Wednesday, April 24, 2019

PARALOGA THANTHAIYE PARALOGA TAMIL LYRICS


பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே
பல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே 
பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)
ஒரு மனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)
அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா
மீன கேட்டா பாம்ப கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளை கொடுப்பானா
பொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது 
இம்மைக்கும் மறுமைக்கும்
பரம தகப்பன் நீர் தானே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)
பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே 
தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனை போல் சுமந்திடுவார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)
புள்ளுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்த தண்ணீரைன்டை நடத்திடுவரே
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது
தாழ்ச்சியென்பது வாழ்வினில் இல்லை 
நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடர செய்வார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

PAAREER GETHSAMANAE POONGAAVILEN TAMIL LYRICS

Parir Gethsemane
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்
2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்
3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்
4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்
5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்
6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்
Paareer gethsamanae poongaavilen naesaraiyae
Paaviyenakkaai vaendudhal
Seidhidum saththam dhoniththidudhae
1. Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae – Paareer
2. Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae – Paareer
3. Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae- Paareer
4. Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae – Paareer
5. Anbin arul mozhiyaal aarudhal alippavar
Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar – Paareer
6. Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen – Paareer

ANDAVAR ENAKAI YAAVAIYUM TAMIL LYRICS


ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா
1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்

AGILAMENGUM POATRUM TAMIL LYRICS

Agilamengum Poatrum
அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே 
ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே 
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே 
கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே 
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே 
கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே