Friday, June 1, 2018

UNGAL MEETHU KANGAL LYRICS


உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்
உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5
தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்
உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

PARISUTHAR KOOTAM NADUVIL LYRICS


பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ
1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீசப்பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ?
3.பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள்ளலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
4.துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்

NEER ENAKKU POTHUM LYRICS


நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)
1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)
2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

NAAN VALNTHALUM UMMODU THAAN LYRICS


நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
நான் மரித்தாலும் உம்மோடு தான்
1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன்
2. ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
3. உம்மைப் போல என்னை மாற்றுமையா
உமக்காகவே என்னைத் தந்தேனையா

KALANGINA NERANGALIL KAITHOOKI LYRICS


கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்
சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை

KARTHARAIYE THUTHIPPEN LYRICS


கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்


1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்


2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்


3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்


4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது


5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்

ENNAI AZHAITHAVAR NEER LYRICS

என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

1.  உந்தன் முகத்தின் வெளிச்சம்
எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே
இருள் நிறைந்த உலகமிதுவே
நீதி தேவன் எனக்கு அரனே (2)
முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்
முடிவு வரையும் நடத்திடுமே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

2. மாம்சமான எந்தன் மேல்
உம் ஆவியை ஊற்றுமே
உமக்காக எழும்பிட
நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

3. என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

KALAPPAIYIN MAEL KAIVAITHTHITAEN LYRICS


கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்
திரும்பி பார்கமாட்டேன்
முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்
இயேசு முன் செல்கிறார் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
1. எண்ணிமுடியா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்
சொல்லிமுடியா அதிசயத்தாலே
என்னை நடத்தினார் (2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..
2. துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்
வந்தால் எனக்கென்ன
துங்கவர் இயேசு துணையாய் இருக்க
ஜெயித்து வாழ்ந்திடுவேன் (2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..
3. சத்தியம் சொல்லி சாத்தானை வென்று
சபைகள் கட்டிடுவேன்
கிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் தேவ
சங்கங்கள் எழுப்பிடுவேன் (2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..
4. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திடுவார்
எல்-ஷடாய் தேவன் வலக்கரதாலே
எல்லாம் செய்திடுவார் (2)
நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

KODA KODI STHOTHIRAM LYRICS


கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்
2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே
3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்
4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்
5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்

MEGHANGAL NADUVE VAZHIPIRAKKUM LYRICS


1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்
2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

NENJE NEE KALANGUVATHENO LYRICS


நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
நெஞ்சே நீ தவிப்பதேனோ …
ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை 
1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
தூயவர் தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போது காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம் 
2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

POORANA ALAGULLAVARE EN YESUVE LYRICS

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்
2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்
3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்

SUMANTHU KAKUM YESUVIDAM LYRICS


சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
1. தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம்
2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே
3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

THEDI YESU VANTHAR LYRICS


தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்
1. கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
2. பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்
3. நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான்
4. எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை

THUTHITHU PAADIDUVOM THAVEETHAI LYRICS


துதித்து பாடிடுவோம் தாவீதை போல
நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)
1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து
2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து
3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

UM PRASANNATHINAL YENNAI LYRICS


உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
தூயரே தூயரே தூயரே தூயரே 2x
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
1. என் தேவனே உம் பிரசன்னம்
என் முன்பதாய் செல்லனுமே
தூயரே
2. நிறைவான உம் பிரசன்னம்
வரும்பொழுது
என் குறை எல்லம் ஒழியுமே
தூயரே
3. நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின்
நாமத்தினால்
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
தூயரே
வேண்டுமே இன்னும் வேண்டுமே
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே

UMMIL NAAN VALGIREN LYRICS


உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்


1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம்தானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்


2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை


3. இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம்நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்


4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனிதருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்


5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

UMMODU NAANUM UYIRODU KALANDHU LYRICS

உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்
இளைஞரே எழும்பிடு
இயேசுவை துதித்திடு
உலகத்தை கலக்குவோம்
ஓ..ஓ…ஓ…
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2
இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்
இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2
கிருபைமேல் கிருபையே பெருகுதே
கோடான கோடி இன்பமே
ஹெ ஹெ ஹெ
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2
உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
கரங்களை உயர்த்தி ஆராதிப்போம்
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

URAIVIDAMAI THERINTHU KONDU LYRICS


உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உல‌வுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக‌ ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இத‌ய‌த்திலே (2 கொரி 6:16)
அப்பா த‌க‌ப்ப‌னே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உய‌ர்த்துவேன்
1. நீதிக்கும் அநீதிக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் ஏது ?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கிய‌ம் ஏது ? (2 கொரி 6:14)
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டான‌தை, தொட‌மாட்டேன்
2. உல‌க‌ போக்கோடு உற‌வு என‌க்கில்லை
சாத்தான் செய‌ல்க‌ளோடு தொட‌ர்பு என‌க்கில்லை
3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவை
தெய்வ‌ ப‌ய‌த்துட‌ன் பூர‌ண‌ப்ப‌டுத்துவேன் (2 கொரி 7:1)
4. ப‌யன‌ற்ற‌ இருளின் செய‌ல்க‌ளி வெறுக்கிறேன் – அதை
செய்யும் ம‌னித‌ரை க‌டிந்து கொள்கிறேன் (எபே 5:11)
5. அந்நிய‌ நுக‌த்தோடு பிணைப்பு என‌க்கில்லை
அவிசுவாசிக‌ளின் ஐக்கிய‌ம் என‌க்கில்லை (2 கொரி 6:14)

VAIKARAIYIL UMAKKAGA VAZHIMEL LYRICS


வைகரையில் (காலை நேரம்) உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்


1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்


2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா


3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது


4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

VANANDIRA VALLVU ATHU LYRICS


வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2
1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2
2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2
3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2
4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே

VATHAI UNTHAN KOODARATHAI LYRICS


வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா 
1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்

VISUVASA KAPPAL ONDRU LYRICS


விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)
1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

YAAR ENNAI KAIVITTALUM LYRICS


யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்


1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்


2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே


3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்


4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே


5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே


6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

YAARIDAM SOLVEN YAARIDAM SOLVEN LYRICS

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்
1. உலகம் அழைக்கிறது – உம்
நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா
2. இச்சைகள் இழுக்கிறது – உம்
சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே 
3. இரட்சிப்பு விளையாட்டா – நம்
இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா

YESU ENAKKU JEEVAN THANTHAARE LYRICS


இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே(4)
துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)

1. சமாதானம் தந்தார் இயேசு ( 4)

2. புதுவாழ்வு தந்தார் இயேசு ( 4)

3. விடுதலை தந்தார் இயேசு ( 4)

4. புதுப் பாடல் தந்தார் இயேசு (4 )

5. அபிஷேகம் தந்தார் இயேசு (4 )

YESUVE EN DEIVAME LYRICS


இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (2)
1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனையா -2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
நீர் எனக்காக பலியானீர் -2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே
4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே – இயேசுவே
5. அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே