu nallavar yaesu nallavar
Endrendrum maaraadhavar – avar
endrendrum maaraadhavar
Kurudarin kangalai thirandhavar
Avar nallavar nallavarae
Sevidarin sevigalai thirandhavar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirubai endrumulladhae
Viyaadhiyil vidudhalai tharubavar
Avar nallavar nallavarae
Paavathai mannikkum parisuthar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirubai endrumulladhae
Thunbathil aarudhal alippavar
Avar nallavar nallavarae
Nam baarangal yaavaiyum neekuvaar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirubai endrumulladhae

YAAKOBA POLA NAAN PORADUVEN LYRICS

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
நான் விட மாட்டேன்
1.  அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்
2. கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா
3. தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

VAALIBAM UNNAI IZHUKUDHO LYRICS


வாலிபம் உன்னை இழுக்குதோ
வானத்தைத் தொடத் துடிக்குதோ
பாவங்கள் கண்ணை மறைக்குதோ
கைகள் செய்ய துடிக்கின்றதோ
உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)
வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)
உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு
வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

VALLAMAI THEVAI DEVA LYRICS


வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்திடும்
2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும்
3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்

VAAZHGA VAAZHGA BHARATHA DESAM LYRICS


வாழ்க வாழ்க பாரத தேசம்
வாழ்க வாழ்க பாரத தேசம் – (2)
1. கட்சி கொடிகள் பல பல வகையாம்
தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)
பாரத தேசம் சுதந்தர தேசம்
எத்தனை சலுகை! எத்தனை உரிமை!
வாழ்க வாழ்க பாரத தேசம் – 2
2. நாவின் மொழிகள் பல பல உண்டு
உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)
அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே
வாழ்க வாழ்க பாரத தேசம் – 2
3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
அனைத்து இந்தியர் சமமென வேண்டும் – (2)
ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்
வாழ்க வாழ்க பாரத தேசம் – 2
4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் – (2)
அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் – 2
5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் – (2)
கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் – 2
6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் – (2)
சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் – 2
7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் – (2)
அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே
வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

UMMAI NAADI THEYEDUM MANITHAR LYRICS


உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே
துதியும் , கனமும், தூயோனே உமக்கே


1. ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறுவாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்


2. என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான்
என்சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்


3. உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு


4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்

URUGAADHO NENJAM NEGILADHO LYRICS


உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா (2)
கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
கலங்கியே கரைந்திடுமே (2)
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ
வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
வார்த்தை மாறிடாதே (2)
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
வாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ
என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்திடுவேன் (2)
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
உம் பாதம் சரணடைவேன் – உருகாதோ

URUGATHO NENJAM AVAR THANE LYRICS


உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு
1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

UYIRODU EZHUNTHA YESUVE LYRICS


உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
அல்லேலுயா 4X
1. மரித்து போன அந்த லாசாரு
அன்று தேடியே இயேசு வந்தீரே
உங்கள் வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது
2. சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்து போனீரே
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே
Uyiroadu ezhundha yaesuvae
Naan vaazhuvaen umakkaagavae
Neer oruvarae aandavar
Neer oruvarae ratchagar
Neer sarva vallavarae
Ennai thookki thookki edutheerae
Neer samaadhaana kaaranarae
Hallelujah 4 X 
1. Marithu poana andha laasaaru
Andru thaediyae yaesu vandheerae
Ungal vaayin vaarthaiyaal
Angu jeevan vanthadhu
2. Siluvaiyin andha poarilae
Yaesu neerae marithu poaneerae
Aanaal uyiroadu ezhundheerae
antha edhiriyai jeyitheerae

SOLLAL AGUMA ITHAI SONNAL LYRICS


சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா
1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன் 
2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்

PORUTKAL MELAE KANNU POCHINA LYRICS


பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள் 
1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே

