Monday, November 18, 2019

UNNATHATHIN AAVIYAI UNTHAN

உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே

பெந்தெகொஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும்
எங்களை தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்

ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு
வாழவும் ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

UNNAI ATHISAYAM KANA SEIVEN

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே

வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே

ARUL MAARI YENGUMAAGA

அருள் மாரி எங்குமாக

1. அருள் மாரி எங்குமாக
பெய்ய, அடியேனையும்
கர்த்தரே, நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்;
என்னையும், என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.

2. என் பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்;
திக்கில்லா இவ்வேழையேனை
நீர் அணைத்துக் காருமேன்;
என்னையும், என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்.

3. இயேசுவே, நீர் கைவிடாமல் 
என்னைச் சேர்த்து ரட்சியும்;
ரத்தத்தாலே மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்;
என்னையும், என்னையும்
சுத்தமாக்கியருளும்.

4. தூய ஆவீ, கைவிடாமல்
என்னை ஆட்கொண்டருளும்;
பாதை காட்டிக் கேடில்லாமல்
என்றும் காத்துத் தேற்றிடும்;
என்னையும், என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்.

5. மாறா சுத்த தெய்வ அன்பும்,
மீட்பர் தூய ரத்தமும்,
தெய்வ ஆவி சக்திதானும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;
என்னிலும், என்னிலும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.

KARTHARAI THUTHIYUNGAL AVAR ENDRUM

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்,
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றிப் புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் (2)

பகலை ஆள்வதற்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்

செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார்

வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக்கொண்டார்

தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்.

KARTHAVE DEVARGALIL UMAKKOPPANAVAR

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் 
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ? 

செங்கடலை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை நடத்தி சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் 

தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் 
ஜனங்களை போஷித்தீரே
உம்மைப்போல் யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட 

கன்மலையை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம் இன்றும்
அற்புதம் செய்திடுவீர்

DEVANIN NAMATHIRKE THUTHI

தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே


1. தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே


2. தேவனின் நாமம் பலத்த கோட்டை
நீதிமான் வாழ்வில் சுகம் அங்கே


3. பரிசுத்தர் அவர் நாமம் – 3
உன்னதரே


4. இயேசு அவர் நாமம் – 3
உன்னதரே

DEVANEA NEER DHOORAMAAI IRUPADHU

தேவனே நீர் தூரமாய் இருப்பது போல
இன்று தெரிகிறதே
விசுவாசம் என்னில் உள்ளது
ஆனாலும் எனக்கு ஜெபிக்க முடியவில்லையே

இனி என்ன சொல்வது
இனி யாரைக் கேட்பது
நீர் கிருபை அளித்ததால்

என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன் துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்

நான் பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையே
நான் பாடுவேன்

நீர் நடந்த பாதையில் என்னால் நடந்து செல்ல முடியவில்லையே
உம் கரம் பிடிக்க நினைக்கிறேன்
என் பாவங்கள் என் கண்முன் நிற்கிறதே
இனி என்ன சொல்வது
இனி யாரைக் கேட்பது
நீர் கிருபை அளித்ததால்

என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன் துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்

நான் பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையே
நான் பாடுவேன்

ADADA VELICHAM VANDHU IRUTTA

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே
புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே (x2)

நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே

புது கிருப வந்துட்டு GREAT ஆ
அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா (x2)
வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா
தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா

புது கிருப வந்துட்டு GREAT ஆ
தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ
நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர ப்புடிச்சிகோ
இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா

புது கிருப வந்துட்டு GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே

VIVAHAMANNADI PAVITRAMAINADI GA TELUGU LYRICS

వివాహమన్నది పవిత్రమైనది
ఘనుడైన దేవుడు ఏర్పరచినది

1. ఎముకలలో ఒక ఎముకగా దేహములో సగభాగముగా
నారిగా సహకారిగా స్త్రీని నిర్మించినాడు దేవుడు

2. ఒంటరిగ ఉండరాదని జంటగా ఉండ మేలని
శిరస్సుగా నిలవాలని పురుషుని నియమించినాడు దేవుడు

3. దేవునికి అతి ప్రియులుగా ఫలములతో వృద్ధి పొందగా
వేరుగానున్న వారిని ఒకటిగా ఇల చేసినాడు దేవుడు

ANBIN URUVILA SIRU MALALAI

அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே
மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரே
வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2

1.விண்ணை ஆளும் மன்னன் இயேசு
நம்மை மீட்க மண்ணில் வந்தார்
வான தூதர் செய்தி சொல்ல
இடையர்களும் கானம் பாட-2

ஜோதியாய் அங்கு தோன்ற
விண்ணவர் மகிழ்ந்து பாட-2

2.தந்தையான விந்தை தேவன்
தன் பிள்ளையை நமக்கு தந்தார்
பாவியான மனிதர்க்காக
பாவம் போக்க பாரில் வந்தார்-2

நட்சத்திரம் வானில் தோன்ற
இயேசு பிறப்பை நமக்கு சொல்ல-2

ENAKKAA ITHANA KIRUBAI

எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை-2
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே

உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை பாட வைத்ததே

பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
அறுவடையை துவக்கி வைத்தவரே

உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை பாட வைத்ததே

தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
அற்புதங்கள் செய்ய வைத்தவரே

எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை-2
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே

உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை தூக்கி சுமந்ததே
அல்லேலூயா உங்க கிருபை போதுமே

YESUVAI KONDAADUVEN AVAR SILUVAIYAI

ஏசுவை கொண்டாடுவேன்
அவர் சிலுவையை கொண்டாடுவேன்

மரிச்சாரே எனக்காகதான்
நான் வாழுறேன் அவரால தான்

மாஸ் மாஸ் சிலுவை தான் மாஸ்
இயேசு இயேசு என் உயிர் மூச்சு

சாத்தான் கையில இருந்த என்னை
ரத்தம் சிந்தி மீட்டாரு
பாவங்களை சாபங்களை சுமந்தாரு
எல்லாத்தையும் முடிச்சாரு
சிலுவையிலே முடிச்சாரு
பாவத்தை வேரோட அழிச்சாரே
மாஸ் மாஸ் மாஸ் மாஸ்

சர்பங்களையும் தேள்களையும்
சாத்தானின் வல்லமையும்
மிதித்து போடா அதிகாரம் தந்தாரே
அவர் ஜீவன் எனக்குள்ளே
அவர் ஆவி எனக்குள்ள
எனக்குள்ள இருப்பதும் அவர் தானே
மாஸ் மாஸ் மாஸ் மாஸ்

இனி சாபம் இல்லை
வறுமை இல்லை
ரோகம் இல்லை
துக்கம் இல்லை
இயேசு ஜெயம் பெற்றாரே

VIZHI MOODIYUM NEERTHULI

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே...2
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே...2

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே

இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்
வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்
வனைந்தவர் உடைக்கல...
என்னையும் மறக்கல...
சீரமைப்பாரிவர் என்பதை நம்புவேன்

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே

உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே 
தாமதங்கள் வார்த்தை தரத்தை குறைப்பதில்லையே
சொன்னதை மறக்கல
கேட்டதை மறுக்கல
வார்த்தையின் ஆற்றலால்
எந்நிலை மாறுதே

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே...2

நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே
நான் போகும் பாதை புதியதே
இயேசுவின் சத்தம் தேற்றுதே....