NANDRIYAL PADIDUVOM NALLAVAR YESU LYRICS


நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே
1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய்
2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க
3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மாறித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்
4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்
5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனையார்களிப்பீர்
6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே
Nandriyaal paadiduvoam
Nallavar yaesu nalgiya ellaa
Nanmaigalai ninaithae
1. Sengadal thanai naduvaai piritha
Engal dhaevanin karamae
Thaangiyae innaal varaiyum
Dhayavaai maa dhayavaai
2. Uyirpithae uyarthinaar unnadham varai
Udan sudhandhiraraai irukka
Kirubaiyin magaa dhaanamadhu varung
Kaalangalil vilanga
3. Jeevanai thiyaagamaai vaitha palar kadum
Saevaiyil maarithaar
Saerndhu vandhu saevai purindhu
Soarndhidaadhu nirpoam
4. Mithrukkalaana palar nandriyizhandhae
Sathrukkalaayinaarae
Sathiyathai saarndhu dhaeva
Sitham seidhiduvaom
5. Azhaikkapattoarea neer unnadha azhaippinai
Arindhae vandhiduveer
Alavillaa thiru aakkamithanai
Avanaiyaarkalippeer
6. Seeyoanai panindhumea kiristhaesu raajanaai
Seekkiram varuvaar
Sindhai vaippoam sandhikkavae
Seeyoanin raajanaiyae

KARTHAVIN JANAME KAITHALAMUDANE LYRICS


கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
பல்லவி
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்
1. பாவத்தின் சுமையகற்றி — கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்
2. நீதியின் பாதையிலே — அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்
3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின்

KARTHAR THUYAR DHONIYAI LYRICS


கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்
1. மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்
2. துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே – கர்த்தர்
3. பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்
4. திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்
5. பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்
6. இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

ETHUVUM ENNAI SETHA PADUTHATHU LYRICS


எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா -2
1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் -2
2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் -2
3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் -2
4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2
5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2

ELLAME MUDINTHATHU ENDRU ENNAI LYRICS


எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
Ellaamae mudindhadhendru
Ennai paarthu igazhndhanar
Iniyendrum ezhumbuvadhillai
Endru solli nagaithanar (2)
Aanaalum neenga ennai
Kandavidham periyadhu
En uyarvin perumaiyellaam
Um oruvarukuriyadhae (2)
Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)
Udaikkappatta paathiramaanaen
Ubayoaga matrirundhaen
Ondrukkum udhavuvadhillai
Endru solli odhukkappattaen (2)
Kuyavanae ennai vanaindhadhu
Vizhundhu poana idangalillellaam
En thalaiyai uyarthiyadhae (2)
Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)

EN VIZHIYE YESUVAI NEE LYRICS


என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு (2)
1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு – 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு
இயேசிடம் உனை வழங்கு
2. என் கரமே இயேசுவின் மொழி எழுது – 2
என் காதே இயேசுவின் மொழி கேளு
இயேசுவின் மொழி கேளு
3. என் காலே இயேசுவின் வழி செல்லு – 2
என் உயிரே இயேசுவின் பதம் நாடு
இயேசுவின் பதம் நாடு

ELLAM EN YESUVE ELLAM LYRICS


எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
எனக்கென்றுமே
He is my everything He is my all
He is my everything Both great and small
He makes my life complete Makes everything new
He is my everything Now how about you?
Ellam En Yaesuvae Ellam Avarae
Sirithum Perithayinum Ellam Avarae
Puthithai En Jeeviyam Marrukinrar
Enakkellam Yaesuvae
Enakkenrumae

DEVA UNDHAN SAMUGAM THELITHENILUM LYRICS


தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே
உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்
தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே
1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது – உந்தன்
2. நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே – உந்தன்
Deva Undhan Samugam
Telithenilum madhurame
untan samugamae enadhu viruppam
adhil valvadhai virumpuven
untan samugamae endhan pugalidam
adhai endrum vanjikkiren
Deva endrum undhan samugam vendume
Undhan samugam en vaanjayae
untan samugam en menmaiyae
1. Ayiram nalai parkkilum
adhil oru nal nalladhu
en anandham ilaipparudhal
adhil than ulladhu – undhan
2. Nerangal kadakkum podhilum
adhil veruppondrum illaiye
kodiyai pongal kidaikkinum
adharkeedonrum illaiye – undhan

MEGAME MAGIMAYIN MEGAME YESUVE LYRICS


மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே


1. ஏகமாய் துதிக்கும் போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே


2. வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்


3. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே


4. வாழ்க்கைப் பயணத்திலே
முனசென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே